கசந்தது காங்கிரஸ்; குஷ்புவைத் தொடர்ந்து… மீண்டும் பாஜக., பாசறைக்குத் திரும்பும் விஜயசாந்தி!

vijayashanthi-kushboo-rajini
vijayashanthi-kushboo-rajini

நடிகையும் அரசியல்வாதியுமான விஜயசாந்தி நாளை பாஜக.,வில் இணையவுள்ளதாக அக்கட்சித் தலைவர் விவேக் வேங்கடசாமி தெரிவித்துள்ளார்.

அண்மையில், நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு காங்கிரஸில் இருந்து விலகி பாஜக.,வில் இணைந்தார். தொடர்ந்து நடிகை விஜயசாந்தியும் பா.ஜ.க.வில் விரைவில் இணைவார் எனத் தகவல்கள் கசிந்தன. இந்நிலையில் விஜயசாந்தி தற்போது பாஜக.,வில் இணைவது உறுதியாகியுள்ளது.

இது குறித்து தில்லியில் பாஜக தலைவர் விவேக் வேங்கடசாமி கூறுகையில், விஜயசாந்தி நாளை முறைப்படி பாஜக.,வில் இணைவார். அவர் இன்று அமித்ஷாவை சந்தித்தார். கே.சி.ஆரால் ஓரங்கட்டப்பட்ட அனைவரும் பாஜகவில் சேர்வார்கள் என்று கூறினார்.

mannan-scene
mannan-scene

கடந்த 1998-ஆம் ஆண்டு பாஜக.,வில் இருந்துதான் நடிகை விஜயசாந்தி தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினாா். அப்போது அவருக்கு பாஜக., மகளிா் அணி செயலாளா் பதவி அளிக்கப்பட்டது. 2005இல் பாஜக.,வில் இருந்து வெளியேறினார். பின்னர் பா.ஜ.க.வில் இருந்து விலகி அவர் தனிக்கட்சி தொடங்கினார். 2005 முதல் 4 வருடங்கள் தல்லி தெலங்கானா கட்சியிலும் பின்னர் 2009 முதல் தெலங்கானா ராஷ்டிரிய சமிதியிலும் இருந்தார். 2014இல் டிஆர்எஸ்ஸில் இருந்து விலகி, காங்கிரஸில் இணைந்தார். இப்போது பாஜக.,வில் இணையவுள்ளார் விஜயசாந்தி.

தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. ரஜினி கட்சி தொடங்கவுள்ள நிலையில், அவருடன் திரையுலகில் இணைந்து பயணித்த குஷ்பு, விஜயசாந்தி இருவரும் வரும் சட்டமன்றத் தேர்தலிலும் பிரசாரக் களம் காண்பார்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Topics

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

இந்த விஷ்ணு கோவில் அல்லது விஷ்ணுப் பாறைகளுக்கு அருகே மேலு இரண்டு பாறைத் தொடர்களுக்கு ப்ரும்மா பாறை, ராம் பாறை என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.

Entertainment News

Popular Categories