April 18, 2025, 12:11 PM
32.2 C
Chennai

ஊரடங்கில் மாணவர் சேர்க்கை: கோவை சிஎஸ்ஐ., பள்ளிக்கு ‘சீல்’ !

coimbatore csc school
coimbatore csc school

கோவையில் 6ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு நடத்திய சிஎஸ்ஐ., பள்ளிக்கு ஆட்சியர் உத்தரவின் பேரில் ‘சீல்’ வைக்கப் பட்டது. கோவை முதன்மைக் கல்வி அலுவலர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டார்.

கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக, தமிழகத்தில் முழு ஆண்டு தேர்வுகளைத் ரத்து செய்து 1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்து, உத்தரவும் பிறப்பித்தது தமிழக அரசு! அதுமட்டுமல்ல, பத்தாம் வகுப்பு தேர்வும் கூட ரத்து செய்யப் பட்டு, அனைவரையும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்து, அரசு வரலாற்றுச் சாதனை புரிந்துள்ளது.

மேலும், தற்போதும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் தீவிரமடைந்து வருகிறது. எனவே பள்ளிகளைத் திறப்பது குறித்து தமிழக அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை. செப்டம்பர் மாதத்தில் கொரோனோ பரவல் குறித்து நிலமையை ஆராய்ந்து அதன் பிறகே பள்ளிகள் திறப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப் படுகிறது.

ALSO READ:  பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜ் மாரடைப்பால் காலமானார்!

இந்த நிலையில் கோவை சிஎஸ்ஐ ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 6ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கோவை டவுன்ஹால் பகுதியில் செயல்பட்டு வரும் இப்பள்ளிக்கு செவ்வாய்க்கிழமை இன்று காலை சில மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் வந்துள்ளனர். அவர்களை 6ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்காக நுழைவுத்தேர்வு எழுத பள்ளி நிர்வாகம் அழைத்திருந்ததாக தகவல் பரவியது.

இதைஅடுத்து, சிஎஸ்ஐ பள்ளியின் அடாவடித்தனம் குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கும், முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்துக்கும் சிலர் புகார் தெரிவித்துள்ளனர். இதை அடுத்து கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உஷா, மாவட்டக் கல்வி அலுவலர் ராஜலட்சுமி, தெற்கு வட்டாட்சியர் முருகன் ஆகியோர் அப்பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது அங்கே 50க்கும் மேற்பட்ட மாணவர்களை பள்ளி நிர்வாகத்தினர் வரவழைத்து, நுழைவுத்தேர்வு நடத்தியது தெரியவந்தது.

இதை அடுத்து, மாணவர்கள் தேர்வு எழுதியதைத் தடுத்து நிறுத்திய அதிகாரிகள், அவர்களின் பெற்றோரிடம் விசாரணை செய்தனர். அதற்கு அவர்கள், நுழைவுத்தேர்வு எழுதுவதற்காகவே தாங்களும் உடன் வந்துள்ளதாக தெரிவித்தனர்! இதனால் அதிருப்தி அடைந்த அதிகாரிகள், இது குறித்த விவரத்தை ஆட்சியருக்கு தெரிவித்தனர். இந்நிலையில், ஆட்சியர் உத்தரவின் பேரில், அந்தப் பள்ளிக்கு கல்வித் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

ALSO READ:  சாம்பியன்ஸ் ட்ராபி: நியூஸி.,யை வென்று அரையிறுதியில் ஆஸி.,யை சந்திக்கும் இந்திய அணி!

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

IPL 2025: ஹைதராபாத் அணியை எளிதாக எதிர்கொண்ட மும்பை அணி!

          ஆட்டநாயகனாக ஆல்ரவுண்டர் வில் ஜேக்ஸ் தான் எடுத்த 2 விக்கட்டுகளுக்காகவும் அதிரடி 36 ரன் களுக்காகவும் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழர்கள் சொத்தை அபகரிக்கத் துடிக்கும் வக்ப் வாரியம்: இந்து முன்னணி கண்டனம்!

இந்துக்களின் பராம்பரிய சொத்துக்களை பாதுகாக்க இந்திய பாராளுமன்றம் நிறைவேற்றிய வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த தமிழக அரசை

IPL 2025: சூப்பர் ஓவரில் டெல்லி வெற்றி

ஐ.பி.எல் 2025 – டெல்லி vs ராஜஸ்தான் டெல்லி - 16.04.2025 சூப்பர் ஓவரில் டெல்லி வெற்றி

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

IPL 2025: ஹைதராபாத் அணியை எளிதாக எதிர்கொண்ட மும்பை அணி!

          ஆட்டநாயகனாக ஆல்ரவுண்டர் வில் ஜேக்ஸ் தான் எடுத்த 2 விக்கட்டுகளுக்காகவும் அதிரடி 36 ரன் களுக்காகவும் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழர்கள் சொத்தை அபகரிக்கத் துடிக்கும் வக்ப் வாரியம்: இந்து முன்னணி கண்டனம்!

இந்துக்களின் பராம்பரிய சொத்துக்களை பாதுகாக்க இந்திய பாராளுமன்றம் நிறைவேற்றிய வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த தமிழக அரசை

IPL 2025: சூப்பர் ஓவரில் டெல்லி வெற்றி

ஐ.பி.எல் 2025 – டெல்லி vs ராஜஸ்தான் டெல்லி - 16.04.2025 சூப்பர் ஓவரில் டெல்லி வெற்றி

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IPL 2025: தூள் கிளப்பிய பஞ்சாப் அணி

ந்த ஆண்டு ஐபிஎல் பேட்ஸ்மென்களின் சொர்க்கமாக விளங்குகிறது. 150 ரன்னுக்கும் குறைவான ஆட்டங்கள் வெகு சிலவாக உள்ளன. மட்டையாளர்கள் பந்துவீச்சாளர்களை வெளுவெளு என்று வெளுக்கிறார்கள்.

மு.க. ஸ்டாலினுக்கு மாநில சுயாட்சி ஜுரம்!

முதலமைச்சர் மு. க. ஸ்டாலினுக்கு மீண்டும் மாநில சுயாட்சி ஜுரம் பிடித்திருக்கிறது. திமுக தலைவர்களின் உள்ளே இருக்கும் வேறு கோளாறின் அறிகுறியாக அவர்களுக்கு அவ்வப்போது மாநில சுயாட்சி ஜுரம் வரும்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 16 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories