ஒட்டுதுணி இல்லாம தலையணை சேலஞ்ச் மாதிரி… முதல்வருக்கு விஸ்கி சேலஞ்ச்!

Published:

payal rajput pillow challange - 2026

தெலங்காணா முதல்வர் கேசிஆருக்கு இயக்குனர் வர்மா விடுத்த விஸ்கி சாலஞ்ச்.

லாக்டௌன் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே அடங்கி உள்ளார்கள். சூட்டிங் இல்லாமல் எப்போதும் பிசியாக இருக்கும் சில செலிபிரடிகள் கூட வீட்டில் இருக்கிறார்கள். இவர்களுக்கு பொழுதுபோக்குக்காக ஒருவருக்கொருவர் காப்பி சேலஞ்ச் போன்று வினோதமான சவால்களை விட்டுக் கொள்கிறார்கள்.

100 பட ஹீரோயின் பாயல்ராஜபுத் ‘பில்லோ சேலஞ்ச்’ என்று ஒரு தவையணை மட்டுமே குறுக்கே வைத்துக்கொண்டு போட்டோ ஷூட் செய்து இளைஞர்களின் அறிவை போக்கடித்தார்.

telangana rao and varma - 2026

புதிதாக அர்ஜுன் ரெட்டி பட இயக்குனர் வங்க சந்தீப் ரெட்டி, வீட்டில் மனைவிகளுக்கு ஆண்கள் உதவி செய்ய வேண்டும் என்று இயக்குனர் ராஜமௌலிக்கு ஒரு சேலஞ்ச் விட்டார். அதை ஏற்று அவர் வீட்டை சுத்தம் செய்யும் வீடியோவை போஸ்ட் செய்தார்.

இப்போது விவாதங்களுக்கு பெயர் போன இயக்குனர் ராம்கோபால் வர்மா ஒரேடியாக தெலங்காணா முதல்வருக்கு வினோதமான சேலஞ்சை விடுத்துள்ளார். கேசிஆர் ஒரு கிளாஸ் விஸ்கியை டிவியில் அனைவருக்கும் தெரியும் படியாக குடிக்க வேண்டும் என்று சவால் செய்துள்ளார்.

ALSO READ:  ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

மது கிடைக்காமல் குடிமகன்கள் அவஸ்தைப்படும் இந்த நேரத்தில் அவர்கள் முன்பாக விஸ்கி குடித்து அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்க வேண்டும் என்று சேலஞ்ச் செய்துள்ளார். அந்த வீடியோவை பார்த்து கரோனா வைரஸ் பற்றி மக்கள் சிறிது நேரம் மறந்து மகிழ்ச்சியாக சிரித்து மகிழ்வார்கள் என்றார் வர்மா.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img