December 5, 2025, 1:13 PM
26.9 C
Chennai

தீபாவளி அன்று… மழை கொட்டித் தீர்க்குமாம்! இன்னும் என்ன..?! வானிலை ஆய்வு மைய எச்சரிக்கை!

imd-chennai-image-nov-11
imd-chennai-image-nov-11

ஏற்கெனவே தீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகள் வெடிக்கலாம் என அரசு நேரம் ஒதுக்கிக் கொடுத்துள்ள நிலையில், தீபாவளி அன்று கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள மழை எச்சரிக்கை தீபாவளிக்கு பட்டாசு வெடித்து மகிழ்பவர்களின் மனத்தில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில், செப்.11 இன்று முதல் நான்கு நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று, சென்னை வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் வட கிழக்குப் பருவமழை தொடங்கி இரண்டு வாரம் கடந்துள்ள நிலையில், கடந்த மூன்று நாட்களாக வறண்ட வானிலை நிலவியது. இந்நிலையில் இன்று முதல் 4 நாட்களுக்கு சென்னை முதல் தென்காசி மாவட்டம் வரை பெரும்பாலான மாவட்டங்களில், கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை கொடுத்துள்ளது.

சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது:

தமிழகம் முழுதும் இன்று முதல் 14ஆம் தேதி வரை பரவலாக இடி, மின்னலுக்கு வாய்ப்பு உள்ளது. தமிழக கடலோர பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழையும் மற்ற மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக் கூடும்.

tn-nov-11-forecast
tn-nov-11-forecast

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலுார், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் நாளை கன மழையோ, மிக கனத்த மழையோ பெய்யும். மற்ற இடங்களில் மிதமான மழை பெய்யும்.

வரும் 13ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். மறுநாள் அதாவது 14ம் தேதி, தமிழகம், புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும். உள் மாவட்டங்கள் சிலவற்றில் இடியுடன் கூடி மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் இன்று பல இடங்களில் மிதமான மழையும் சில இடங்களில் கனமழையும் பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மைய அறிக்கையில் தெரிவிக்கப் பட்டிருந்தது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் அவ்வப்போது கனமழையும் பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கு ஏற்ப, சென்னையில் இன்று காலை முதலே பரவலாக மழை பெய்து வருகிறது. விவேகானந்தர் இல்லம், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், ராயப்பேட்டை, சேப்பாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் காலை முதலே சாரல் மழை பெய்தது.

சென்னை வானிலை ஆய்வு மைய கனமழை அறிவிப்பை தொடர்ந்து, நாளை மற்றும் வரும் 14ஆம் தேதிக்கு மிக கனமழைக்கான ‘ஆரஞ்ச் அலர்ட்’ எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கனமழை பெய்தால், வெள்ளப்பெருக்கு ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள, வருவாய் துறை மற்றும் பொதுப்பணி துறையினருக்கும் வானிலை மையம் தகவல் அனுப்பி உள்ளது.

மேலும், தமிழக கடலோர பகுதிகளில் இன்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் அந்தப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப் பட்டிருக்கிறது.

அதே போல், இந்திய வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையில், இன்று முதல் வரும் 17 ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கலில் இடி-மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப் பட்டிருக்கிறது.

குறிப்பாக, கனமழையால் ஏற்படும் சவால்களை சமாளிக்கவும் அரசு தயார் நிலையில் இருக்கவும் தமிழகத்துக்கு இன்றும், நாளை மறுநாளும் (13ம் தேதி) மற்றும் 15 ஆம் தேதியிலும் மஞ்சள் அலர்ட் விடப் பட்டிருக்கிறது. 12ம் தேதி நாளை மற்றும் தீபாவளி தினமான 14 ஆம் தேதியில் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் கொடுக்கப் பட்டிருக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories