கொரோனா பரவல்: சென்னைக்கு இப்படியும் ஒரு நற்செய்தி?

corona chennai
corona chennai

சென்னையில் தனிமைப் படுத்தப்பட்ட 1000 தெருக்களில் 14 நாட்களாக புதிய தொற்று இல்லை,

பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையின் விளைவாக, தனிமைப்படுத்தப்பட்டிருந்த 1000 தெருக்களில்  கடந்த 14 நாட்களாக புதிதாக நோய்த் தொற்று பாதிப்பு இல்லை என்று  மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் தெரிவித்தார்.

கொரோனா தொற்று பரவல் தொடர்பாக சென்னை மாநகராட்சி மேற்கொண்டுவரும் சிறப்பு நடவடிக்கைகள் குறித்த அறிவிப்பை நேற்று மாநகராட்சி ஆணையர்  வெளியிட்டார்.

வீட்டுக்கு வீடு சென்று சளி, காய்ச்சல், இருமல் அறிகுறி உள்ளவர்களுக்கு உடனடியாக  கொரோனா நோய்த் தொற்று பரிசோதனை செய்யும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது
முன்கூட்டியே நோய்த் தொற்று கண்டறியப்பட்டு பரிசோதனை செய்யப்படுவதால், உயிரிழப்பு எண்ணிக்கை 100% கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

140 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நோய்த் தொற்று கண்காணிப்பு நடத்தப்பட்டு வருகிறது. இதனால், நோய்த் தொற்றின் ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு அதிக உயிரிழப்புகளை தடுப்பதற்கான முதற்கட்ட பணிகள் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா நோய்த் தொற்று அதிகம் இருக்கும் குடிசைப் பகுதிகளில் காய்ச்சலுக்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு நோய் அறிகுறி உள்ளவர்களுக்கு பரிசோதனை செய்யப் படுகிறது. பெருநகர சென்னை மாநகராட்சி  எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காய்ச்சல் சிகிச்சைகளுக்காக தினமும் 100 முதல் 125 சிறப்பு முகாம்கள் தொடங்கப்பட்டு, சிறப்பு மருத்துவர்கள் பணியாற்றி வருகின்றனர்

நோய்த் தொற்று அதிகம் இருக்கக்கூடிய பகுதிகளின் எல்லைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் நோய்த் தொற்று பரவாமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது

நோய்த் தொற்று அதிகம் இருக்கக்கூடிய பகுதிகளில் உள்ள வயதானவர்கள், நோய்த் தொற்று அறிகுறிகள் இருப்பவர்களை அரசு கண்காணிப்பின் கீழ் இயங்கும் அடிப்படை வசதிகள் கொண்ட தனிமைப்படுத்தும் கூடங்களில் தங்க வைத்து, நோய்த் தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.

இதுபோன்ற பல்வேறு நடவடிக்கையின் விளைவாக பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்டு தனிமைப் படுத்தப் பட்டிருந்த 1000 தெருக்களில் தொடர்ந்து 14 நாட்களாக புதிதாக நோய்த் தொற்று பாதிப்பு இல்லை என்று,  அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

  • சதானந்தன், சென்னை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு வரி குறைப்பு!

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. ஈரான் போர் தாக்கத்தால் விலை உயர்வை தவிர்க்கும் வகையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மார்ச் 27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு வரி குறைப்பு!

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. ஈரான் போர் தாக்கத்தால் விலை உயர்வை தவிர்க்கும் வகையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மார்ச் 27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

Entertainment News

Popular Categories