இந்த முறை உதயசூரியன் சின்னத்தில் இல்லை; வைகோ., திருமா உறுதி!

vaiko
vaiko file picture

திமுக.,வின் கூட்டணியில் இந்த முறை சேர்ந்து போட்டியிட்டாலும், நிச்சயம் திமுக.,வின் சின்னமான உதயசூரியனில் போட்டியிடப் போவதில்லை என்று அக்கூட்டணியில் உள்ள மதிமுக., பொதுச் செயலர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகியோர் உறுதியுடன் கூறியுள்ளனர்.

கடந்த முறை நாடாளுமன்றத் தேர்தலின் போது, திமுக., கூட்டணியில் மதிமுக., விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் இணைந்து போட்டியிட்டன. ஆனால் அக்கட்சிகளுக்கு தேர்தலின் போது, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று திமுக., நிர்பந்தித்தது. முதலில் தங்களது கட்சிச் சின்னத்திலேயே போட்டியிடுவோம் என்று மறுப்பு தெரிவித்த இக்கட்சிகள் பின்னர் போட்டியிட தொகுதிகள் ஒதுக்கப் பட்டதால், இதற்கு சம்மதித்தன.

thiruma stalin - 2026

இந்நிலையில், திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனி சின்னத்தில் தான் போட்டியிடும் என அக்கட்சி தலைவர் திருமாவளவன் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியை சந்தித்து புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு ஊசி பரிசோதனை இன்று தொடங்கியுள்ளது வரவேற்கத்தக்கது என்றும் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தனி சின்னத்தில் தான் போட்டியிடும் என்றும் தெரிவித்தார்.

அதேபோல், வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் தனிச்சின்னத்தில் போட்டியிடவே மதிமுக விரும்புவதாக அதன் பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மக்கள் நலக் கூட்டணி உருவாக இனி வாய்ப்பே இல்லை என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக இன்று புதன்கிழமை நடைபெற்றது.மாசி வீதிகளில்...

பஞ்சாங்கம் – ஏப்ரல் 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

Entertainment News

Popular Categories