February 22, 2026, 3:06 PM
30.4 C
Chennai

காப்பீட்டு பணத்துக்காக கணவரை போட்டுத் தள்ளிய மனைவி!

insurance money
insurance money

வாரங்கலில் காப்பீட்டு பணத்துக்காக கைப்பிடித்த கணவனை காட்டுக்கு அனுப்பினாள் ஒரு மனைவி.

பக்கா ப்ளான் போட்டு கொலை செய்து விட்டு தனக்கு எதுவும் தெரியாது என்று தன் கணவரை காணவில்லை கண்டுபிடித்து கொடுங்கள் என்று போலீஸ் ஸ்டேஷன் படியேறிய ஒரு கொடூரமான பெண்ணின் திட்டங்களை வெளிப்படுத்தினர் பர்வதகிரி போலீசார்.

முக்கிய குற்றவாளியோடு கூட உதவி செய்த கணவரின் தங்கை தங்கை கணவனைக் கூட கைது செய்து திங்கள்கிழமை ஈஸ்ட் ஜோன் இன்சார்ஜ் டிசிபி கொல்லி வெங்கடலட்சுமி வரங்கல் கமிஷனரேட் அலுவலகத்தில் விவரங்கள் தெரிவித்தார்.

வரங்கல் ரூரல் மாவட்டம் பர்வதகிரி மண்டலம் ஹட்யதாண்டா வைச் சேர்ந்த பாதாவத்வீரன்னா, யாக்கமா தம்பதிகளுக்கு இரு பிள்ளைகள். அவர்கள் வாழ்க்கைக்காக ஒரு பிரைவேட் பள்ளியில் டோபி வேலை செய்து வந்தார்கள்.

அப்போது வீரன்னா குடிப்பழக்கத்துக்கு ஆளாகி தினமும் மனைவியை இம்சை செய்தார். இதனால் பொறுமை இழந்த யாக்கமா எப்படியாவது தன் கணவனை கொன்று விட வேண்டுமென்று தீர்மானித்தாள். கணவனை கொன்ற பின் வரும் காப்பீட்டு தொகையோடு நல்லபடியாக வாழ்ந்து விடலாம் என்ற ஆலோசனையோடு கணவரின் பெயர் மீது உள்ளூர் கிராமீண வங்கியில் 20 லட்சத்திற்கு இன்சூரன்ஸ் செய்வித்தாள்.

லாக்டௌன் காரணமாக கிராமத்திலேயே இருந்த வீரன்னா குடித்து மீதி இருந்த காலி பாட்டில்களை சேகரித்து பக்கத்து ஊரில் விற்று வந்தார்.

இந்த மாதம் 19ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெற்று மதுபாட்டில்களை விற்பதற்காக நெக்கொண்டா என்ற ஊருக்குச் சென்றார் . இதனால் யாக்கம்மா, நாத்தனார் மற்றும் அவள் கணவர் பிச்சுவுக்கு செய்தி தெரிவித்தாள்.

இதனால் பிச்சு நெக்கொணடா கிராமத்துக்குச் சென்று வீரன்னாவை சந்தித்து அவருக்கு நிறைய குடிக்க வைத்தார். பின் மூன்று சக்கர வாகனத்தில் ஊருக்குத் திரும்பி அழைத்து வந்தார். அதே சமயத்தில் அவர் குடிபோதையில் இருந்த போது வீரன்னாவை இரவு பதினோரு மணிக்கு வீரன்னாவுக்கு சொந்தமான வயலில் தூக்கிலிட்டு கொலை செய்துவிட்டார்கள். உயிரோடு இருக்கிறாரோ என்று சந்தேகத்தோடு ஒரு பாறாங்கல்லை தூக்கி தலையில் மோதி அருகில் இருந்த கால்வாயில் எறிந்துவிட்டு அவரவர் திரும்பிச் சென்றனர்.

பின்னர் தன் கணவரை காணவில்லை என்று யாக்கம்மா தன் நாத்தனாரோடு சேர்ந்து பர்வதகிரி போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தாள்.

சிபி ரவீந்தர் உத்தரவுபடி களத்தில் இறங்கிய பர்வதகிரி சர்க்கிள் இன்ஸ்பெக்டர் கிஷ்ண் சிசி கேமராவின் ஆதாரத்தோடு குற்றவாளியை கண்டறிந்தார்கள். அதன்படி திங்களன்று இறந்தவரின் வீட்டிற்கு வந்த மூன்றுபேரை கைது செய்தார்கள். குற்றவாளிகளிடம் இருந்து மூன்று சக்கர வாகனத்தோடு கூட நைலான் கயிறு பேங்க் பாஸ்புக் இன்ஷூரன்ஸ் பத்திரம் 2 செல்போன்களை கைப்பற்றினார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

Topics

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories