February 20, 2026, 7:21 AM
24.5 C
Chennai

சுபாஷிதம்: செல்வத்தின் பயன்!

subhashitam-1

சுபாஷிதம்…ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

52. செல்வத்தின் பயன்

ஸ்லோகம்: 

தானம் போகோ நாச: திஸ்ரோ கதயோ பவந்தி வித்தஸ்ய |
யோ ந ததாதி ந புங்க்தே தஸ்ய த்ருதீயா கதிர்பவதி ||
-பர்த்ருஹரி நீதி -35 

பொருள்:

செல்வத்திற்கு மூன்று பயன்கள். தேவையானவருக்கு தானம் அளிப்பது, தான் அனுபவிப்பது, திருடர்களால் வரும் இழப்பு. தானமும் செய்யாமல், தானும் அனுபவிக்காமல் இருந்தால் செல்வத்திற்கு இழப்பு ஏற்படும்.

விளக்கம்:

கடவுள் அளித்த ஐஸ்வர்யத்திற்கு நாம் பாதுகாப்பாளர் (ட்ரஸ்டி) என்று உணரவேண்டும்.  உரிமையாளர் என்று கருதக் கூடாது என்கிறது இந்த ஸ்லோகம். 

பிறரோடு பகிர்ந்து கொள்வதே செல்வம் படைத்திருப்பதன் முதல் பிரயோஜனம். அதன் பிறகுதான் நாம் அனுபவிப்பது என்று தெரிவிக்கும் உயர்ந்த ஸ்லோகம் பர்த்ருஹரி அருளியது. 

உலகில் யாராவது ஒரு சிலரிடம் மட்டுமே செல்வம் இருந்தால் அது அமைதியின்மைக்கு வழிவகுக்கும். உறவினர்களிடையிலோ, சமுதாயத்திலோ,  தேசங்கள் இடையிலோ இந்த நிலை நன்மை பயக்காது. செல்வத்தின் பயனை அறிந்து அதன் நன்மை தீமைகளை உணர்ந்து தேவை இருப்பவர்களுக்கு தானம் செய்ய வேண்டும்.

வறியவர்கள் இல்லாத சமுதாயம் உருவாக வேண்டும். முன்பு செல்வந்தர்கள் சத்திரம் கட்டினார்கள். மனிதனின் அடிப்படைத் தேவைகளான உணவு, இருப்பிடப் பிரச்சினைகளை தீர்ர்த்தார்கள். சுயநலமின்றி சேவைகளை ஆற்றினார்கள். இல்லாதோருக்குக் கொடுப்பது கடமை என்ற சுய உணர்வோடு தனக்கு எந்தவித உதவியும் செய்யாதவர்களுக்குக் கூட தக்க சமயத்தில் தகுதியானவர்களுக்கு அளிக்கும் தானம் சாத்வீக தானம் என்று பகவத்கீதை குறிப்பிடுகிறது.

பிறரோடு பகிர்ந்து கொள்ளும் குணம் நம் பண்பாட்டின் ஒரு பகுதி. அதிதிகளைத் தேடி உணவளிக்கும் பழக்கம் நம்முடையது. அவ்வாறு பிறருக்கும் அளிக்காமல்,  தானும் சாப்பிடாமல் இருந்தால் அந்த உணவு என்னவாகும்? ஊசிப் போகும். செல்வமாக இருந்தால் அரசனுக்குச் சேரும். அல்லது திருடன் களவாடிச் செல்வான். அல்லது அருகதையற்றவர்களைச் சென்றடையும்.

நிறைய சம்பாதியுங்கள்! சம்பாதித்த செல்வத்தை நல்ல முறையில் பயன்படுத்துங்கள் என்று போதனை இந்த ஸ்லோகத்தில் கிடைக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

Topics

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

உணவே மருந்து! சர்க்கரை, இதய நோய்களில் இருந்து காத்துக் கொள்க!

இவ்வாறு உணவை சரிவிகிதமாக எடுத்து உடன் உடற்பயிற்சியையும் சேர்த்தால், நோயின்றி வாழ்வீர்கள் என்பது திண்ணம்.

ரம்ஜான்-க்காக கூடுதல் செலவு எனினும் தாராள நிதி ஒதுக்கீடு! கோவில்கள் என்றால் பாரபட்சம்!

இல்லை என்றால் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இந்து சமுதாயம் தனது இந்து ஓட்டு வங்கியின் மூலம் திமுக அரசுக்கு தக்க பதிலடி தந்தே தீரும்

Entertainment News

Popular Categories