ஷாகீன்பாக் முதல் பெங்களூர் கலவரம் வரை: பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் இடங்களில் சோதனை!

pfi
pfi

நாடு முழுதும் 9 மாநிலங்களில், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பி.எஃப்.ஐ) அமைப்பினரின் தொடர்புடைய  26 இடங்களில் மத்திய அமலாக்கத் துறை இயக்குநரகம் (இ.டி) வியாழக்கிழமை இன்று திடீர் சோதனைகளை மேற்கொண்டது.  பணமோசடி விசாரணையின் ஒரு பகுதியாக பி.எஃப்.ஐ தலைவர் ஓ எம் அப்துல் சலாம் மற்றும் கேரள மாநிலத் தலைவர் நஸருதீன் எலமாரோம் ஆகியோரின் இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

தமிழ்நாடு, கர்நாடகா, பீகார், உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், ராஜஸ்தான், டெல்லி மற்றும் கேரளாவின் மலப்புரம் மற்றும் திருவனந்தபுரம் மாவட்டங்களில் இந்த சோதனைகள் நடைபெற்று வருவதாக இன்று காலை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பண மோசடி தடுப்புச் சட்டத்தின் (பி.எம்.எல்.ஏ) விதிகளின் கீழ் இந்த மாநிலங்களின் குறைந்தது 26 இடங்களில் இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  இந்த ஆண்டு பிப்ரவரியில் நடந்த சிஏஏ எதிர்ப்பு கலவரத்தில் பிஎஃப்ஐயின் “நிதி பங்களிப்புகள்” குறித்து மத்திய புலனாய்வு நிறுவனம் விசாரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பி.எஃப்.ஐ தலைவரும் கேரள மாநில மின்சார வாரியத்தின் மூத்த அதிகாரியுமான சலாம் மற்றும் தீவிர இஸ்லாமிய அமைப்பின் பிற தலைவர்களின் அறிக்கைகளை மத்தியப் புலனாய்வு நிறுவனம் முன்பு பதிவு செய்திருந்தது.

இதனிடையே, இந்த சோதனைகள் குறித்து கருத்து தெரிவித்திருந்த பிஎஃப்ஐ அமைப்பு  “பி.எஃப்.ஐ தலைவர்களின் வீடுகளில் அமலாக்கத் துறை சோதனைகளை நடத்துகிறது. இது விவசாயிகளின் பிரச்சினையைத் திசைதிருப்பவும், பாஜக அரசாங்கத்தின் தோல்வியை மறைக்கவும் மேற்கொள்ளப் படும் முயற்சி” என்று கூறியது. 

“அரசியல் அமைப்பு நிறுவனங்களை அரசியல் கருவிகளாகப் பயன்படுத்துவதற்கான மற்றொரு எடுத்துக்காட்டு இது. இத்தகைய நடவடிக்கைகள் மூலம், நீதிக்கான குரல் எழும்புவதைத் தடுக்கவோ அல்லது உரிமைகளுக்கான ஜனநாயகப் போராட்டங்களை பலவீனப்படுத்தவோ முடியாது” என்று  அந்த அமைப்பின் சலாம் கூறினார். 

CAA எதிர்ப்பு கலவரம் தொடர்பாக பி.எஃப்.ஐ மற்றும் பீம் ஆர்மிக்கு இடையிலான “நிதி தொடர்புகள்” குறித்து விசாரிப்பதாக புலனாய்வு நிறுவனம் கடந்த மாதம் கூறியிருந்தது.

சீனியர் பி.எஃப்.ஐ தலைவர்களிடமிருந்து மீட்கப்பட்ட நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் பி.எஃப்.ஐ மற்றும் பீம் ஆர்மிக்கு இடையிலான நிதி தொடர்புகள் குறித்து அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது” என்று ஈ.டி.,  ட்வீட்டில் தெரிவித்திருந்தது.

இதனிடையே, கேரளாவின் பல்வேறு பகுதிகளில் ஈடி., நடத்திய சோதனைகளுக்கு எதிராக PFI  உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். அந்த கும்பல் திருவனந்தபுரம் மற்றும் கொச்சியில் ED அதிகாரிகளுக்கு எதிராக நாரா-இ-தக்பீர், அல்லாஹு அக்பர் உள்ளிட்ட கோஷங்களை எழுப்பியது.

தமிழகத்தில், குறிப்பாக தென்காசி மாவட்டம் அச்சம்புதூர் காவல் நிலைய சரகத்தில், பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினர் முகமது அலி ஜின்னா (S/0, நயினார் முகமது, கோவலன் கிணற்று தெரு, பண்பொழி) வீட்டில் மத்திய அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

Topics

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்… தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

தமிழ் மக்கள் யாரை மன்னிக்கவில்லை என்றாலும் ஒரு நடிகனை கண்டிப்பாக மன்னிப்பார்கள்.. வாழ்த்துகள்!

Entertainment News

Popular Categories