துப்புரவுப் பணியாளர் இல்லை… கழிவறையை சுத்தம் செய்த ஆசிரியை!

Published:

teacher-cleaning-toilet
teacher-cleaning-toilet

தெலங்காணாவில் அரசாங்க பள்ளிக்கூடங்களில் தாற்காலிக துப்புரவுப் பணியாளர்களை (ஸ்காவெஞ்சர்) நீக்கிவிட்டதால் கழிவறைகளை ஒரு பள்ளி ஆசிரியை சுத்தம் செய்ய வேண்டிய நிலைமை சித்திபேட்டை மாவட்டத்தில் ஏற்பட்டது.

கடந்த சில மாதங்களாக பள்ளிக்கூடங்கள் மூடி இருந்ததால் கழிவறைகள் எல்லாம் மோசமான நிலையில் உள்ளன.

இந்தப் பின்னணியில் பள்ளிக்கூடங்களை சுத்தம் செய்ய வேண்டும் என்று மாவட்ட உயர் அதிகாரிகள் பஞ்சாயத்து ஊழியர்களுக்கு ஆணையிட்டார்கள். அதன்படி செர்யால மண்டலம் வீரன்னபேட்டை அரசு உயர்நிலைப்பள்ளியில் பஞ்சாயத்து ஊழியர் வந்து கூட்டிப் பெருக்கினார்.

கழிவறையை சுத்தம் செய்ய வேண்டும் என்று ஆசிரியர்கள் கேட்டபோது அது என் வேலையில்லை என்று சென்றுவிட்டார். வேறுவழியின்றி ஆசிரியை பி. வெங்கட்ரமணா தானே தண்ணீர் எடுத்துச் சென்று கழிவறைகளை சுத்தப்படுத்தினார்.

இந்த போட்டோவை அவர் அமைச்சர்கள் கேடிஆர், ஹரிஷ் ராவு, ஈடல ராஜேந்தர், சபீதா ரெட்டி ஆகியோருக்கு ட்விட்டர் மூலம் அனுப்பிவைத்தார்.

ALSO READ:  முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img