கணவரின் மகனால் கர்ப்பம்! ஆனந்த கண்ணீர் விட்ட வளர்ப்பு தாய்!

Published:

step mother

ரஷ்யாவில் வளர்ப்பு மகனால் கர்ப்பமான 35 வயதான பெண், அந்த தருணம் குறித்து முதன் முறையாக கூறியுள்ளார். ரஷ்யாவின் Krasnodar Krai மாகாணத்தை சேர்ந்தவர் Marina Balmasheva.

35 வயதான இவர் தன்னுடைய கணவரான Alexey(45)-ஐ விவகாரத்து செய்து, கணவரின் மூத்த மனைவிக்கு பிறந்த மகனான 20 வயது மதிக்கத்தக்க Vladimir என்பவரை திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளார். இதன் காரணமாக அவர் Vladimir-வுடன் ஓட்டம் பிடித்த அவர், அவருடன் குடும்பம் நடத்தி வருகிறார். அது தொடர்பாக Vladimir-வுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டார்.

அதில், 7 வயதில் இருக்கும் போது Vladimir என்னுடன் இருந்தார். இப்போது 20 வயதிலும் என்னுடன் இருக்கிறார் என்று குறிப்பிட்டிருந்தார். இதைக் கண்ட இணையவாசிகள் அவரை கடுமையாக சாடினர். ஆனால் Marina Balmasheva இதை அறிந்து பலர் மோசமாக பேசுவார்கள் என்று தெரியும், அதைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை. பல ஆண்டுகளாக நிம்மதி இல்லாத வாழ்க்கை வாழ்ந்து வந்தேன்.

ALSO READ:  IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

இப்போது நிம்மதியாக இருக்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் தற்போது நான்கு மாத கர்ப்பிணியாக இருக்கும், இவர் கர்பத்திற்கான நேர்மறை சோதனைக்கான ட்ராப்பை முதலில் அந்த கருவில் விட்ட போது, கண்ணீர் விட்டு அழுததாக கூறியுள்ளார்.

மேலும், அன்று இரவு முழுவதும் நான் தூங்கவே முடியவில்லை, கவலையாக இருந்தேன், அதுவே கர்ப்பமாக இருப்பதை அறிந்த பின்பு, என் குரலும், கைகளும் நடுங்கின. இதை விளக்க முடியாது, விரைவில் திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளோம் என்று கூறியுள்ளார்.

இது குறித்து முன்னாள் கணவர் Alexey கூறுகையில், அவள் என் மகனை மயக்கிவிட்டாள். நான் வீட்டில் இருக்கும் போது, என் மகனுடன் நெருக்கமாக இருப்பாள். அதற்கு அவள் வெட்கப்பட்டதில்லை, இதை அறிந்து தான் விவகாரத்து கோரியதாக கூறியுள்ளார்.

Related articles

Recent articles

spot_img