December 6, 2025, 7:22 PM
26.8 C
Chennai

ராஜபட்சக்கள் கையில் இலங்கை! பிரதர் மஹிந்தவை பிரதமர் ஆக்கிய அதிபர் கோத்தபய!

mahinda gotabaya - 2025

இலங்கை பிரதமராக தனது சகோதரர் மகிந்த ராஜபட்சவை நியமித்து அதிபர் கோத்தபய ராஜபட்ச உத்தரவிட்டுள்ளார்.

அண்மையில் நடந்து முடிந்துள்ள இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபட்ச வெற்றி பெற்றார். நவ.18 திங்கள் அன்று அவர் அதிபராக பதவி ஏற்றார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சி தோல்வி அடைந்தது.

இதை அடுத்து ரணில் பதவி விலகலாம் எனக் கூறப் பட்டது. அதன்படி, இன்று ரணில் விக்ரமசிங்க தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தையும் அதிபர் கோத்தபய ராஜபட்சவுக்கு அனுப்பி வைத்தார்.

இந்நிலையில் இலங்கை பிரதமராக தனது சகோதரர் மகிந்த ராஜபட்சவை நியமித்து அதிபர் கோத்தபய ராஜபட்ச உத்தரவிட்டுள்ளார். இதை அடுத்து, மஹிந்த ராஜபட்ச விரைவில் பதவியேற்பார் என்று கூறப் படுகிறது.

GotabhayaRajapaksaAndMahindaRajapaksa - 2025

ஏற்கெனவே மஹிந்த ராஜபட்ச கடந்த 2005 முதல் 2015 வரை இலங்கை அதிபராக பதவி வகித்தார். பின்னர், இலங்கை அதிபராக இருந்த சிறீசேன, ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு மஹிந்த ராஜபட்சவை பிரதமராக நியமனம் செய்தார். ஆனால், நீதிமன்றம் சென்ற ரணில் விக்ரமசிங்க, மீண்டும் பிரதமராக பதவியேற்றுக் கொண்டார்.

இந்நிலையில், தனது தம்பியின் தயவில் மீண்டும் இலங்கை பிரதமராக மஹிந்த ராஜபட்ச பதவியேற்க வுள்ளார். இதை அடுத்து, இலங்கை அதிகாரமும் ஆட்சியும் மீண்டும் ராஜபட்ச குடும்பத்தின் கரங்களுக்கே வந்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories