February 20, 2026, 9:43 AM
25.9 C
Chennai

ஒன்றரை கோடி ரூபாய்க்கு கணவனை காதலியிடம் விற்ற மனைவி!

women sell her husband2 - 2026

கணவனை ஒன்றரை கோடி ரூபாய்க்கு விற்ற மனைவி.

பணத்தின் மீது பேராசை கொண்ட ஒரு பெண் தன் கணவனை மற்றொரு பெண்ணிற்கு ஒரு கோடி ரூபாய்க்கு விற்ற கதையை சுப லக்னம் சினிமாவில் பார்த்தோம். இப்படிப்பட்ட ஒரு யதார்த்த சம்பவமே மத்திய பிரதேசத்தின் தலைநகர் போபாலில் நடந்து உள்ளது. ஆனால் கதை சிறிது மாற்றம்.

தன் கணவன் வேறொரு பெண்ணோடு தொடர்பு கொண்டு தன்னையும் தன் குழந்தைகளையும் கண்டுகொள்ளாமல் விட்டதால் அந்தப் பெண்மணியிடம் இருந்து ஒன்றரை கோடி ரூபாய் கொடுக்கும்படி வற்புறுத்தியுள்ளார் மனைவி.

இந்த வழக்கு தொடர்பாக… ஒரு சிறுமி தன் தந்தை தன்னுடன் அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு பெண்ணோடு தொடர்பு கொண்டார் என்றும் தம்மோடு காரணம் இல்லாமல் வீட்டில் சண்டையிட்டு வருவதாகவும் அதனால் அமைதி இல்லாமல் போய்விட்டது என்றும் குடும்ப நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இந்த தகராறில் வீட்டில் தானும் தன் தங்கையும் படிப்பின் மீது கவனம் செலுத்த முடியாமல் போவதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் புகார் மீது விசாரணை நடத்திய நீதிமன்றம் அந்த தம்பதிகள் இருவரையும் கவுன்சிலிங் சென்டருக்கு அனுப்பியது. அந்த மனிதர் தன் மனைவியோடு இல்லாமல், தன் காதலியோடு இருக்கவே விருப்பப்படுவதாகவும் மனைவியிடமிருந்து விவாகரத்து பெறுவதாகவும் கூறிவிட்டார். ஆனால் அதற்கு மனைவி சம்மதிக்கவில்லை.

தன்னுடைய கணவரை அந்தப் பெண்ணிடம் ஒப்படைக்க வேண்டும் என்றால் தன் கணவனின் காதலி தனக்கு ஒன்றரை கோடி ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் என்று வற்புறுத்தினார். அப்போதுதான் தன் கணவனை விட்டுக் கொடுப்பேன் என்று தெளிவாகக் கூறிவிட்டார்.

இந்த டீல் ஓகே என்று சொன்ன கணவனின் காதலி தன்னுடைய விலை மதிப்பான அப்பார்ட்மென்டோடு கூட 27 லட்சம் ரூ பணத்தையும் முதல் மனைவிக்குக் கொடுத்தார்.

ஆனால் திருமணமாகி இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு மற்றொரு பெண்ணின் மயக்கத்தில் விழுந்து தன்னை வேண்டாம் என்று தீர்மானித்த கணவனோடு சேர்ந்து வாழ்வதில் பொருளில்லை என்றும் தன் இரு மகள்களின் எதிர்காலத்தை முன்னிட்டு அந்தப் பணத்தை வற்புறுத்தியதாகவும் அந்த பெண்மணி தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

Topics

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

உணவே மருந்து! சர்க்கரை, இதய நோய்களில் இருந்து காத்துக் கொள்க!

இவ்வாறு உணவை சரிவிகிதமாக எடுத்து உடன் உடற்பயிற்சியையும் சேர்த்தால், நோயின்றி வாழ்வீர்கள் என்பது திண்ணம்.

ரம்ஜான்-க்காக கூடுதல் செலவு எனினும் தாராள நிதி ஒதுக்கீடு! கோவில்கள் என்றால் பாரபட்சம்!

இல்லை என்றால் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இந்து சமுதாயம் தனது இந்து ஓட்டு வங்கியின் மூலம் திமுக அரசுக்கு தக்க பதிலடி தந்தே தீரும்

Entertainment News

Popular Categories