ஆவணியில் ஆஃபர் போட்ட நெல்லை செல் கடை! சீல் வைத்த போலீஸ்!

head-set

திருநெல்வேலி மாவட்டத்தில் புதிதாக திறக்கப்பட்ட மொபைல் கடை ஒன்று ரூ 6-க்கு ஹெட்செட், டெம்பர் கிளாஸ் கிடைக்கும் என்ற அறிவிப்பால் அங்கு கூட்டம் அலைமோதியது. பிறவு என்ன? திறப்பு விழா கண்ட கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் மூடுவிழாவை நடத்தினர்.

தமிழகத்தில் கொரோனாவால் தினந்தோறும் 5000 முதல் 6000 பேர் வரை பாதிப்புக்குள்ளாகிறார்கள். இதுவரை கொரோனாவால் பாதித்தோரின் எண்ணிக்கை 3.90 லட்சத்தை தாண்டியது. எனினும் பாதிப்பு எண்ணிக்கைக்கு சரிசமமாக கொரோனாவிலிருந்து மீள்வோரின் எண்ணிக்கை உள்ளது சற்று ஆறுதலை தருகிறது.

கடந்த மார்ச் மாதம் முதல் போடப்பட்ட லாக்டவுனால் மூடப்பட்டிருந்த கடைகள் அனைத்தும் தற்போது மெல்ல மெல்ல திறக்கப்பட்டு வருகின்றன.

அதிலும் முகக் கவசம் அணிதல் சமூக இடைவெளி விடுதல் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் கடைப்பிடிக்கக் கூறுகிறார்கள்.

cell-shop

இந்த நிலையில் திறந்த கடைகளில் வியாபாரத்தை பெருக்கவும் விட்டதை பிடிக்கவும் பல்வேறு யுத்திகள் கையாளப்படுகின்றன. அந்த வகையில் நெல்லை மாவட்டம் கொக்கிரகுளத்தில் ஒரு மொபைல் கடை திறக்கப்பட்டுள்ளது. இங்கு அதிரடி ஆஃபராக அதும் ஆவணி மாத ஆஃபராக ரூ 6-க்கு ஹெட்செட், டெம்பர் கிளாஸ் ஆகியவை விற்பனை செய்யப்படுகிறது.

இந்த ஆஃபர் குறைந்த நாட்களுக்கு மட்டுமே கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அறிந்த அப்பகுதி மக்கள் கொரோனா அச்சம் கொஞ்சம் கூட இல்லாமல் குறைந்த விலையில் ஹெட்செட் கிடைப்பதால் அதை வாங்க அதிகளவில் கூட்டம் குவிந்தது. ஒரு கட்டத்தில் வாடிக்கையாளர்களை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கூட்டம் கூடியது.

mobile-shop

இந்த நிலையில் இந்த கடையில் கூட்டம் குறித்து தகவலறிந்த மாநகராட்சி அதிகாரிகள், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு பெரும்பாலானோர் மாஸ்க் அணியாமல் ஒருவரை ஒருவர் முண்டியடித்தபடி நின்றுக் கொண்டிருந்தனர். இதை பார்த்த போலீஸாருக்கும் மாநகராட்சியினருக்கும் அதிர்ச்சி ஏற்பட்டது.

பின்னர் பொதுமக்களை விரட்டியடித்த போலீஸார் கொரோனா காலத்தில் ஆஃபர்களை போட்டு இது போல் கூட்டத்தை சேர்த்ததாக அந்த கடைக்கு சீல் வைத்தனர். புதிதாக திறப்பு விழா நடத்தப்பட்ட கடைக்கு ஆஃபர் என்ற பெயரில் கடைக்காரர்களே மூடுவிழா நடத்திவிட்டனர். இன்னும் சிலரோ இந்த கடை பழைய கடைதான், ஆனால் ஆஃபர் மட்டும் புதிது என்கிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories