இந்த முறை உதயசூரியன் சின்னத்தில் இல்லை; வைகோ., திருமா உறுதி!

vaiko
vaiko file picture

திமுக.,வின் கூட்டணியில் இந்த முறை சேர்ந்து போட்டியிட்டாலும், நிச்சயம் திமுக.,வின் சின்னமான உதயசூரியனில் போட்டியிடப் போவதில்லை என்று அக்கூட்டணியில் உள்ள மதிமுக., பொதுச் செயலர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகியோர் உறுதியுடன் கூறியுள்ளனர்.

கடந்த முறை நாடாளுமன்றத் தேர்தலின் போது, திமுக., கூட்டணியில் மதிமுக., விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் இணைந்து போட்டியிட்டன. ஆனால் அக்கட்சிகளுக்கு தேர்தலின் போது, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று திமுக., நிர்பந்தித்தது. முதலில் தங்களது கட்சிச் சின்னத்திலேயே போட்டியிடுவோம் என்று மறுப்பு தெரிவித்த இக்கட்சிகள் பின்னர் போட்டியிட தொகுதிகள் ஒதுக்கப் பட்டதால், இதற்கு சம்மதித்தன.

thiruma stalin - 2026

இந்நிலையில், திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனி சின்னத்தில் தான் போட்டியிடும் என அக்கட்சி தலைவர் திருமாவளவன் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியை சந்தித்து புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு ஊசி பரிசோதனை இன்று தொடங்கியுள்ளது வரவேற்கத்தக்கது என்றும் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தனி சின்னத்தில் தான் போட்டியிடும் என்றும் தெரிவித்தார்.

அதேபோல், வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் தனிச்சின்னத்தில் போட்டியிடவே மதிமுக விரும்புவதாக அதன் பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மக்கள் நலக் கூட்டணி உருவாக இனி வாய்ப்பே இல்லை என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories