மக்களை ஏமாற்றி விட்டதாக சுயபச்சாதாபம்! மன அமைதிக்காக ஆன்மிகத்தை நாடும் ரஜினி!

rajini-in-spiritual-way
rajini-in-spiritual-way

தாம் அவ்வளவு தூரம் உறுதி அளித்தும், தாம் மக்களிடம் சொன்னதைச் செய்ய முடியாமல் போனதால், நடிகர் ரஜினிகாந்த் கடுமையான மன உளைச்சலில் உள்ளார் என்றும், தன் மன அமைதிக்காக ஆன்மிக பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப் படுகிறது.

அடுத்தடுத்து ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரின் மறைவுக்குப் பின்னர் தமிழகத்தில் சரியான தலைமை ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இல்லாத சூழலில், தமிழகத்தில் தலைமைக்கான வெற்றிடத்தை ரஜினிகாந்த் நிரப்புவார் என்று மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், மக்களிடம் எழுச்சி ஏற்பட்டால் மட்டுமே தாம் கட்சி தொடங்கி மக்களுக்காக ஆன்மிக அரசியலை நேர்மறை அரசியலை கொண்டு வர முடியும் என்று கூறினார் ரஜினி காந்த்.

ஏற்கெனவே நாடாளுமன்றத் தேர்தலின் போது கட்சி தொடங்குவார் என்று கூறப் பட்ட நிலையில், தாம் சட்டமன்றத் தேர்தலின் போது கட்சி தொடங்குவதாகவும், போர் என்று வரும் போது வாளாவிருக்க மாட்டோம் என்றும் கூறினார் ரஜினி. ஆனால், இதுவரை அவர் கனவு கண்ட எழுச்சி தமிழகத்தில் ஏற்படவில்லை.

ALSO READ:  நல்ல வாய்ப்பை வீணடித்து விட்டார்கள் இண்டி கூட்டணியினர்!

இந்த நிலையில், அவரது உடல் நிலை அரசியல் கட்சி நடவடிக்கைகளுக்கு ஏற்ற வகையில் இல்லை என்பதால், மருத்துவர்கள் அவருக்கு எச்சரிக்கை கொடுத்தனர். இந்நிலையில், கொரோனா பரவல் அச்சத்தால் அரசியலில் நுழையும் முடிவில் இருந்து திடீரென பின்வாங்கினார் ரஜினி.

அரசியல் கட்சி தொடங்கப்படும், டிச.31ல் அறிவிப்பேன் என்று கூறிய ரஜினி, கட்சி தொடர்பான வேலையையும் ஒத்தி வைத்துவிட்டு, சினிமா படப்பிடிப்புக்காக ஹைதராபாத் சென்றார். ஆனால் அந்த அண்ணாத்த படப்பிடிப்பில் படக்குழுவினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

இதை அடுத்து ரஜினிக்கும் சோதனை மேற்கொள்ளப் பட்டது. அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்ற போதும், ரத்த அழுத்த மாறுபாடு இருந்ததால், ஹைதராபாத்தில் அபல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து தனது தனிக் கட்சி அரசியலையும் மூட்டை கட்டி வைத்தார். இருப்பினும், அவருக்கு தாம் தமது ரசிகர்களையும் நிர்வாகிகளையும் ஏமாற்றி விட்டோமோ என்ற கடுமையான சுய பச்சாதாபம் ஏற்பட்டு, மன உளைச்சலில் அவதிப்படுவதாகக் கூறப் படுகிறது.

இந்த நிலையில் ரஜினி வீட்டுக்கு, நமோ நாராயணா ஸ்வாமிகள் வந்துள்ளார். அவரை வரவேற்ற ரஜினிக்கு, ஸ்வாமிகள் ஸ்படிக மாலை அணிவித்து, ஆசிர்வதித்துள்ளார். இதை அடுத்து, தனது மன நிம்மதிக்காக ஓர் ஆன்மிக பயணத்தை அவர் மேற்கொள்ளக் கூடும் என்று கூறப் படுகிறது.

ALSO READ:  மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Entertainment News

Popular Categories