கொரோனா ஊரடங்கால் பாதித்த நோயாளிகளுக்காக.. ரூ.51 லட்சம் வழங்கிய ஆளுநர்!

Published:

governor banwarilal purohit
governor banwarilal purohit

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப் பட்டுள்ள மக்களுக்கு உதவுவதற்காக, ரூ.51 லட்சம் அளித்துள்ளார் தமிழக ஆளுநர்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு ரூ.51 லட்சம் வழங்கியுள்ளார்.

தன் விருப்ப நிதியிலிருந்து அவர் இந்தத் தொகையை ஒதுக்கியுள்ளார். அதன்படி ஏப்., 1ம் தேதி ரூ. 11 லட்சம் வழங்கப்பட்டது. அதன் பின்னர் நேற்று இரண்டாம் கட்டமாக, ரூ. 40 லட்சம் மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாகப் பிறப்பிக்கப் பட்ட ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு, உதவி செய்வதற்காக இந்த நிதி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img