ஒன்றரை கோடி ரூபாய்க்கு கணவனை காதலியிடம் விற்ற மனைவி!

women sell her husband2 - 2026

கணவனை ஒன்றரை கோடி ரூபாய்க்கு விற்ற மனைவி.

பணத்தின் மீது பேராசை கொண்ட ஒரு பெண் தன் கணவனை மற்றொரு பெண்ணிற்கு ஒரு கோடி ரூபாய்க்கு விற்ற கதையை சுப லக்னம் சினிமாவில் பார்த்தோம். இப்படிப்பட்ட ஒரு யதார்த்த சம்பவமே மத்திய பிரதேசத்தின் தலைநகர் போபாலில் நடந்து உள்ளது. ஆனால் கதை சிறிது மாற்றம்.

தன் கணவன் வேறொரு பெண்ணோடு தொடர்பு கொண்டு தன்னையும் தன் குழந்தைகளையும் கண்டுகொள்ளாமல் விட்டதால் அந்தப் பெண்மணியிடம் இருந்து ஒன்றரை கோடி ரூபாய் கொடுக்கும்படி வற்புறுத்தியுள்ளார் மனைவி.

இந்த வழக்கு தொடர்பாக… ஒரு சிறுமி தன் தந்தை தன்னுடன் அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு பெண்ணோடு தொடர்பு கொண்டார் என்றும் தம்மோடு காரணம் இல்லாமல் வீட்டில் சண்டையிட்டு வருவதாகவும் அதனால் அமைதி இல்லாமல் போய்விட்டது என்றும் குடும்ப நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இந்த தகராறில் வீட்டில் தானும் தன் தங்கையும் படிப்பின் மீது கவனம் செலுத்த முடியாமல் போவதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் புகார் மீது விசாரணை நடத்திய நீதிமன்றம் அந்த தம்பதிகள் இருவரையும் கவுன்சிலிங் சென்டருக்கு அனுப்பியது. அந்த மனிதர் தன் மனைவியோடு இல்லாமல், தன் காதலியோடு இருக்கவே விருப்பப்படுவதாகவும் மனைவியிடமிருந்து விவாகரத்து பெறுவதாகவும் கூறிவிட்டார். ஆனால் அதற்கு மனைவி சம்மதிக்கவில்லை.

ALSO READ:  தாமிரபரணிக் கரை ஆலயத்தில்... வழிபாட்டில் திருவள்ளுவர்!

தன்னுடைய கணவரை அந்தப் பெண்ணிடம் ஒப்படைக்க வேண்டும் என்றால் தன் கணவனின் காதலி தனக்கு ஒன்றரை கோடி ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் என்று வற்புறுத்தினார். அப்போதுதான் தன் கணவனை விட்டுக் கொடுப்பேன் என்று தெளிவாகக் கூறிவிட்டார்.

இந்த டீல் ஓகே என்று சொன்ன கணவனின் காதலி தன்னுடைய விலை மதிப்பான அப்பார்ட்மென்டோடு கூட 27 லட்சம் ரூ பணத்தையும் முதல் மனைவிக்குக் கொடுத்தார்.

ஆனால் திருமணமாகி இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு மற்றொரு பெண்ணின் மயக்கத்தில் விழுந்து தன்னை வேண்டாம் என்று தீர்மானித்த கணவனோடு சேர்ந்து வாழ்வதில் பொருளில்லை என்றும் தன் இரு மகள்களின் எதிர்காலத்தை முன்னிட்டு அந்தப் பணத்தை வற்புறுத்தியதாகவும் அந்த பெண்மணி தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories