தமிழகத்தில் இன்றைய பாதிப்பு – 161; சென்னையில் மட்டும் 138..!

tamilnaducorona
tamilnaducorona
  • கொரோனா வைரஸ் பாதிப்பு!
  • இன்றைய பாதிப்பு: 161 (சென்னை- 138)
  • இன்று இல்லம் திரும்பியோர்: 48
  • தமிழகம் – 2323 (சென்னை 906)
  • தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2323 ஆக உயர்வு

தமிழகத்தில் இன்றைய கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை- 161; அவர்களில் சென்னையில் மட்டும் 138 பேருக்குக் கொரோனா உறுதி செய்யப் பட்டுள்ளது. இதனால் சென்னை தொடர்ந்து டேஞ்சர் ஸோன் ஆக இருக்கிறது.

தமிழகத்தில் வியாழக்கிழமை இன்று ஒரே நாளில் 161 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப் பட்டிருக்கிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,323 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உயிரிழப்பு எண்ணிக்கையும் 27 ஆக உள்ளது.

தமிழக சுகாதாரத்துறையின் சார்பில் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில்,

தமிழத்தில் இன்று மேலும் 161 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அடுத்து மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,323 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழப்பு இல்லை. எனவே உயிரிழப்பு இதுவரை 27 பேர் என்ற நிலையில் உள்ளது.

இன்று ஒரே நாளில் 48 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதனால் மொத்தம் 1258 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 1035 பேர் சிகிச்சையில் உள்ளனர். 31,375 பேர் வீட்டுக் கண்காணிப்பிலும், 40 பேர் அரசுக் கண்காணிப்பிலும் உள்ளனர். இன்று மட்டும் 9,787 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.

tn covid case apr 30
tn covid case apr 30

கொரோனா பாதிப்பு இல்லாத பகுதியாக நீலகிரி மாவட்டம் திகழ்கிறது. இதை அடுத்து அங்கே ஊரடங்கு தளர்வு வரும் மே மாதம் 3ஆம் தேதிக்குப் பிறகு வரும் என்று ஆட்சியர் அறிவித்திருக்கிறார்.

அதே நேரம், முழுவதுமாக ஊரடங்கை தளர்த்த முடியாது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி உடனான ஆலோசனைக்கூட்டம் நிறைவு பெற்ற பின்னர், ஐசிஎம்ஆர் துணை இயக்குனர் டாக்டர். பிரதீபாகவுர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். சில பகுதிகளில் ஊரடங்கை தளர்த்துவது பற்றி அரசு முடிவு செய்யும் என்றும், ஆனாலும், முழுவதுமாக ஊரடங்கை தளர்த்த முடியாது என்றும் தெரிவித்த அவர், தொடர்ந்து தீவிர கண்காணிப்புக்கு பிறகே அடுத்தகட்ட முடிவு எடுக்கப் படும் என்றார்.

முன்னதாக, படிப்படியாக தொழிற்சாலைகளைத் திறக்கலாம் என்று முதல்வர் கருத்து தெரிவித்திருந்தார் .

இதனிடையே சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப் பட்டுள்ளனர். ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப் பட்டுள்ளனர்.

சென்னையில் கொரோனா பரவல் வேகம் அதிகரித்துள்ளது. ஒரே அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 3 குடும்பங்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப் பட்டது.

சென்னை மண்ணடியில் ஒரே அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 3 குடும்பங்களைச் சேர்ந்த 12 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

மண்ணடியில் ஒரு தெருவில், ஒரே அடுக்குமாடி குடியிருப்பில் 3 வெவ்வேறு குடும்பங்கள் வசித்து வருகின்றன.  சில நாட்களுக்கு முன்பு பக்கத்து தெருவில் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்த ஒருவரின் இறுதி சடங்கிற்கு இந்த அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர்கள் சென்று வந்ததாக சொல்லப்படுகிறது. இதன்மூலம் கொரோனா தொற்று 3 குடும்பங்களிலுள்ள 12 பேருக்கு பரவியதாக கூறப்படுகிறது. எனவே அந்தத் தெரு பகுதி தகரங்களால் அடைக்கப்பட்டு கண்காணிப்புக்கு போலீசார் நிறுத்தப்பட்டு உள்ளனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories