எய்ம்ஸ் அமையாது என்று சொல்பவர்கள் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காலம் வரும்!

udayakumar
udayakumar
  • திருமங்கலம் அருகே எய்ம்ஸ் மருத்துவமனை நிச்சயம் அமையும்
  • அமையாது என்று சொல்பவர்கள் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காலம் வரும்
  • அமைச்சர் ஆர். பி.உதயகுமார் ஆவேசம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி வளர்ச்சி திட்டங்கள் குறித்து கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருமங்கலம் ரோட்டரி சங்கம், ஆனந்தம் லயன்ஸ் சங்கம்,சிட்டி லயன்ஸ் சங்கம்,ரோஸ் லயன்ஸ் சங்கம், சுப்ரீம் லயன்ஸ் சங்கம், பேரையூர் மற்றும் ஏழுமலை லயன்ஸ் சங்கம், சார்பாக இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசினார். அவர் பேசியதாவது,

திருமங்கலம் அருகே தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையாது என்று அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக கூறி வருகின்றனர். மருத்துவமனை அமைய நிதி உதவி செய்யும் ஜப்பான் கூட்டுறவு முகமை பத்து முறை தோப்பூரில் ஆய்வு செய்து தமிழகத்தில் தோப்பூர் தான் சரியான தேர்வு என்று சான்றிதழ் அளித்துள்ளனர்

கொரொனா வந்ததால் ஜப்பான் நிறுவனத்திடம் ஒப்பந்தம் போட முடியவில்லை விரைவில் அவர்களுடன் ஒப்பந்தம் போடப் போகிறோம். அப்போது எய்ம்ஸ் மருத்துவமனை வராது என்று சொல்பவர்களும் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காலம் வரும்.

2021ல் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தலில் ஜெயித்து விடுவார் என்ற பயத்தில் இப்படியெல்லாம் பேசுகிறார்கள். நாடாளுமன்றத்தில் தோப்பூரில் எய்ம்ஸ் அமையும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கு நிதி நிலை அறிக்கை கமிட்டியும் அமைத்து இருக்கிறார்கள்.எனவே விரைவில் மருத்துவமனை பணிகள் துவங்கும் .

மதுரை வளர்ச்சி முக்கியமா உதயகுமார் பதவி முக்கியமா என்று கேள்வி வந்தால் மதுரை வளர்ச்சி தான் எனக்கு முக்கியம்.

தமிழகத்தில் ஒரு கோடியே 87 லட்சம் குடும்பங்களுக்கு மிக்ஸி கிரைண்டர் வழங்கப்பட்டுள்ளது.64 லட்சம் மாணவ, மாணவியர் ர்களுக்கு லேப்டாப் வழங்கப்பட்டுள்ளது. சட்டம்-ஒழுங்கு இரும்புக்கரம் கொண்டு காக்கப்படுகிறது.அதனால் தமிழகம் அமைதி பூங்காவாக இருக்கிறது.

திருமங்கலம், கள்ளிக்குடி, கல்லுப்பட்டி பகுதிகளில் உள்ள கண்மாய்களில் குடிநீர் மராமத்து பணிகள் நடைபெற்றதால் பெரும்பாலான கண்மாய்கள் நிறைந்து விட்டன.

திருமங்கலத்தில் 2015ம் ஆண்டு 110 விதியின் கீழ் ரயில்வே மேம்பாலம் மற்றும் பேருந்து நிலையம் அமைக்க முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதற்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. விரைவில் பூமி பூஜை நடத்தப்பட்டு பணிகள் துவங்கும் . எனவே உங்களுடைய தீர்ப்பு எங்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்று கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories