இனி நீ ஐஏஎஸ் அதிகாரி ஆவாய்… உதவி கேட்டு வந்த இளைஞனுக்கு சோனுசூட் அபயம்!

Published:

sonu-sood-tweet
sonu-sood-tweet

சார் ப்ளீஸ்… என்று இளைஞனின் வேண்டுதல். தன் கல்விக்காக உதவி செய்ய வேண்டுமென்று ட்வீட்.
உதவி கோரி விண்ணப்பம்.

உதவி செய்வேன் என்று வாக்களித்த சோனு சூட்.

கொரோனா சமயத்தில் ஏழைகளுக்கு உதவி செய்யத் தொடங்கிய சினிமா நடிகர் சோனு சூட் அதன் பிறகு கூட தன் உதவியை தொடர்ந்து செய்துகொண்டு வரும் செய்தி தெரிந்ததே.

உதவி கோரிய உடனே, உனக்கு நான் உள்ளேன், நண்பா! என்று அபயஹஸ்தம் அளிக்கும் சோனு சூட் அண்மையில் மீண்டும் ஒருமுறை தன் நல்ல மனதை வெளிப்படுத்தியுள்ளார்.

சோனு சூட் சார்! ப்ளீஸ்… ப்ளீஸ்… சார்! என் கல்வி படிப்புக்காகத்தான் கேட்கிறேன். என் கிளாசில் நான்தான் டாப்பர். ஆனால் என்னிடம் பணம் இல்லை. தயவு செய்து இந்த கடிதத்தை படியுங்கள். என் படிப்புக்காக உதவி செய்யுங்கள். நான் ஐஏஎஸ் அதிகாரியாக ஆக வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்… என்று கரிமுல்லா என்ற இளைஞன் டுவிட் செய்துள்ளார்.

ALSO READ:  சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!
sonu-sood-tweet2
sonu-sood-tweet2

இதுகுறித்து பதில் அளித்த சோனூசூட், நீ ஐஏஎஸ் அதிகாரி ஆவாய். நான் உதவி செய்வேன்.. என்று டுவிட்டரில் அறிவித்துள்ளார்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img