கொரோனா பரவல்: சென்னைக்கு இப்படியும் ஒரு நற்செய்தி?

corona chennai
corona chennai

சென்னையில் தனிமைப் படுத்தப்பட்ட 1000 தெருக்களில் 14 நாட்களாக புதிய தொற்று இல்லை,

பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையின் விளைவாக, தனிமைப்படுத்தப்பட்டிருந்த 1000 தெருக்களில்  கடந்த 14 நாட்களாக புதிதாக நோய்த் தொற்று பாதிப்பு இல்லை என்று  மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் தெரிவித்தார்.

கொரோனா தொற்று பரவல் தொடர்பாக சென்னை மாநகராட்சி மேற்கொண்டுவரும் சிறப்பு நடவடிக்கைகள் குறித்த அறிவிப்பை நேற்று மாநகராட்சி ஆணையர்  வெளியிட்டார்.

வீட்டுக்கு வீடு சென்று சளி, காய்ச்சல், இருமல் அறிகுறி உள்ளவர்களுக்கு உடனடியாக  கொரோனா நோய்த் தொற்று பரிசோதனை செய்யும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது
முன்கூட்டியே நோய்த் தொற்று கண்டறியப்பட்டு பரிசோதனை செய்யப்படுவதால், உயிரிழப்பு எண்ணிக்கை 100% கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

140 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நோய்த் தொற்று கண்காணிப்பு நடத்தப்பட்டு வருகிறது. இதனால், நோய்த் தொற்றின் ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு அதிக உயிரிழப்புகளை தடுப்பதற்கான முதற்கட்ட பணிகள் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.

ALSO READ:  ‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

கொரோனா நோய்த் தொற்று அதிகம் இருக்கும் குடிசைப் பகுதிகளில் காய்ச்சலுக்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு நோய் அறிகுறி உள்ளவர்களுக்கு பரிசோதனை செய்யப் படுகிறது. பெருநகர சென்னை மாநகராட்சி  எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காய்ச்சல் சிகிச்சைகளுக்காக தினமும் 100 முதல் 125 சிறப்பு முகாம்கள் தொடங்கப்பட்டு, சிறப்பு மருத்துவர்கள் பணியாற்றி வருகின்றனர்

நோய்த் தொற்று அதிகம் இருக்கக்கூடிய பகுதிகளின் எல்லைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் நோய்த் தொற்று பரவாமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது

நோய்த் தொற்று அதிகம் இருக்கக்கூடிய பகுதிகளில் உள்ள வயதானவர்கள், நோய்த் தொற்று அறிகுறிகள் இருப்பவர்களை அரசு கண்காணிப்பின் கீழ் இயங்கும் அடிப்படை வசதிகள் கொண்ட தனிமைப்படுத்தும் கூடங்களில் தங்க வைத்து, நோய்த் தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.

இதுபோன்ற பல்வேறு நடவடிக்கையின் விளைவாக பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்டு தனிமைப் படுத்தப் பட்டிருந்த 1000 தெருக்களில் தொடர்ந்து 14 நாட்களாக புதிதாக நோய்த் தொற்று பாதிப்பு இல்லை என்று,  அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

  • சதானந்தன், சென்னை
ALSO READ:  ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories