பக்தர்களுக்கு அனுமதி இன்றி… திருச்செந்தூர் சூரசம்ஹாரமும்… கோயிலுக்குள்!

tiruchendur
tiruchendur

திருச்செந்தூர் சூரசம்ஹாரம் கடற்கரை பகுதியில் நடைபெறாது, கோவில் பிரகாரத்தில் நடைபெறும்… பக்தர்கள் அனுமதி கிடையாது… என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெற இருக்கும் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் வருகின்ற 15.11.2020 முதல் 26.11.2020 ஆகிய 12 நாட்கள் நடைபெற இருக்கும் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு இன்று (12.11.2020) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் கோவில் வளாகத்தை சுற்றியுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். பின்னர் திருச்செந்தூர் சிவமுருகன் திருமண மண்டபத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேசும்போது ஏற்கனவே கொரோனா தொற்றை கட்டுபடுத்துவதற்காக தமிழக அரசால் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் கந்த சஷ்டி திருவிழா வருகின்ற 15.11.2020 முதல் 26.11.2020 வரை 12 நாட்கள் நடைபெறும். இதில் 20.11.2020 அன்று சூரசம்ஹார நிகழ்வும், 21.11.2020 அன்று திருக்கல்யாணமும் முக்கியமான நிகழ்வுகளாகும்.

இந்த இரண்டு நாட்களுக்கும் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. இந்த வருடம் சூரசம்ஹார நிகழ்ச்சி கடற்கரையில் நடைபெறாது. கோயில் வளாகத்திற்குள் நடைபெறும்.

ALSO READ:  தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?
tiruchendur3
tiruchendur3

சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாணம் நடைபெறும் நாட்களை தவிர மற்ற நாட்களில் ஒரு நாளைக்கு 10000 பேர் வீதம் காலை 5.00 மணி முதல் இரவு 6.00 மணி வரை சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கபடுவர்.

கோவில் பிராகார பகுதியில் பக்தர்கள் விரதம் இருக்கவோ, அங்கபிரதட்சிணம் செய்யவோ மற்றும் தனியார் அமைப்புகளின் மூலம் அன்னதானம் வழங்குதல் போன்றவையோ தடை செய்யப் பட்டுள்ளது.

அதே போன்று இங்குள்ள விடுதிகள் மற்றும் மடங்களில் பேக்கேஜ் (ஒரு வார காலத்திற்கு) முறையில் புக் செய்து தங்குவதற்கு இந்த வருடம் தடைசெய்யப்பட்டுள்ளது.

20.11.2020 மற்றும் 21.11.2020 ஆகிய இரண்டு தினங்கள் எந்த விடுதியிலும் ஆட்கள் தங்குவதற்கு அனுமதி கிடையாது… அதற்கு விடுதி உரிமையாளர்கள் ஒத்தழைப்பு தரவேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது

20.11.2020 மற்றும் 21.11.2020 அன்று எல்லைகளில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு கோவில் வளாகத்திற்குள் யாரும் வராதபடி கண்காணிப்பை தீவிரபடுத்த சுமார் 1500 போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படுவர் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தெரிவித்தார்.

ALSO READ:  தாமிரபரணிக் கரை ஆலயத்தில்... வழிபாட்டில் திருவள்ளுவர்!
tiruchendur4
tiruchendur4

இக்கூட்டத்தில் திருச்செந்தூர் கோட்டாட்சியர் தனபிரியா, வட்டாட்சியர் முருகேசன் மற்றும் விடுதிகள் அசோசியேசன் தலைவர் அருள், செயலாளர் ரமணி உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

திருச்செந்தூர் உதவி காவல் கண்காணிப்பாளர்ஹர்ஷ் சிங், திருச்செந்தூர் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் முத்துராமன், கோவில் காவல் நிலைய ஆய்வாளர் ஞானசேகரன், குலசை காவல் நிலைய ஆய்வாளர் ராதிகா, ஆறுமுகநேரி காவல் நிலைய ஆய்வாளர் செல்வி உள்ளிட்ட காவல்துறையினர் உடனிருந்தனர்.

திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடைபெற உள்ள கந்தசஷ்டி விழாவிற்கு மேற்கொள்ளவுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த அரசாணை ஒன்றும் வெளியிடப் பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள அரசாணைக் குறிப்பு…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 10 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட்முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்இந்திய அணி முதல்...

முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

அனைவரின் நன்மைக்காகவும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகவும் பாடுபடுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்களே என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே ஒட்டுமொத்த நாடும் செழிப்படைந்து முழுமையான வளர்ச்சியை நோக்கி முன்னேற வேண்டுமானால்  ஆட்சி நிர்வாகம் சனாதன தர்மத்தின் அடிப்படையில் வழிநடத்தப்பட வேண்டும்.

பஞ்சாங்கம் ஜூன் 8 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 10 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட்முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்இந்திய அணி முதல்...

முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

அனைவரின் நன்மைக்காகவும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகவும் பாடுபடுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்களே என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே ஒட்டுமொத்த நாடும் செழிப்படைந்து முழுமையான வளர்ச்சியை நோக்கி முன்னேற வேண்டுமானால்  ஆட்சி நிர்வாகம் சனாதன தர்மத்தின் அடிப்படையில் வழிநடத்தப்பட வேண்டும்.

பஞ்சாங்கம் ஜூன் 8 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

அண்ணாமலையால் இளைய தலைமுறையினர் பலர் ஈர்க்கப்பட்டார்கள் என்பது உண்மை, ஆனால் பல தலைமுறைகளாக சித்தாந்தத்தால் பெரு வளர்ச்சி கண்ட கட்சி பாரதீய ஜனதா என்பதை மறந்துவிடக் கூடாது.

வெல்டன் அமித்ஷா… வாழ்த்துகள் அண்ணாமலை!

மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி என்ற இந்திய தேசியத்தின் அடிப்படை. பாரதிய ஜனதா கட்சியில் அதை நடைமுறைப்படுத்துவதில் எழுந்த சிக்கலுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு இது.

பஞ்சாங்கம் ஜூன் 7 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories