சுபாஷிதம்: புகழ்ச்சியின் விதிமுறைகள்!

subhashitam-5
subhashitam-5

சுபாஷிதம்…ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

65. புகழ்ச்சியின் விதிமுறைகள்!

ஸ்லோகம்:

ப்ரத்யக்ஷே குரவ: ஸ்துத்யா: பரோக்ஷே மித்ரபாந்தவா: |
கர்மான்தே தாசப்ருத்யாஸ்ச ந கதாசன புத்ரகா: ||

பொருள்:

குருநாதரை நேராகப் புகழ வேண்டும். நண்பரையும், உறவினரையும்  மறைமுகமாகப் புகழ் வேண்டும். கூறிய வேலையைச் செய்து முடித்தபின் நம் கீழ் பணிபுரிபவர்களைப்  புகழலாம். ஆனால் பெற்ற பிள்ளைகளை எப்பொழுதுமே புகழக் கூடாது.

விளக்கம்:

போற்றுதல் கடவுளுக்கு மட்டுமே அல்ல. புகழ்ச்சியால் மகிழாதவர் யார்? ஆனால் யாரை எங்கே புகழவேண்டும்? எங்கே புகழக் கூடாது? என்று தெரிவிக்கும் ஸ்லோகம் இது.

குருநாதரை அவர் முன்னிலையில் துதிக்க வேண்டும். அது அவரிடம் நாம் காட்டும் அன்புக்கும் பக்திக்கும் அடையாளம். நண்பரையும் உறவினரையும் நேரடியாக புகழ்ந்தால் முகஸ்துதியாக நினைக்க வாய்ப்புள்ளது. எதையாவது எதிர்பார்த்து உதவி வேண்டிப் புகழ்வதாக எடுத்துக்கொள்வார்கள். மறைமுகமாக நாம் அவர்களைப் புகழும் போது அதில் நேர்மை வெளிப்படும்.

அடுத்து நம் உத்தரவுப்படி பணிபுரிபவர்களை வெற்றிகரமாக வேலையை முடித்த பிறகு புகழலாம். அவர்கள் இனி வரும் நாட்களில் மேலும் உழைத்து நன்கு பணி புரியும்படி உற்சாகம் ஏற்படும். ஆனால் பெற்ற பிள்ளைகளை புகழக் கூடாது என்கிறது ஸ்லோகம். வாழ்த்துவது வேறு. புகழ்வது வேறு.

குழந்தைகளுக்கு நாம் செய்யும் புகழ்ச்சியால் அவர்களில் கர்வம், இறுமாப்பு போன்ற தீய குணங்கள் தலையெடுக்கும் ஆபத்துள்ளது. தாம் உயர்ந்தவர்கள் என்றும், அறிவாளிகள் என்றும், திறமைசாலிகள் என்றும், சிறுவயதிலிருந்தே  நினைக்கத் தொடங்கிவிடுவார்கள்.

இனி சாதிப்பதற்கு எதுவுமே இல்லை என்ற பிரமைக்கு ஆளாகி விடுவார்கள். அதனால் அவர்களுடைய உடல், மனம், புத்தி,  தார்மீக முன்னேற்றம் இவற்றின் வளர்ச்சி தடைப்படும். அதனால்தான் தம் குழந்தைகளை பெற்றோர் புகழக் கூடாது என்று பெரியவர்கள் கூறியுள்ளார்கள் என்பதை உணர்ந்து கவனமாக இருக்க வேண்டும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories