கொரோனா பரவல்: சென்னைக்கு இப்படியும் ஒரு நற்செய்தி?

corona chennai
corona chennai

சென்னையில் தனிமைப் படுத்தப்பட்ட 1000 தெருக்களில் 14 நாட்களாக புதிய தொற்று இல்லை,

பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையின் விளைவாக, தனிமைப்படுத்தப்பட்டிருந்த 1000 தெருக்களில்  கடந்த 14 நாட்களாக புதிதாக நோய்த் தொற்று பாதிப்பு இல்லை என்று  மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் தெரிவித்தார்.

கொரோனா தொற்று பரவல் தொடர்பாக சென்னை மாநகராட்சி மேற்கொண்டுவரும் சிறப்பு நடவடிக்கைகள் குறித்த அறிவிப்பை நேற்று மாநகராட்சி ஆணையர்  வெளியிட்டார்.

வீட்டுக்கு வீடு சென்று சளி, காய்ச்சல், இருமல் அறிகுறி உள்ளவர்களுக்கு உடனடியாக  கொரோனா நோய்த் தொற்று பரிசோதனை செய்யும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது
முன்கூட்டியே நோய்த் தொற்று கண்டறியப்பட்டு பரிசோதனை செய்யப்படுவதால், உயிரிழப்பு எண்ணிக்கை 100% கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

140 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நோய்த் தொற்று கண்காணிப்பு நடத்தப்பட்டு வருகிறது. இதனால், நோய்த் தொற்றின் ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு அதிக உயிரிழப்புகளை தடுப்பதற்கான முதற்கட்ட பணிகள் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா நோய்த் தொற்று அதிகம் இருக்கும் குடிசைப் பகுதிகளில் காய்ச்சலுக்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு நோய் அறிகுறி உள்ளவர்களுக்கு பரிசோதனை செய்யப் படுகிறது. பெருநகர சென்னை மாநகராட்சி  எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காய்ச்சல் சிகிச்சைகளுக்காக தினமும் 100 முதல் 125 சிறப்பு முகாம்கள் தொடங்கப்பட்டு, சிறப்பு மருத்துவர்கள் பணியாற்றி வருகின்றனர்

நோய்த் தொற்று அதிகம் இருக்கக்கூடிய பகுதிகளின் எல்லைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் நோய்த் தொற்று பரவாமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது

நோய்த் தொற்று அதிகம் இருக்கக்கூடிய பகுதிகளில் உள்ள வயதானவர்கள், நோய்த் தொற்று அறிகுறிகள் இருப்பவர்களை அரசு கண்காணிப்பின் கீழ் இயங்கும் அடிப்படை வசதிகள் கொண்ட தனிமைப்படுத்தும் கூடங்களில் தங்க வைத்து, நோய்த் தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.

இதுபோன்ற பல்வேறு நடவடிக்கையின் விளைவாக பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்டு தனிமைப் படுத்தப் பட்டிருந்த 1000 தெருக்களில் தொடர்ந்து 14 நாட்களாக புதிதாக நோய்த் தொற்று பாதிப்பு இல்லை என்று,  அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

  • சதானந்தன், சென்னை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories