February 9, 2025, 2:53 PM
29.8 C
Chennai

மக்களை ஏமாற்றி விட்டதாக சுயபச்சாதாபம்! மன அமைதிக்காக ஆன்மிகத்தை நாடும் ரஜினி!

rajini-in-spiritual-way
rajini-in-spiritual-way

தாம் அவ்வளவு தூரம் உறுதி அளித்தும், தாம் மக்களிடம் சொன்னதைச் செய்ய முடியாமல் போனதால், நடிகர் ரஜினிகாந்த் கடுமையான மன உளைச்சலில் உள்ளார் என்றும், தன் மன அமைதிக்காக ஆன்மிக பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப் படுகிறது.

அடுத்தடுத்து ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரின் மறைவுக்குப் பின்னர் தமிழகத்தில் சரியான தலைமை ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இல்லாத சூழலில், தமிழகத்தில் தலைமைக்கான வெற்றிடத்தை ரஜினிகாந்த் நிரப்புவார் என்று மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், மக்களிடம் எழுச்சி ஏற்பட்டால் மட்டுமே தாம் கட்சி தொடங்கி மக்களுக்காக ஆன்மிக அரசியலை நேர்மறை அரசியலை கொண்டு வர முடியும் என்று கூறினார் ரஜினி காந்த்.

ஏற்கெனவே நாடாளுமன்றத் தேர்தலின் போது கட்சி தொடங்குவார் என்று கூறப் பட்ட நிலையில், தாம் சட்டமன்றத் தேர்தலின் போது கட்சி தொடங்குவதாகவும், போர் என்று வரும் போது வாளாவிருக்க மாட்டோம் என்றும் கூறினார் ரஜினி. ஆனால், இதுவரை அவர் கனவு கண்ட எழுச்சி தமிழகத்தில் ஏற்படவில்லை.

இந்த நிலையில், அவரது உடல் நிலை அரசியல் கட்சி நடவடிக்கைகளுக்கு ஏற்ற வகையில் இல்லை என்பதால், மருத்துவர்கள் அவருக்கு எச்சரிக்கை கொடுத்தனர். இந்நிலையில், கொரோனா பரவல் அச்சத்தால் அரசியலில் நுழையும் முடிவில் இருந்து திடீரென பின்வாங்கினார் ரஜினி.

அரசியல் கட்சி தொடங்கப்படும், டிச.31ல் அறிவிப்பேன் என்று கூறிய ரஜினி, கட்சி தொடர்பான வேலையையும் ஒத்தி வைத்துவிட்டு, சினிமா படப்பிடிப்புக்காக ஹைதராபாத் சென்றார். ஆனால் அந்த அண்ணாத்த படப்பிடிப்பில் படக்குழுவினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

இதை அடுத்து ரஜினிக்கும் சோதனை மேற்கொள்ளப் பட்டது. அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்ற போதும், ரத்த அழுத்த மாறுபாடு இருந்ததால், ஹைதராபாத்தில் அபல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து தனது தனிக் கட்சி அரசியலையும் மூட்டை கட்டி வைத்தார். இருப்பினும், அவருக்கு தாம் தமது ரசிகர்களையும் நிர்வாகிகளையும் ஏமாற்றி விட்டோமோ என்ற கடுமையான சுய பச்சாதாபம் ஏற்பட்டு, மன உளைச்சலில் அவதிப்படுவதாகக் கூறப் படுகிறது.

இந்த நிலையில் ரஜினி வீட்டுக்கு, நமோ நாராயணா ஸ்வாமிகள் வந்துள்ளார். அவரை வரவேற்ற ரஜினிக்கு, ஸ்வாமிகள் ஸ்படிக மாலை அணிவித்து, ஆசிர்வதித்துள்ளார். இதை அடுத்து, தனது மன நிம்மதிக்காக ஓர் ஆன்மிக பயணத்தை அவர் மேற்கொள்ளக் கூடும் என்று கூறப் படுகிறது.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திருவேடகம் விவேகானந்த கல்லூரி மற்றும் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு விழா!

திருவேடகம் விவேகானந்த கல்லூரி மற்றும் விவேகானந்த மேல்நிலைப் பள்ளியின் விளையாட்டு விழா

பஞ்சாங்கம் பிப்.09 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

அங்கீகாரம் பெறாமல் போலி ஹால் டிக்கெட்? : மாணவிகள் தர்ணா!

மேலும் கட்டிய பணத்தை திரும்ப வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப் படும் எனவும் போலீசார் தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

கால் நூற்றாண்டுக்குப் பின்… தில்லியைக் கைப்பற்றிய பாஜக.,! 

தில்லி சட்டசபைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றியை நோக்கிச் செல்லும் பாஜக., சுமார் கால் நூற்றாண்டுக்குப் பின் தில்லியில் ஆட்சியைக் கைப்பற்றுகிறது.

குருவித்துறை ஆதி மாசாணி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா!

குருவித்துறை ஆதி மாசாணி அம்மன் கோவில் ஏழாம் ஆண்டு பூக்குழி திருவிழா!

Topics

திருவேடகம் விவேகானந்த கல்லூரி மற்றும் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு விழா!

திருவேடகம் விவேகானந்த கல்லூரி மற்றும் விவேகானந்த மேல்நிலைப் பள்ளியின் விளையாட்டு விழா

பஞ்சாங்கம் பிப்.09 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

அங்கீகாரம் பெறாமல் போலி ஹால் டிக்கெட்? : மாணவிகள் தர்ணா!

மேலும் கட்டிய பணத்தை திரும்ப வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப் படும் எனவும் போலீசார் தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

கால் நூற்றாண்டுக்குப் பின்… தில்லியைக் கைப்பற்றிய பாஜக.,! 

தில்லி சட்டசபைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றியை நோக்கிச் செல்லும் பாஜக., சுமார் கால் நூற்றாண்டுக்குப் பின் தில்லியில் ஆட்சியைக் கைப்பற்றுகிறது.

குருவித்துறை ஆதி மாசாணி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா!

குருவித்துறை ஆதி மாசாணி அம்மன் கோவில் ஏழாம் ஆண்டு பூக்குழி திருவிழா!

பஞ்சாங்கம் பிப்.08 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருப்பரங்குன்றத்தில் தெப்பத் திருவிழா கோலாகலம்!

திருப்பரங்குன்றத்தில் தெப்பத் திருவிழா; பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தெப்ப மிதவையில் சுற்றி வந்து சுப்பிரமணிய சுவாமி தெய்வானை உடன் அருள் பாலித்தார்.

பஞ்சாங்கம் பிப்.07 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories