அஞ்சனாத்ரியில் தான் அனுமன் பிறந்தாரா? ஆராய ஒரு கமிட்டி ஏற்பாடு!

Published:

tirupati3
tirupati3

ஹனுமான் எங்கு பிறந்தார்? திருப்பதி ஏழு மலைகளில் ஒன்றான அஞ்சனாத்ரி மலை தான் ஆஞ்சநேயரின் பிறந்த இடமா? அறிந்துகொள்வதற்கு அறிஞர்களின் கமிட்டி ஏற்பாடு செய்த டிடிடி.

திருமலையில் உள்ள ஏழு மலைகளில்தான் அஞ்சனீ புதல்வனான ஆஞ்சநேயர் பிறந்தார் என்று சில நாட்களாக சமூக வலைதளங்களில் கருத்துகள் சுற்றிவருகின்றன.

இந்த பின்னணியில் ஆஞ்சநேயர் உண்மையில் எங்கு பிறந்தார் என்று தெரிந்து கொள்வதற்கு புராணங்களையும் பிற நூல்களையும் பரிசோதிக்க சோதிக்க வேண்டும் என்று இதற்கு முன்பாகவே திருமலா திருப்பதி தேவஸ்தானம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.

இப்போது அண்மையில் திருமலா திருப்பதி தேவஸ்தானம் ஈஓ ஜவஹர் ரெட்டி இதுகுறித்து அறிஞர்களோடு கூட்டம் ஏற்பாடு செய்தார்.

ஆஞ்சநேய ஸ்வாமியின் ஜென்மஸ்தலம் திருமலை ஏழு மலைகள்தான் என்று புராணங்கள் கூறுகின்றன என்று அந்த கூட்டத்தில் பங்குபெற்ற அறிஞர்கள் ஈஓவின் பார்வைக்கு எடுத்து வந்தார்கள்.

இது தொடர்பாக அவர் பேசுகையில் சில கோவில்களின் தல புராணங்களின் ஆதாரமாக வெவ்வேறு இடங்களை அனுமானின் பிறந்த இடங்களாக பிரச்சாரம் செய்கிறார்கள் என்று கூறினார்.

ALSO READ:  எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

இந்தப் பின்னணியில் புராண, வரலாற்று, கலாச்சார, பழக்கவழக்கங்களின் கண்ணோட்டத்தில் ஆஞ்சநேய சுவாமி ஏழுமலைகளில் ஒன்றான அஞ்சனாத்ரி மலையில் தான் பிறந்தார் என்று பரிசோதனை செய்து நிரூபிப்பதற்கு அறிஞர்கள் கொண்ட ஒரு கமிட்டியை ஏற்பாடு செய்தார்.

நவீன காலத்தில் ஸ்ரீவாரி பக்தர்கள் அனைவருக்கும் அஞ்சனாத்ரி மலை மீது மேலும் பக்தி விசுவாசம் ஏற்படவேண்டும் என்று குறிப்பிட்டார்.

அஞ்சனி புத்திரனான ஆஞ்சநேயரின் ஜென்மஸ்தலம் திருமலை என்று நிரூபிப்பதற்கு தகுந்த ஆதாரங்களை கண்டுபிடிக்க வேண்டும் என்று அவர் அறிஞர்களிடம் கோரிக்கை விடுத்தார்.

ஸ்காந்த புராணம், வராக புராணம், பத்ம புராணம், பிரம்மாண்ட புராணம், பவிஷ்யோத்தர புராணம் முதலிய புராணங்களில் இருக்கும் சுலோகங்களை பண்டிதர்கள் அந்த கூட்டத்தில் எடுத்துரைத்தார்கள். விரைவில் இது குறித்து ஆதாரங்களுடன் நிரூபிக்க முயற்சி செய்யவேண்டும் என்று ஈஓ தெரிவித்தார்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img