December 5, 2025, 4:13 PM
27.9 C
Chennai

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால்… நிவர் புயலால் பாதிப்பு குறைவு: முதல்வர் எடப்பாடி!

edappadi-in-cuddalore
edappadi-in-cuddalore

புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கடலூர் மாவட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று, ஆய்வு செய்தார்.

வங்கக்கடலில் உருவான நிவர் புயல் இன்று அதிகாலை புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. இந்தப் புயலால் மழை கொட்டித் தீர்த்ததுடன், பலத்த காற்று காரணமாக வாழை மரங்கள், குடிசை வீடுகள், மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன. புயல் காரணமாக கடலூர் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதை அடுத்து, அதிகம் பாதிப்புக்கு உள்ளான கடலூர் மாவட்டத்தில் நேரடியாகச் சென்று மக்களைச் சந்தித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இதற்காக கடலூர் சென்ற முதல்வர் பழனிசாமி, புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்தார். ரெட்டிசாவடி குமாரமங்கலத்தில் விவசாய நிலங்களில் பாதிப்புகளை பார்வையிட்ட முதல்வரிடம், மாவட்ட ஆட்சியர் சஹாமுரி புயல் பாதிப்புகள் குறித்து விளக்கினார்.

edappadi-in-cuddalore1
edappadi-in-cuddalore1

பின்னர் துறைமுகம் பகுதியில் மீனவர்களிடம் பாதிப்புகள் குறித்து முதல்வர் கேட்டறிந்தார். அவருடன், அமைச்சர் எம்.சி.சம்பத் மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர். தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல்வர் நிவாரண பொருட்கள் வழங்கினார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி, இரவு பகல் பாராமல் பணியாற்றிய அமைச்சர்கள், அதிகாரிகள், காவல்துறையினருக்கு பாராட்டுகளைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்த போது… கடலூரில் சேதம் அதிகமாக இருக்கும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. சுமார் 2.3 லட்சம் பேர் முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்!

edappadi-in-cuddalore2
edappadi-in-cuddalore2

பயிர்க் காப்பீடு செய்திருந்தால் இழப்பீடும் பெற்றுத் தரப்படும். நிவர் புயலால் பெரிய அளவில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை ! நிவர் புயலை எதிர்கொள்ள முழுவீச்சில் தயாராக இருந்தோம்!

மாவட்ட ஆட்சியர்களுக்கும் முழுமையான அறிவுரை வழங்கப்பட்டது! தமிழ்நாடு அரசு எடுத்த அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் ‘நிவர்’ புயலால் பெரிய பாதிப்பு இல்லை !

edappadi-in-cuddalore3
edappadi-in-cuddalore3

கடலூரில் புயலால் சாய்ந்த 77 மின்கம்பங்கள் சரிசெய்யப்பட்டு மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது; அரசு அறிவித்த வழிமுறைகளை கடலூர் மாவட்டம் சரியாக பின்பற்றியதால் பெரியளவில் பாதிப்பு ஏற்படவில்லை!

நிவர் புயலால் கடலூர் மாவட்டத்தில் விழுந்த 321 மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டுவிட்டன; அனைவரும் ஒருங்கிணைந்து எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது என்று கூறினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories