தமிழகத்தில் இன்றைய பாதிப்பு – 161; சென்னையில் மட்டும் 138..!

tamilnaducorona
tamilnaducorona
  • கொரோனா வைரஸ் பாதிப்பு!
  • இன்றைய பாதிப்பு: 161 (சென்னை- 138)
  • இன்று இல்லம் திரும்பியோர்: 48
  • தமிழகம் – 2323 (சென்னை 906)
  • தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2323 ஆக உயர்வு

தமிழகத்தில் இன்றைய கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை- 161; அவர்களில் சென்னையில் மட்டும் 138 பேருக்குக் கொரோனா உறுதி செய்யப் பட்டுள்ளது. இதனால் சென்னை தொடர்ந்து டேஞ்சர் ஸோன் ஆக இருக்கிறது.

தமிழகத்தில் வியாழக்கிழமை இன்று ஒரே நாளில் 161 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப் பட்டிருக்கிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,323 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உயிரிழப்பு எண்ணிக்கையும் 27 ஆக உள்ளது.

தமிழக சுகாதாரத்துறையின் சார்பில் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில்,

தமிழத்தில் இன்று மேலும் 161 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அடுத்து மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,323 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழப்பு இல்லை. எனவே உயிரிழப்பு இதுவரை 27 பேர் என்ற நிலையில் உள்ளது.

இன்று ஒரே நாளில் 48 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதனால் மொத்தம் 1258 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 1035 பேர் சிகிச்சையில் உள்ளனர். 31,375 பேர் வீட்டுக் கண்காணிப்பிலும், 40 பேர் அரசுக் கண்காணிப்பிலும் உள்ளனர். இன்று மட்டும் 9,787 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.

tn covid case apr 30
tn covid case apr 30

கொரோனா பாதிப்பு இல்லாத பகுதியாக நீலகிரி மாவட்டம் திகழ்கிறது. இதை அடுத்து அங்கே ஊரடங்கு தளர்வு வரும் மே மாதம் 3ஆம் தேதிக்குப் பிறகு வரும் என்று ஆட்சியர் அறிவித்திருக்கிறார்.

அதே நேரம், முழுவதுமாக ஊரடங்கை தளர்த்த முடியாது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி உடனான ஆலோசனைக்கூட்டம் நிறைவு பெற்ற பின்னர், ஐசிஎம்ஆர் துணை இயக்குனர் டாக்டர். பிரதீபாகவுர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். சில பகுதிகளில் ஊரடங்கை தளர்த்துவது பற்றி அரசு முடிவு செய்யும் என்றும், ஆனாலும், முழுவதுமாக ஊரடங்கை தளர்த்த முடியாது என்றும் தெரிவித்த அவர், தொடர்ந்து தீவிர கண்காணிப்புக்கு பிறகே அடுத்தகட்ட முடிவு எடுக்கப் படும் என்றார்.

முன்னதாக, படிப்படியாக தொழிற்சாலைகளைத் திறக்கலாம் என்று முதல்வர் கருத்து தெரிவித்திருந்தார் .

இதனிடையே சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப் பட்டுள்ளனர். ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப் பட்டுள்ளனர்.

சென்னையில் கொரோனா பரவல் வேகம் அதிகரித்துள்ளது. ஒரே அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 3 குடும்பங்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப் பட்டது.

சென்னை மண்ணடியில் ஒரே அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 3 குடும்பங்களைச் சேர்ந்த 12 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

மண்ணடியில் ஒரு தெருவில், ஒரே அடுக்குமாடி குடியிருப்பில் 3 வெவ்வேறு குடும்பங்கள் வசித்து வருகின்றன.  சில நாட்களுக்கு முன்பு பக்கத்து தெருவில் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்த ஒருவரின் இறுதி சடங்கிற்கு இந்த அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர்கள் சென்று வந்ததாக சொல்லப்படுகிறது. இதன்மூலம் கொரோனா தொற்று 3 குடும்பங்களிலுள்ள 12 பேருக்கு பரவியதாக கூறப்படுகிறது. எனவே அந்தத் தெரு பகுதி தகரங்களால் அடைக்கப்பட்டு கண்காணிப்புக்கு போலீசார் நிறுத்தப்பட்டு உள்ளனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

Topics

பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories