ஊரடங்கு பரிதாபங்கள்: பஜ்ஜி போட்டு விற்கும் பள்ளி ஆசிரியர்!

Published:

Bajji teacher life
Bajji teacher life

ஒரு வைரஸ் கிருமியால் வண்டி ஓடமாகிறது. ஓடம் வண்டி ஆகிறது. லாக்டௌனால் பலரின் வாழ்க்கை தலைகீழாக மாறியுள்ளது. வேலையின்றி பணமின்றி ஜீவிதங்கள் பரிதவிக்கின்றன.

கற்ற வித்தை எல்லாம் வயிற்றுப் பாட்டுக்கு தானே! ஆனால் பலருக்கும் கல்வியறிவு கற்றுத்தந்த ஆசிரியர்களின் வயிற்றுப்பாடே கேள்விக்குறியாகி உள்ளது. எத்தகைய பணிகளில் இறங்கி உள்ளார்கள் பாருங்கள்!

bajji teacher
bajji teacher

கரோனா லாக்டௌனில் பள்ளி ஆசிரியர் பஜ்ஜி செய்து விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். வகுப்பறையில் பிள்ளைகளுக்கு பாடம் சொல்ல வேண்டிய ஆசிரியர் வாணலியில் வாழைக்காய் பஜ்ஜி பொறித்தெடுக்கிறார்.

இவர் பெயர் ராம்பாபு. எம்ஏ, பிஎட் படித்துள்ளார். தெலங்காணா சத்துபல்லியில் ஒரு தனியார் பள்ளி ஆசிரியராக பல ஆண்டுகள் பணிபுரிந்தார். கிடைத்த வருமானத்தில் தாய், மனைவி, இரு குழந்தைகளை காப்பாற்றி வந்தார்.

bajji teacher
bajji teacher

ஆனால் கரோனாவால் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் சம்பளம் கிடைக்காத வறுமை. ஒரு தள்ளு வண்டியை வாடகைக்கு எடுத்து இதோ… இப்படி பஜ்ஜி போட்டு விற்கிறார். மனைவி உதவுகிறார். வியாபாரம் டல்லாக இருந்தாலும் ஓரளவு பசி ஆற்றுகிறது என்கிறார் ஆசிரியர்.

ALSO READ:  ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

காலையில் இட்லி தோசையும் மாலையில் பஜ்ஜி போண்டாவும் போடுகிறார்.

bajji teacher
bajji teacher

நல்லாசிரியர் விருது பெற்ற இந்த ஆசிரியரின் நிலைமை பலரையும் வருந்தச் செய்கிறது என்கின்றனர் அவருடைய மாணவர்கள். அரசாங்கம் பள்ளி ஆசிரியர்களுக்கு உதவ வேண்டும் என்று கோருகிறார்கள் மாணவர்கள்.

இதே போல தள்ளுவண்டியில் வாழைப்பழம் விற்ற ஒரு ஆசிரியருக்கு அவருடைய மாணவர்கள் உதவி செய்தார்கள். இந்த ஆசிரியரை யார் காப்பாற்றப் போகிறார்கள்?

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img