கொரோனா சிதைத்த மனநலனை மீட்டெடுக்க… இந்த 2 நாள் விர்சுவல் மீட்டில் கலந்து கொள்ளுங்க!

swl-meet1
swl-meet1

உலகெங்கும் இப்போது கோவிட் வைரஸ் பரவல் காரணமாக, பொது முடக்கம் அறிவிக்கப் பட்டு, பல்வேறு நாடுகளிலும் பொதுமக்கள் தங்கள் இருப்பிடங்களில் முடங்கிக் கிடக்கின்றனர். இதனால், வயதானவர்கள் மற்றும் இளம் தலைமுறையினர் தனிமை மற்றும் மன அழுத்தம் ஆகியவற்றால் பீடிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்காக நாளையும் மறுநாளும் இரு நாட்கள் மெய்நிகர் உச்சிமாநாடு (விர்சுவல் சம்மிட்) ஒன்று நடைபெறுகிறது. இதில், உலகம் முழுதிலும் இருந்து சுமார் ஒரு லட்சம் பேர் பயனடைவர். மனநல சுகாதாரத்தைப் பேணவும், மன அழுத்தத்தை சமாளிக்கும் நுட்பங்களை ஊக்குவிப்பதிலும் இந்த இரு நாள் மாநாடு உதவிபுரியும்.

இதற்கு 50 உயர்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் 2020 நவம்பர் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மெய்நிகர் மாணவர் ஆரோக்கியம் மற்றும் தலைமை ( virtual student wellness and leadership (SWL) summit) உச்சிமாநாட்டை நடத்துகிறார்கள்.

இவர்கள், மனநலம் பேணுவது குறித்து உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு எடுத்துக் கூறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளனர். , அமெரிக்காவில் உள்ள பல பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுடன் ஒருங்கிணைந்தும், ஐ.நா. ஆரோக்கிய இலக்குகளுக்காக ஹார்ட்ஃபுல்னெஸ் இன்ஸ்டிடியூட் மற்றும் யுனெஸ்கோ இருக்கை உடன் இணைந்தும் SWL செயல்படுகிறது.

தொற்றுநோய் பரவத் தொடங்கியதில் இருந்து 74%க்கும் மேற்பட்ட வயதானவர்கள் COVID-19 தொற்றுநோயின் விளைவாக ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மோசமான மனநலச் சிதைவு அறிகுறிகல் இருப்பதாக புகார் தெரிவிக்கின்றனர். இதற்காக உள்ள பிரத்யேக ஹாட்லைனில் அளிக்கப் பட்டுள்ள குறுஞ்செய்தி புகார்கள், 1000% க்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.

ALSO READ:  பாலமேடு - வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

இந்த தொற்றுநோய் உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு மன அழுத்தத்தின் களமாக மாறியுள்ளது. இந்தச் சூழலில் அவர்களுக்கு நேர்மறையான மனநலப் பழக்கங்களை வளர்ப்பது எவ்வளவு முக்கியம் என்பதை நாம் நன்றாக உணரலாம்.

இளைஞர்களைப் பொறுத்தவரை, இந்த கோவிட் 19 தொற்றுநோய் அவர்களின் மன அழுத்த அளவிலும் பதட்டத்திலும் இன்னும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. பதின்ம வயதினர் 1500 பேரிடம் மேற்கொண்ட ஓர் ஆய்வில், அவர்களில் 10ல் 7 பேர் தங்கள் மனநலனுடன் ஏதேனும் ஒரு வடிவத்தில் போராடுவதாகக் குறிப்பிட்டுள்ளனர். அவர்களில் 45% பேர் தொற்றுநோய் மற்றும் தொடர்புடைய அழுத்தங்களின் விளைவாக, வழக்கமாக செயல்படுவதை விட அதிக மன அழுத்தத்தை உணர்ந்துள்ளனர். குறிப்பாக, 61% பேர் தொற்றுநோயின் விளைவாக அவர்களின் தனிமை வலி அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

எனவே, இந்த விர்ச்சுவல் மாநாடு உலகெங்கிலும் உள்ள 100,000க்கும் மேற்பட்ட மக்களை இணைக்கும்! இம்போஸ்டர் சிண்ட்ரோம், மனநலம் 101, நீங்கள் உணரும் விதத்தை உணர்வது சரியானதே, இளமை பருவத்தில் மனநல சவால்களை வழிநடத்துவது மற்றும் பள்ளியிலும் வீட்டிலும் மன ஆரோக்கியம் குறித்த விவாதத்தை எவ்வாறு உருவாக்குவது? ஆகிய தலைப்புகளில் இந்த மாநாடு நடைபெறுகிறது.

ALSO READ:  நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!
swl-meet
swl-meet

டாக்டர் ஜேம்ஸ் ஆர். டோட்டி, ஒய்.எம்.எச் திட்டத்தின் நிறுவனர் ராண்டி சில்வர்மேன் மற்றும் ‘நோ லெட்டிங் கோ’வின் எழுத்தாளர் / தயாரிப்பாளர், டாக்டர் பார்த்தா நந்தி, எம்மி விருது பெற்ற நிகழ்ச்சி, டாக்டர் நந்தி ஷோ மற்றும் ஹார்ட்ஃபுல்னஸ் தூதர் லேகா டேவ் ஆகியோர் சிறப்புப் பேச்சாளர்களாக இதில் கலந்து கொள்கின்றனர்.

SWL கம்யூனிடியில் சேரவும், இந்தத் துறைகளில் உள்ள நிபுணர்களிடமிருந்து பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ளவும் www.swlmovement.org/register இல் பதிவு செய்யுங்கள்.
இதனை எஸ்.டபிள்யூ.எல் இயக்கத்தின் இணை நிறுவனர் லயா ஐயர் ஒரு செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Topics

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மே 31- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

ஆசிரியர் சமூகத்தின் கவலைகளுக்கு மதிப்பளித்து, அரசாங்கம் இந்த விஷயத்தில் இரக்கத்துடனும் உறுதியுடனும் செயல்படும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

பஞ்சாங்கம் மே 30 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories