சுபாஷிதம்: புகழ்ச்சியின் விதிமுறைகள்!

subhashitam-5
subhashitam-5

சுபாஷிதம்…ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

65. புகழ்ச்சியின் விதிமுறைகள்!

ஸ்லோகம்:

ப்ரத்யக்ஷே குரவ: ஸ்துத்யா: பரோக்ஷே மித்ரபாந்தவா: |
கர்மான்தே தாசப்ருத்யாஸ்ச ந கதாசன புத்ரகா: ||

பொருள்:

குருநாதரை நேராகப் புகழ வேண்டும். நண்பரையும், உறவினரையும்  மறைமுகமாகப் புகழ் வேண்டும். கூறிய வேலையைச் செய்து முடித்தபின் நம் கீழ் பணிபுரிபவர்களைப்  புகழலாம். ஆனால் பெற்ற பிள்ளைகளை எப்பொழுதுமே புகழக் கூடாது.

விளக்கம்:

போற்றுதல் கடவுளுக்கு மட்டுமே அல்ல. புகழ்ச்சியால் மகிழாதவர் யார்? ஆனால் யாரை எங்கே புகழவேண்டும்? எங்கே புகழக் கூடாது? என்று தெரிவிக்கும் ஸ்லோகம் இது.

குருநாதரை அவர் முன்னிலையில் துதிக்க வேண்டும். அது அவரிடம் நாம் காட்டும் அன்புக்கும் பக்திக்கும் அடையாளம். நண்பரையும் உறவினரையும் நேரடியாக புகழ்ந்தால் முகஸ்துதியாக நினைக்க வாய்ப்புள்ளது. எதையாவது எதிர்பார்த்து உதவி வேண்டிப் புகழ்வதாக எடுத்துக்கொள்வார்கள். மறைமுகமாக நாம் அவர்களைப் புகழும் போது அதில் நேர்மை வெளிப்படும்.

ALSO READ:  பக்தர்கள் திரளில் மதுரை - வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

அடுத்து நம் உத்தரவுப்படி பணிபுரிபவர்களை வெற்றிகரமாக வேலையை முடித்த பிறகு புகழலாம். அவர்கள் இனி வரும் நாட்களில் மேலும் உழைத்து நன்கு பணி புரியும்படி உற்சாகம் ஏற்படும். ஆனால் பெற்ற பிள்ளைகளை புகழக் கூடாது என்கிறது ஸ்லோகம். வாழ்த்துவது வேறு. புகழ்வது வேறு.

குழந்தைகளுக்கு நாம் செய்யும் புகழ்ச்சியால் அவர்களில் கர்வம், இறுமாப்பு போன்ற தீய குணங்கள் தலையெடுக்கும் ஆபத்துள்ளது. தாம் உயர்ந்தவர்கள் என்றும், அறிவாளிகள் என்றும், திறமைசாலிகள் என்றும், சிறுவயதிலிருந்தே  நினைக்கத் தொடங்கிவிடுவார்கள்.

இனி சாதிப்பதற்கு எதுவுமே இல்லை என்ற பிரமைக்கு ஆளாகி விடுவார்கள். அதனால் அவர்களுடைய உடல், மனம், புத்தி,  தார்மீக முன்னேற்றம் இவற்றின் வளர்ச்சி தடைப்படும். அதனால்தான் தம் குழந்தைகளை பெற்றோர் புகழக் கூடாது என்று பெரியவர்கள் கூறியுள்ளார்கள் என்பதை உணர்ந்து கவனமாக இருக்க வேண்டும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories