எய்ம்ஸ் அமையாது என்று சொல்பவர்கள் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காலம் வரும்!

udayakumar
udayakumar
  • திருமங்கலம் அருகே எய்ம்ஸ் மருத்துவமனை நிச்சயம் அமையும்
  • அமையாது என்று சொல்பவர்கள் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காலம் வரும்
  • அமைச்சர் ஆர். பி.உதயகுமார் ஆவேசம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி வளர்ச்சி திட்டங்கள் குறித்து கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருமங்கலம் ரோட்டரி சங்கம், ஆனந்தம் லயன்ஸ் சங்கம்,சிட்டி லயன்ஸ் சங்கம்,ரோஸ் லயன்ஸ் சங்கம், சுப்ரீம் லயன்ஸ் சங்கம், பேரையூர் மற்றும் ஏழுமலை லயன்ஸ் சங்கம், சார்பாக இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசினார். அவர் பேசியதாவது,

திருமங்கலம் அருகே தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையாது என்று அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக கூறி வருகின்றனர். மருத்துவமனை அமைய நிதி உதவி செய்யும் ஜப்பான் கூட்டுறவு முகமை பத்து முறை தோப்பூரில் ஆய்வு செய்து தமிழகத்தில் தோப்பூர் தான் சரியான தேர்வு என்று சான்றிதழ் அளித்துள்ளனர்

கொரொனா வந்ததால் ஜப்பான் நிறுவனத்திடம் ஒப்பந்தம் போட முடியவில்லை விரைவில் அவர்களுடன் ஒப்பந்தம் போடப் போகிறோம். அப்போது எய்ம்ஸ் மருத்துவமனை வராது என்று சொல்பவர்களும் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காலம் வரும்.

ALSO READ:  நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

2021ல் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தலில் ஜெயித்து விடுவார் என்ற பயத்தில் இப்படியெல்லாம் பேசுகிறார்கள். நாடாளுமன்றத்தில் தோப்பூரில் எய்ம்ஸ் அமையும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கு நிதி நிலை அறிக்கை கமிட்டியும் அமைத்து இருக்கிறார்கள்.எனவே விரைவில் மருத்துவமனை பணிகள் துவங்கும் .

மதுரை வளர்ச்சி முக்கியமா உதயகுமார் பதவி முக்கியமா என்று கேள்வி வந்தால் மதுரை வளர்ச்சி தான் எனக்கு முக்கியம்.

தமிழகத்தில் ஒரு கோடியே 87 லட்சம் குடும்பங்களுக்கு மிக்ஸி கிரைண்டர் வழங்கப்பட்டுள்ளது.64 லட்சம் மாணவ, மாணவியர் ர்களுக்கு லேப்டாப் வழங்கப்பட்டுள்ளது. சட்டம்-ஒழுங்கு இரும்புக்கரம் கொண்டு காக்கப்படுகிறது.அதனால் தமிழகம் அமைதி பூங்காவாக இருக்கிறது.

திருமங்கலம், கள்ளிக்குடி, கல்லுப்பட்டி பகுதிகளில் உள்ள கண்மாய்களில் குடிநீர் மராமத்து பணிகள் நடைபெற்றதால் பெரும்பாலான கண்மாய்கள் நிறைந்து விட்டன.

திருமங்கலத்தில் 2015ம் ஆண்டு 110 விதியின் கீழ் ரயில்வே மேம்பாலம் மற்றும் பேருந்து நிலையம் அமைக்க முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதற்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. விரைவில் பூமி பூஜை நடத்தப்பட்டு பணிகள் துவங்கும் . எனவே உங்களுடைய தீர்ப்பு எங்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்று கூறினார்.

ALSO READ:  பராபவ - பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசு கவனமாக செயல்பட வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் ஓர் அறிக்கை வாயிலாக எச்சரித்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கை!

திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் கோவில் ஆனி பிரம்மோற்சவ விழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரோட்ட விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Entertainment News

Popular Categories