December 5, 2025, 5:18 PM
27.9 C
Chennai

அழகிரி… அரசியல்… அதிர்வுகள்! நவ.20ல் ஆதரவாளர்களுடன் ஆலோசனை!

alagiri
alagiri

மு.க.அழகிரி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்! நவம்பர் 20ஆம் தேதி அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கை குறித்து மு.க.அழகிரி ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திமுக தலைவராக இருந்த கருணாநிதி தன் மகன் ஸ்டாலின் அடுத்த திமுக., தலைவர் ஆக்கப் பட வேண்டும் என்பதற்காக, இன்னொரு மகன் அழகிரியை ஓரங்கட்டி வைத்திருந்தார். ஆனால், ஸ்டாலின் எதிர்ப்பு நடவடிக்கைகளில் அழகிரி ஈடுபடவே, ஸ்டாலினுக்கு வழி ஏற்படுத்திக் கொடுப்பதற்காக, அழகிரியை கட்சியில் இருந்து நீக்கினார்.

கருணாநிதி உடல்நலம் குன்றி படுத்திருந்த காலம் முதல், கடைசி வரை அழகிரி திமுக.,வில் மீண்டும் சேர்த்துக் கொள்ளப் படவில்லை. கருணாநிதி மறைந்த பின்னரும், அழகிரியும் அழகிரி ஆதரவாளர்களும் திமுக.,வில் சேர்த்துக் கொள்ளப் படவே இல்லை. ஸ்டாலின் திமுக., தலைவர் ஆன பின்னர், அழகிரிக்கு பலம் வாய்ந்த பகுதி என்று கருதப் பட்ட மதுரை மற்றும் தென்மாவட்டங்களை ஸ்டாலின் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். தனக்கு ஆதரவானவர்களை கட்சிப் பொறுப்புகளில் கொண்டு வந்து, அழகிரி ஆதரவாளர்களை முற்றிலும் களை எடுத்தார்.

alagiri1
alagiri1

இதனால், மு.க.அழகிரிக்கு திமுக., மீதான பிடி முற்றிலும் போனது. அழகிரியின் மகன் துரை தயாநிதியாவது திமுக.,வின் பொறுப்புகளில் ஏதாவது கொண்டுவரப் படுவார் என்று கட்சியினர் எதிர்பார்த்தனர். ஆனால், ஸ்டாலின் மகன் உதயநிதியே கட்சியைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டார்.

கடந்த வருடம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் கூட, தென்மாவட்டங்களில் உள்ள அழகிரியின் செல்வாக்கால் ஸ்டாலின் அடிவாங்குவார் என்றெல்லாம் கூறப்பட்டது. ஆனால், அழகிரியின் செல்வாக்கு அப்படி ஒன்றுமில்லை என்று காட்டுவது போல் தென்மாவட்டங்களில் ஸ்டாலின் கையே ஓங்கியிருந்தது. அனைத்து தொகுதிகளிலும் திமுக., கூட்டணிக் கட்சிகள் வென்று, மு.க.அழகிரியின் தென்மாவட்ட செல்வாக்கை ஒன்றுமில்லாமல் காட்டியது.

இப்படி சுமார் 3 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலை விட்டே முற்றிலும் ஒதுங்கியிருக்கும் அழகிரி, ஏதாவது தனிப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு வரும் போதெல்லாம் திமுக மற்றும் ஸ்டாலின் குறித்து ஏதாவது கருத்துகளைத் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்துவார்.

alagiri
alagiri

இந்த நிலையில் எதிர்க்கட்சியாக இருக்கும் போதே உங்களை மதிக்காத ஸ்டாலின் ஆளுங்கட்சியாகி விட்டால் உங்கள் நிலை மோசமாகிவிடும் என்று அழகிரி ஆதரவாளர்கள் தொடர்ந்து அழகிரியை உசுப்பேத்தி வருகின்றனர். இனி திமுக.,வில் வாய்ப்பு இல்லை என்பதால், கருணாநிதி பெயரில் ஒரு கட்சியை தொடங்குங்கள் என்று அழகிரியை அவரது ஆதரவாளர்கள் வற்புறுத்தி வருகின்றனர்.

ரஜினி அரசியலுக்கு வருவார், அவர் மூலம் நெருங்கிய நட்பில் இருக்கும் அழகிரியும் கட்சியில் இணைந்து அரசியல் நடவடிக்கைகளைத் தொடரலாம் என்று எதிர்பார்த்தனர். ஆனால், ரஜினி கட்சி தொடங்கும் நிலையில் இல்லை என்று தகவல்கள் வெளியாகிவரும் சூழலில், மு.க. அழகிரியே தனி கட்சிக்கான பணிகளை தொடங்கியுள்ளாராம்.

நவ.20ல் ஆலோசனை, டிசம்பரில் புதிய கட்சி அறிவிப்பு என்ற கட்டத்தை நோக்கி அழகிரி நகர்ந்து வருவதாகக் கூறப் படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories