December 5, 2025, 5:08 PM
27.9 C
Chennai

சுபாஷிதம்: செல்வத்தின் பயன்!

subhashitam-1

சுபாஷிதம்…ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

52. செல்வத்தின் பயன்

ஸ்லோகம்: 

தானம் போகோ நாச: திஸ்ரோ கதயோ பவந்தி வித்தஸ்ய |
யோ ந ததாதி ந புங்க்தே தஸ்ய த்ருதீயா கதிர்பவதி ||
-பர்த்ருஹரி நீதி -35 

பொருள்:

செல்வத்திற்கு மூன்று பயன்கள். தேவையானவருக்கு தானம் அளிப்பது, தான் அனுபவிப்பது, திருடர்களால் வரும் இழப்பு. தானமும் செய்யாமல், தானும் அனுபவிக்காமல் இருந்தால் செல்வத்திற்கு இழப்பு ஏற்படும்.

விளக்கம்:

கடவுள் அளித்த ஐஸ்வர்யத்திற்கு நாம் பாதுகாப்பாளர் (ட்ரஸ்டி) என்று உணரவேண்டும்.  உரிமையாளர் என்று கருதக் கூடாது என்கிறது இந்த ஸ்லோகம். 

பிறரோடு பகிர்ந்து கொள்வதே செல்வம் படைத்திருப்பதன் முதல் பிரயோஜனம். அதன் பிறகுதான் நாம் அனுபவிப்பது என்று தெரிவிக்கும் உயர்ந்த ஸ்லோகம் பர்த்ருஹரி அருளியது. 

உலகில் யாராவது ஒரு சிலரிடம் மட்டுமே செல்வம் இருந்தால் அது அமைதியின்மைக்கு வழிவகுக்கும். உறவினர்களிடையிலோ, சமுதாயத்திலோ,  தேசங்கள் இடையிலோ இந்த நிலை நன்மை பயக்காது. செல்வத்தின் பயனை அறிந்து அதன் நன்மை தீமைகளை உணர்ந்து தேவை இருப்பவர்களுக்கு தானம் செய்ய வேண்டும்.

வறியவர்கள் இல்லாத சமுதாயம் உருவாக வேண்டும். முன்பு செல்வந்தர்கள் சத்திரம் கட்டினார்கள். மனிதனின் அடிப்படைத் தேவைகளான உணவு, இருப்பிடப் பிரச்சினைகளை தீர்ர்த்தார்கள். சுயநலமின்றி சேவைகளை ஆற்றினார்கள். இல்லாதோருக்குக் கொடுப்பது கடமை என்ற சுய உணர்வோடு தனக்கு எந்தவித உதவியும் செய்யாதவர்களுக்குக் கூட தக்க சமயத்தில் தகுதியானவர்களுக்கு அளிக்கும் தானம் சாத்வீக தானம் என்று பகவத்கீதை குறிப்பிடுகிறது.

பிறரோடு பகிர்ந்து கொள்ளும் குணம் நம் பண்பாட்டின் ஒரு பகுதி. அதிதிகளைத் தேடி உணவளிக்கும் பழக்கம் நம்முடையது. அவ்வாறு பிறருக்கும் அளிக்காமல்,  தானும் சாப்பிடாமல் இருந்தால் அந்த உணவு என்னவாகும்? ஊசிப் போகும். செல்வமாக இருந்தால் அரசனுக்குச் சேரும். அல்லது திருடன் களவாடிச் செல்வான். அல்லது அருகதையற்றவர்களைச் சென்றடையும்.

நிறைய சம்பாதியுங்கள்! சம்பாதித்த செல்வத்தை நல்ல முறையில் பயன்படுத்துங்கள் என்று போதனை இந்த ஸ்லோகத்தில் கிடைக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories