February 8, 2025, 10:38 PM
27.1 C
Chennai

எய்ம்ஸ் அமையாது என்று சொல்பவர்கள் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காலம் வரும்!

udayakumar
udayakumar
  • திருமங்கலம் அருகே எய்ம்ஸ் மருத்துவமனை நிச்சயம் அமையும்
  • அமையாது என்று சொல்பவர்கள் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காலம் வரும்
  • அமைச்சர் ஆர். பி.உதயகுமார் ஆவேசம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி வளர்ச்சி திட்டங்கள் குறித்து கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருமங்கலம் ரோட்டரி சங்கம், ஆனந்தம் லயன்ஸ் சங்கம்,சிட்டி லயன்ஸ் சங்கம்,ரோஸ் லயன்ஸ் சங்கம், சுப்ரீம் லயன்ஸ் சங்கம், பேரையூர் மற்றும் ஏழுமலை லயன்ஸ் சங்கம், சார்பாக இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசினார். அவர் பேசியதாவது,

திருமங்கலம் அருகே தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையாது என்று அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக கூறி வருகின்றனர். மருத்துவமனை அமைய நிதி உதவி செய்யும் ஜப்பான் கூட்டுறவு முகமை பத்து முறை தோப்பூரில் ஆய்வு செய்து தமிழகத்தில் தோப்பூர் தான் சரியான தேர்வு என்று சான்றிதழ் அளித்துள்ளனர்

கொரொனா வந்ததால் ஜப்பான் நிறுவனத்திடம் ஒப்பந்தம் போட முடியவில்லை விரைவில் அவர்களுடன் ஒப்பந்தம் போடப் போகிறோம். அப்போது எய்ம்ஸ் மருத்துவமனை வராது என்று சொல்பவர்களும் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காலம் வரும்.

2021ல் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தலில் ஜெயித்து விடுவார் என்ற பயத்தில் இப்படியெல்லாம் பேசுகிறார்கள். நாடாளுமன்றத்தில் தோப்பூரில் எய்ம்ஸ் அமையும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கு நிதி நிலை அறிக்கை கமிட்டியும் அமைத்து இருக்கிறார்கள்.எனவே விரைவில் மருத்துவமனை பணிகள் துவங்கும் .

மதுரை வளர்ச்சி முக்கியமா உதயகுமார் பதவி முக்கியமா என்று கேள்வி வந்தால் மதுரை வளர்ச்சி தான் எனக்கு முக்கியம்.

தமிழகத்தில் ஒரு கோடியே 87 லட்சம் குடும்பங்களுக்கு மிக்ஸி கிரைண்டர் வழங்கப்பட்டுள்ளது.64 லட்சம் மாணவ, மாணவியர் ர்களுக்கு லேப்டாப் வழங்கப்பட்டுள்ளது. சட்டம்-ஒழுங்கு இரும்புக்கரம் கொண்டு காக்கப்படுகிறது.அதனால் தமிழகம் அமைதி பூங்காவாக இருக்கிறது.

திருமங்கலம், கள்ளிக்குடி, கல்லுப்பட்டி பகுதிகளில் உள்ள கண்மாய்களில் குடிநீர் மராமத்து பணிகள் நடைபெற்றதால் பெரும்பாலான கண்மாய்கள் நிறைந்து விட்டன.

திருமங்கலத்தில் 2015ம் ஆண்டு 110 விதியின் கீழ் ரயில்வே மேம்பாலம் மற்றும் பேருந்து நிலையம் அமைக்க முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதற்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. விரைவில் பூமி பூஜை நடத்தப்பட்டு பணிகள் துவங்கும் . எனவே உங்களுடைய தீர்ப்பு எங்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்று கூறினார்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கால் நூற்றாண்டுக்குப் பின்… தில்லியைக் கைப்பற்றிய பாஜக.,! 

தில்லி சட்டசபைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றியை நோக்கிச் செல்லும் பாஜக., சுமார் கால் நூற்றாண்டுக்குப் பின் தில்லியில் ஆட்சியைக் கைப்பற்றுகிறது.

பஞ்சாங்கம் பிப்.08 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருப்பரங்குன்றத்தில் தெப்பத் திருவிழா கோலாகலம்!

திருப்பரங்குன்றத்தில் தெப்பத் திருவிழா; பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தெப்ப மிதவையில் சுற்றி வந்து சுப்பிரமணிய சுவாமி தெய்வானை உடன் அருள் பாலித்தார்.

பஞ்சாங்கம் பிப்.07 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Ind Vs Eng ODI: தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி!

இந்தியா-இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் – நாக்பூர் – 6 பிப்ரவரி 2025 தொடரை இந்திய அணி வெற்றியுடன் தொடங்கியது

Topics

கால் நூற்றாண்டுக்குப் பின்… தில்லியைக் கைப்பற்றிய பாஜக.,! 

தில்லி சட்டசபைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றியை நோக்கிச் செல்லும் பாஜக., சுமார் கால் நூற்றாண்டுக்குப் பின் தில்லியில் ஆட்சியைக் கைப்பற்றுகிறது.

பஞ்சாங்கம் பிப்.08 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருப்பரங்குன்றத்தில் தெப்பத் திருவிழா கோலாகலம்!

திருப்பரங்குன்றத்தில் தெப்பத் திருவிழா; பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தெப்ப மிதவையில் சுற்றி வந்து சுப்பிரமணிய சுவாமி தெய்வானை உடன் அருள் பாலித்தார்.

பஞ்சாங்கம் பிப்.07 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Ind Vs Eng ODI: தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி!

இந்தியா-இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் – நாக்பூர் – 6 பிப்ரவரி 2025 தொடரை இந்திய அணி வெற்றியுடன் தொடங்கியது

சேகர் பாபு அறநிலையத் துறை அமைச்சராக நீடிக்க தகுதியற்றவர்!

இந்துக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத சேகர் பாபு அறநிலையத்துறை அமைச்சராக நீடிக்க தகுதியற்றவர்...

பஞ்சாங்கம் பிப்.06 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

லட்ச ரூபாய் பணத்தை தவறவிட்டவரிடம் நேர்மையாக ஒப்படைத்த புளியங்குடி நபருக்கு பாராட்டு!

காளகஸ்தி கோவிலில் தவறவிட்ட ரூ.1.50 லட்சம் ரொக்க பணத்தை உரியவரிடம் திரும்ப கொடுத்தவருக்கு செங்கோட்டையில் பாராட்டு.

Entertainment News

Popular Categories