நடிகையின் படத்தைப் பகிர்ந்து… “கிழிச்சுட்ட போ..” என கலெக்டர் கமெண்ட் போட்ட விவகாரத்தில்… அதிர்ச்சி திருப்பம்!

Published:

collector tweet1 - 2026

டிவிட்டர் ஹாக் செய்தவர் கைது. “கிழிச்சுட்ட போ!” என்றது கலெக்டர் அல்லவாம்!

ஒரு ஐஏஎஸ் அதிகாரி, மாவட்ட ஆட்சித் தலைமைப் பொறுப்பில் உள்ளவர் ஒரு நடிகை பதிவேற்றிய புகைப்படங்களைப் பார்த்து “கிழித்துவிட்டாய், போ!” என்று டுவீட் செய்தது வைரலாக மாறியது.

ஆனால் அந்த ட்வீட் நான் செய்யவில்லை என்று கலெக்டர் தெரிவித்தார். தன் டிவீட்டர் அக்கவுண்ட்டை யாரோ ஹாக் செய்துள்ளார்கள் என்றார். அது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். உண்மை என்னவென்று தற்போது தெளிவு கிடைத்து விட்டது.

collector tweet - 2026

நடிகை ரஷ்மிகா பிப்ரவரி பதினெட்டாம் தேதி போட்டோ ஷூட்டில் எடுத்த சில புகைப்படங்களை தன் டிவீட்டரில் போஸ்ட் செய்தார். அவற்றுக்கு ரசிகர்களிடம் இருந்து பலத்த காமெண்டுகள் வந்தன.

தெலங்காணா ஜகித்யால மாவட்ட ஆளுநர் ரவி பெயரில் உள்ள டிவிட்டர் அக்கவுண்டில் இருந்து ஒரு மாதிரியான காமெண்ட் வரவே நெட்டிசன்கள் பிய்த்து உதறி விட்டார்கள்.

ALSO READ:  ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஆனால் அவர் ஹாக் ஆனது என்று கூறிய பேச்சை யாரும் முதலில் நம்பவில்லை. போலீஸ் விசாரணையில் உண்மையாகவே அவர் அக்கவுண்ட் ஹாக் ஆகி உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

ஹாக் செய்தவரை அடையாளம் கண்டு கைது செய்தனர். அந்த மனிதரும் ஓர் உயரதிகாரியே என்பது அதிர்ச்சியளிக்கும் செய்தி. ஐபி அட்ரஸ் மூலம் போலீசார் அவரை கண்டறிந் தார்கள். அவர் ஜகித்யால மாவட்டத்தையே சேர்ந்த டைரக்டர் ஆஃப் இண்டஸ்ட்ரியல் ஜெனரல் மேனேஜர் சீனிவாஸ் என்று அடையாளம் கண்டார்கள். அவரை கைது செய்து ரிமாண்டுக்கு அனுப்பி வைத்தார்கள்.

அவர் 2018 டிசம்பரிலிருந்து அந்த டவிட்டரைப் பயன்படுத்துவதாக தெரிகிறது. ” அப்பாடா!” என்று மாவட்ட கலெக்டர் ரவி ஆசுவாசம் அடைந்தார்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img