பெண் வேடமிட்டு… பெண்களுடன் நெருக்கமாக இருந்தவனை… வெளுத்தெடுத்த மக்கள்!

Published:

man with lady getup - 2026
  • பெண் வேஷம் போட்டு பெண்களோடு நெருக்கமாக இருந்தான்.
  • அடையாளம் கண்டு உதைத்து வெளுத்து வாங்கிய உள்ளூர்வாசிகள்.

பெண் வேஷத்தோடு இருந்த ஆணின் குட்டு வெளிபட்டதால் உள்ளூர்வாசிகள் கையால் செம்மையாக மரியாதை செய்யப்பட்ட சம்பவம் கரீம்நகரில் நடந்துள்ளது.

அவன் ஒரு ஆண். ஆனாலும் புடவை கட்டி ஒரு பெண்ணைப் போலவே அலங்கரித்துக் கொண்டான். அதோடு நிற்காமல் காலனியில் இருக்கும் அனைத்து பெண்களையும் நம்பவைத்து அவர்களோடு சுதந்திரமாக இருக்க முற்பட்டான்.

அவ்வாறு பெண் வேஷத்தில் இருந்த ஆணின் குற்றம் சமீபத்தில் வெளிப்பட்டதால் உள்ளூர்வாசிகளிடம் உதை வாங்கினான்.

கரீம் நகரைச் சேர்ந்த சுமார் 50 வயதுள்ள ஒருவன் கடந்த சில காலமாக புடவை ரவிக்கை அணிந்து காலனியில் உள்ள பெண்களுடன் சுதந்திரமாக இருந்து வந்தான்.

அண்மையில் ஹவுசிங் போர்டு காலனியில், தான் தனியாக இருக்கும் பெண் என்று கூறி ஒரு வீட்டில் வாடகைக்கு வந்தான். ஆனால் சில நாட்களில் பிறகு அவனுடைய நடவடிக்கைகளில் உள்ளூர்வாசிகளுக்கு சந்தேகம் வந்தது. அதனால் அவன் நடவடிக்கை, அவனுடைய அசைவுகளை ஒளிந்திருந்து உள்ளூர்வாசிகள் கண்டறிந்து அவள் பெண் அல்ல என்றும் பெண் வேஷத்தில் இருக்கும் ஆண் என்றும் உணர்ந்தார்கள்.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

அதனால் இன்று உள்ளூர்வாசிகள் அவனை வெளியே இழுத்து மரத்தில் கட்டி வைத்து வெளுத்து வாங்கினார்கள்.

ஆனால் அவன் பெண் வேஷத்தில் எதற்காக அலைந்து வந்தான் என்று கண்டுபிடிக்க முடியவில்லை.

ஒருகாலத்தில் கரீம் நகரில் ஆட்டோ நடத்தியவன் என்று சிலருக்கு சந்தேகம் வந்தது. ஆனால் தான் திருநங்கை இல்லை என்று கூறுகிறான்.

ஏதாவது தவறு செய்துவிட்டு மாறுவேஷத்தில் திரிகிறானா அல்லது ஏதாவது செய்யக் கூடாத காரியம் செய்வதற்காக இந்த வேஷத்தை தேர்ந்தெடுத்தானா என்ற சந்தேகங்களை உள்ளூர்வாசிகள் வெளிப்படுத்தினார்கள்.

இந்த பெண்ணாகிய ஆணை போலீசாருக்கு ஒப்படைத்தார்கள் உள்ளூர்வாசிகள்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img