10ம் வகுப்பு பாடப் புத்தகத்தில் என்.டி.ஆர்., வரலாறு!

Published:

telangana-nt-ramaroa
  • தெலங்காணா பத்தாம் வகுப்பு பாடப் புத்தகத்தில் என்டிஆர் வாழ்க்கை குறித்த பாடங்கள்…
  • கேசிஆருக்கு நன்றி தெரிவித்த நடிகர் பாலகிருஷ்ணா.
  • என்டிஆர் மீது கேசிஆருக்கு அளவுகடந்த மதிப்பு.
  • சோஷல் ஸ்டடீஸ் பாடத்தில் 268 வது பக்கத்தில் என்டிஆர் வாழ்க்கை வரலாறு.
  • மகிழ்ச்சி தெரிவித்து மக்கள் பாராட்டு.

தெலங்காணா முதல்வர் கேசிஆருக்கு மறைந்த முதல்வர் என்டிஆர் மீது மிகுந்த கௌரவமும் மதிப்பும் உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. ‘என்டிஆர் ஒரு சரியான ஆண்மகன்’ என்று பல சந்தர்ப்பங்களில் கேசிஆர் பேசியுள்ளார். அதுமட்டுமின்றி என்டிஆர் மீது உள்ள மதிப்பால் தன் மகனுக்கு தாரகராமாராவு என்று பெயர் வைத்துள்ளார்.

இப்போது தெலங்காணா பத்தாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் என்டிஆர் வாழ்க்கையை ஆதாரமாகக் கொண்ட ஒரு பாடத்தை வைத்துள்ளார். சோஷல் ஸ்டடீசில் 268 ம் பக்கத்தில் என்டிஆர் தொடர்பான முக்கிய அம்சங்களை குறிப்பிட்டுள்ளார். என்டிஆர் வாழ்க்கை வரலாற்றை பாடப்புத்தகத்தில் வைத்ததற்கு அனைவரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

ALSO READ:  பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

தன் தந்தையின் வாழ்க்கை பற்றி எதிர்கால சந்ததி அறியும் வண்ணம் பாடப்புத்தகத்தில் அறிமுகம் செய்தது குறித்து நந்தமூரி பாலகிருஷ்ணா மகிழ்ச்சி தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் தன் பேஸ்புக்கில் முதல்வருக்கு நன்றி தெரிவித்து போஸ்ட் பதிவிட்டுள்ளார்.

telangana-nt-ramarao
telangana-nt-ramarao
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img