கொரோனா அறிகுறி உள்ளவர்களுக்கு, ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனையில், கொரோனா இல்லை என வந்தாலும் அவர்களுக்கு மறுபரிசோதனை செய்ய வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அத்தகைய நபர்களுக்கு ஆர்டி- பிசிஆர் சோதனை நடத்தி கொரோனா குறித்து உறுதி செய்ய வேண்டும். கொரோனா உறுதியானவர்கள், மற்றவர்களுக்கு பரப்புவதை அனுமதிக்கக்கூடாது என மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து சுகாதார அமைச்சகம் உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அறிகுறி இருந்தாலும் கொரோனா நெகட்டிவ் வந்த அனைவருக்கும் மறுபரிசோதனை கட்டாயம் என்று, அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய சுகாதார அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ரேபிட் கிட் பரிசோதனையில் கொரோனா இல்லை என வந்தாலும் சிலருக்கு அறிகுறி. இருப்பது தெரியவந்தது..
ஆர்டி-பிசிஆர் மூலம் சோதனை செய்து பாஸிட்டிவ் எதுவும் இல்லை என உறுதிப்படுத்தவேண்டும்.
ஆர்டி-பிசிஆர் சோதனைக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது, மத்திய சுகாதார அமைச்சகம். அதன்படி, கொரோனா நோய் பரவலை தடுக்க ஆர்டி-பிசிஆர் மூலம் சோதனை செய்ய வேண்டும்.
பாசிட்டிவ் நோயாளிகளை தவறவிடவில்லை என்பதை மாநிலங்கள் உறுதிப்படுத்த வேண்டும்.
தவறான நெகட்டிவை கண்டறிந்து தனிமைப்படுத்தி, மருத்துவமனையில் சேர்க்க வலியுறுத்தல்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு அதிகாரி அல்லது ஒரு குழுவை நியமித்து கண்டறிய வேண்டும்.
ரேபிட் சோதனை விவரங்களை பகுப்பாய்வு செய்து, கொரோனா இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்.. என்று அதில் குறிப்பிடப் பட்டுள்ளது.