கொரோனா டைம்… எங்களுக்கும் வருமானமே இல்ல.. அதான் கூட ரேட்டு! டாஸ்மாக் பணியாளர் ‘பகீர்’!

tasmac-bottle
tasmac-bottle

கொரோனா காலம்… எங்களுக்கும் வருமானமே இல்லை… அதனால்தான் கூடுதல் விலைக்கு விற்கிறோம்… என்று டாஸ்மாக் கண்காணிப்பாளர் அளித்த பதிலால் மது பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்த வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழகம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து மதுக் கடைகள் திறக்கப்பட்டு மது விற்பனை நடைபெற்று வருகிறது,

இந்த நிலையில் மதுரை சோலை அழகுபுரம் பகுதியில் உள்ள கடை எண் 5169 – என்ற கடையில் தொடர்ந்து மது பாட்டில்களை அதிக விலைக்கு விற்பனை செய்வதாக புகார் எழுந்தது! இந்நிலையில் மது பிரியர் ஒருவர் அந்தக் கடைக்கு மது வாங்கச் சென்றபோது கொரோனா காலத்தில் வருமானம் இல்லை… இப்படி மதுபாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வைத்து விற்பனை செய்வது நியாயமா? எனக் கேட்டார்.

அதற்கு கொரோனா காலம் எங்களுக்கும் தான்! அதான் வருமானம் இல்ல ! என்ன செய்யிறது…?! அதனாலதான் பத்து ரூபாய் கூடுதலாக வாங்குறோம் என டாஸ்மாக் கடையின் கண்காணிப்பாளர் கூறியுள்ளார்.

இது, மதுப்பிரியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது! மதுக்கடைகளில் உரிய விலைக்கு விற்பனை செய்ய வேண்டும் ரசீது வழங்க வேண்டும் என அரசு அறிவித்த நிலையில், கொரோனா காலம்… வருமானமே இல்ல… என்று கூறி கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக கண்காணிப்பாளர் கூறியது மது பிரியர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

வெறுத்துப் போன அந்த மதுப் பிரியர் இந்த நிகழ்வை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வைரல் ஆர்கி உள்ளார்! இந்த வீடியோ தற்போது சமூகத் தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

அந்த வீடியோ பதிவு…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories