தருமபுரி அருகே பிரேக் பழுதான லாரியால்… கோர விபத்து: 4 பேர் உயிரிழப்பு! 15 வாகனங்கள் சேதம்!

thoppur-accident3
thoppur-accident3

தருமபுரி அருகே பிரேக் பழுதான நிலையில், கண்டெய்னர் லாரி ஒன்று அடுத்தடுத்து 13 கார்கள் உள்பட 15 வாகனங்கள் மீது மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர்.

தர்மபுரியில் இருந்து இரும்பு பாரம் ஏற்றிய லாரி, தொப்பூர் மலைப்பாதை வழியாக சேலம் சென்றது. தொப்பூர் மலைப்பாதையில் போலீஸ் குடியிருப்பு அருகே இறக்கத்தில் சென்ற போது, சோளத்தட்டை ஏற்றி வந்த டாடா ஏஸ் சரக்கு வாகனம் லாரியின் பின் புறத்தில் மோதியது. இந்த விபத்தால் அப்பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டது.

thoppur-accident2
thoppur-accident2

இதனால், தருமபுரியில் இருந்து சேலம் நோக்கிச் செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக நீண்ட வரிசையில் தேங்கின.

இந்நிலையில் ஆந்திராவில் இருந்து தருமபுரி வழியாக சிமெண்ட் ஏற்றி வந்த கண்டெய்னர் லாரி ஒன்று சேலம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. தொப்பூர் கணவாய் பாலத்தின் இறக்கத்தில் வந்த போது வாகனங்கள் தேங்கி நின்றதைக் கண்டு, லாரியின் வேகத்தைக் குறைக்க ஓட்டுநர் பிரேக்கை அழுத்தினார். ஆனால் சிமெண்ட் மூட்டைகளின் பாரம் அதிகமாக இருந்த நிலையில் இறக்கமான சாலையில் பிரேக் பிடிக்காமல் லாரி அதே வேகத்தில் சென்றுள்ளது.

thoppur-accident1
thoppur-accident1

இதைஅடுத்து கண் இமைக்கும் நேரத்தில், சாலையில் வாகன நெரிசல் காரணமாக நின்று கொண்டிருந்த கார்கள் மற்றும் வாகனங்கள் மீது லாரி மோதியது. இதனால் பதறிய ஓட்டுநர் லாரியை சாலையில் வலது பக்கவாட்டுச் சுவரில் மோதி நிறுத்த முயன்றதில் வலது புறத்தில் நின்ற கார்கள், லாரிக்கும் சாலைத் தடுப்புச் சுவருக்கும் இடையில் சிக்கி கடுமையாக சேதமடைந்தன.

இந்த கோர விபத்தில் 13 கார்களும் இருசக்கர வாகனம் ஒன்றும் உருக்குலைந்தன. விபத்தில் சிக்கி 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட 5 பேரில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர்கள், கியா காரில் வந்த கோவையைச் சேர்ந்த நித்தியானந்தம் (35), பொலிரோ காரில் வந்த சேலத்தைச் சேர்ந்த மதன்குமார் (42), கார் டிரைவர் கார்த்தி (38) ஹோண்டோ பைக்கில் வந்த கண்ணன் (40) என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த விபத்து காரணமாக சுமார் 4 கி.மீ., தொலைவுக்கு நெடுஞ்சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் போக்குவரத்தை சீர் செய்து கிரேன்கள், ஜேசிபிகள் கொண்டு சேதமடைந்த வாகனங்களை அப்புறப்படுத்தி அதில் சிக்கியிருந்தவர்களை மீட்டனர்.

சம்பவ இடத்தில் மாவட்ட ஆட்சியர் கார்த்திகா மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

தொப்பூர் கணவாய் பாலத்தில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதால் இதற்கு தீர்வு காண்பதற்காக, நெடுஞ்சாலைத் துறையிடம் ஆலோசித்து வருவதாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகா செய்தியாளர்களிடம் தகவல் தெரிவித்துள்ளார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories