கோயில் விக்ரகங்கள் மீதான தாக்குதல்கள் பின்னே பெரும் சதி: நடிகர் சுமன்!

Published:

actor-suman
actor-suman

ஆந்திராவில் கோவில் விக்ரகங்கள் சேதப்படுத்துவதன் பின்னால் பெரிய சதித் திட்டம் உள்ளது என்று சினிமா நடிகர் சுமன் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

ஆந்திரப் பிரதேசத்தில் ஹிந்து கோவில் விக்கிரகங்களின் தாக்குதல் குறித்து பிரபல நடிகர் சுமன் பரபரப்பு விமர்சனம் செய்துள்ளார்.

ஆந்திராவில் தீவிரமான பரபரப்பை ஏற்படுத்திவரும் ஹிந்து தெய்வ விக்கிரகங்களின் சிதைப்பு சம்பவம் குறித்து பிரபல சினிமா நடிகர் சுமன் பரபரப்பு வியாக்கியானம் செய்துள்ளார்.

ஞாயிறன்று திருமலையில் ஸ்ரீ வேங்கடேஸ்வர சுவாமியை தரிசித்துக் கொண்ட பின்பு ஹீரோ சுமன் மீடியாவோடு பேசுகையில் ஆந்திராவில் கோவில் சிலைகள் துவம்சத்தின் பின்னால் பெரிய சதி திட்டம் உள்ளது என்று தான் நம்புவதாக கூறினார்.

ஜெகன்மோகன் ரெட்டியின் அரசாங்கத்திற்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் இவ்வாறு சதித் திட்டம் தீட்டி இருக்கும் என்று தான் சந்தேகப்படுவதாக கூறினார். பிறர் கூட இந்த சம்பவங்களில் ஈடுபட்டு இருக்கலாம் என்றும் தெரிவித்தார்.

ALSO READ:  மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

எது எப்படி ஆனாலும் கடவுள் விஷயத்தில் தவறு செய்தவர்களுக்கு கட்டாயமாக அந்த கடவுளே தண்டனை விதிப்பார் என்று சுமன் அபிப்பிராயம் தெரிவித்தார்.

கோவில்கள் மசூதிகள் சர்ச்சுகளின் பாதுகாப்புக்கும் அவற்றை கவனித்துக் கொள்வதற்கும் சிசிடிவி கேமராக்களை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று ஆந்திர பிரதேஷ் அரசாங்கத்திற்கு சுமன் வேண்டுகோள் விடுத்தார்.

ஹிந்து கோவில்கள் மீது தாக்குதல், விக்ரகங்களை சிதைப்பது போன்றவற்றில் ஈடுபட்டவர்களை கண்டுபிடித்து கடினமாக தண்டனை அளிக்க வேண்டும் என்று பிரதமரை கோருவதாக கூறினார்.

அதேபோல் விக்ரகங்களை சேதப்படுத்தியது யார் என்ற தெளிவுக்கு வராமல் எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்துவது சரியல்ல என்று சுமன் கூறினார். முதல்வர் ஜெகனுக்கு கெட்ட பெயர் எடுத்து வருவதற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் அந்த விக்ரகங்களை சேதப்படுத்தி இருக்கலாம் என்று அவர் குற்றம் சுமத்தினார். குற்றவாளிகளை அடையாளம் காணாமல் ஒருவர் மீது ஒருவர் இவ்வாறு நிந்தித்துக் கொள்வது சரியான வழிமுறை அல்ல என்று கூறினார்.

அதேபோல் ஹிந்துக்களின் மனநிலைகளை கணக்கில் எடுத்துக் கொண்டு முதல்வர் ஜெகன் ஆலயங்களின் பாதுகாப்பிற்கு பிரத்தியேக நடவடிக்கைகள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். கோவில் விக்ரகங்களை சிதைத்தவர்கள் கட்டாயமாக தண்டனை அனுபவிப்பார்கள் என்றார்.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

இனி சினிமாக்கள் குறித்து பேசுகையில் இப்போதுதான் சூட்டிங்குகள் தொடங்கி வருகின்றன என்றும் தியேட்டர்கள் முழு அளவில் திறப்பதற்கு இன்னும் மூன்றிலிருந்து நான்கு மாதங்கள் ஆகலாம் என்றும் அபிப்பிராயம் கூறினார்.

விரைவிலேயே சினிமா தொழிற்சாலைக்கு நல்ல நாட்கள் வரும் என்று ஆசைப்படுவதாகவும் கூறினார். நல்ல காலம் பிறக்கும் என்று அவர் எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img