தமிழகம் முழுதும் ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பினரை பயன்படுத்த 2 மாதங்களுக்கு தடை!

front of police logo
front of police logo

சாத்தான்குளம் விவகாரத்தில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பினருக்கு தொடர்பு இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து தமிழகம் முழுவதும் அந்த அமைப்பினருக்கு எதிரான கருத்துக்கள் தெரிவிக்கப் படுகின்றன. பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பை தடை செய்ய வேண்டும் என்று அரசியல் சமூக இயக்கங்கள் பலவும் கோரிக்கை விடுத்து வருகின்றன.

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் அடுத்த 2 மாதங்களுக்கு ஃப்ரெண்ட்ஸ் ஆப் போலீசை காவல் நிலைய பணிக்கோ, ரோந்து பணிக்கோ பயன்படுத்த தடை விதிக்கப் பட்டிருக்கிறது. 

முன்னதாக, திருச்சி சரகத்தில், திருச்சி உள்பட 6 மாவட்டங்களில் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்-க்கு தற்காலிக தடை விதிக்கப் படுவதாக திருச்சி சரக டிஐஜி ஆனி விஜயா தெரிவித்தார். 

திருச்சி சரக டிஐஜி பிறப்பித்த உத்தரவில், திருச்சி, கரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், விழுப்புரத்தில் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்-க்கு  தற்காலிக தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரோந்து, வாகன தணிக்கை, கைது போன்ற பணிகளில் பிரெண்ட்ஸ் ஆப் போலீசுக்கு தடை விதிக்கப்படுவதாகவும் காவல் நிலையத்திற்குள் பிரண்ட்ஸ் ஆப் போலீசை அனுமதித்தால் சம்பந்தப்பட்ட போலீஸ் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திருச்சி சரக டிஐஜி ஆனி விஜயா உத்தரவிட்டுள்ளார்.  மேலும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் குழு சமூக பணிகளில் தொடர தடையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது போல், தூத்துக்குடி மாவட்டத்தில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் காவல் நிலையத்தில் பயன்படுத்த தடை விதிக்கப் பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் காவல்பணியில் ஈடுபட பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்-க்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சமூக பணிகளுக்கு மட்டுமே பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் பயன்படுத்தப்படுவார்கள் என்று எஸ்.பி ராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார். 

நெல்லை சரகத்தில் 4 மாவட்டங்களிலும் பிரண்ட்ஸ் ஆஃப் போலீசை பயன்படுத்தக் கூடாது என டிஐஜி பிரவீன்குமார் அபினபு உத்தரவு பிறப்பித்துள்ளார். நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பிரண்ட்ஸ் ஆஃப் போலீசை பயன்படுத்த தடை விதிக்கப் பட்டுள்ளது.

காவல்துறையினர் பிரண்ட் ஆப் போலீசை பயன்படுத்த வேண்டாம் என்று நெல்லை சரக டிஐஜி பிரவீன்குமார் அபிநபு உத்தரவிட்டுள்ளார். நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட காவல்துறைக்கு  அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். 

சாத்தான் குளம் பிரச்னைக்கு பிறகு பிரன்ஸ் ஆப் போலீசார் ஹோம் கார்டுகளுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப் பட்டுள்ளதாக, நெல்லை காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா தகவல் வெளியிட்டுள்ளார். 

வாகன சோதனை மற்றும் பிற காவல் பணியில் ஈடுபடுத்தும் போது பொது மக்களிடம் எல்லை மீறும் ஹோம் கார்ட் மற்றும் பிரன்ஸ்ஆப் போலீசாருக்கு  தடை விதிக்கப் பட்டுள்ளது.

எனினும்,  பிரண்ட்ஸ் ஆப் போலீசார் அமைப்பினரை பணியில் இருந்து விடுவிப்பதற்கான காரணம் அவர்களுக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே என நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா தெரிவித்தார். மேலும் ஹோம்கார்டு மற்றும் பிரண்ட்ஸ் ஆப் போலீ அமைப்பினருக்கென்று ஓரிரு நாட்களில் தனி பயிற்சி வழங்கபோவதாகவும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்!

இதனால் வரும் 13ம் தேதிக்குள் ஜோசப் விஜய் தனது பெரும்பான்மையை அவையில் நிரூபிக்க வேண்டும். மே 11 அன்று, எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

Topics

தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்!

இதனால் வரும் 13ம் தேதிக்குள் ஜோசப் விஜய் தனது பெரும்பான்மையை அவையில் நிரூபிக்க வேண்டும். மே 11 அன்று, எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories