இந்து மதத்தை இழிவுபடுத்தி விமர்சனம்: காக்கிநாடா பாதிரி கைது!

Published:

pastor-praveen-chakravarthi
pastor-praveen-chakravarthi

மதங்களை இழிவுபடுத்தி விமர்சனம் காக்கிநாடா பாஸ்டர் பிரவீன் சக்ரவர்த்தி கைது.

ஆந்திரப் பிரதேசத்தில் கோவில்களின் மீது தாக்குதல் குறித்து அரசியல் புயல் வீசி வருகிறது. இந்த தருணத்தில் மதங்களிடையே வேற்றுமையை ஏற்படுத்தும் விதமாக விமர்சனம் செய்த ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

இந்து கடவுளரின் விக்கிரகங்கள் எல்லாம் வெறும் பிதற்றல் என்று பிரச்சாரம் செய்த காக்கிநாடாவைச் சேர்ந்த பாஸ்டர் பிரவீன் சக்ரவர்த்தியை போலீசார் கைது செய்தனர்.

கோயில் சிலைகளை மீது தானே தாக்குதல் நடத்தியதாகவும் தானே சேதப்படுத்த செய்ததாகவும் பெங்களூரு காசிப் யூடியூப் சேனலில் பிரவீன் செய்த போஸ்ட் வைரலானது. ஆனால் அவர் பேசிய வீடியோக்கள் எல்லாம் மிகவும் பழமையானது என்று தெரிகிறது.

குண்டூரில் வசிக்கும் சத்தியநாராயணா செய்த புகார் மீது வழக்குப்பதிவு செய்த சிஐடி போலீசார் பாஸ்டர் பிரவீன் சக்கரவர்த்தியை கைது செய்தார்கள். மதங்களிடையே பகையைத் தூண்டும்படியாக அவர் பதிவிட்ட போஸ்ட்கள் இருக்கின்றன என்று போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தெரிவித்தனர்.

ALSO READ:  யுபிஐ கட்டணத்துக்கு வரியா? பரவும் வதந்தியும் அரசின் விளக்கமும்!

“பிரவீன் சக்கரவர்த்தி என்பவர் காகினாடாவைச் சேர்ந்த கிறிஸ்தவ மதபோதகர். இதற்கு முன்பு அவர் வெளியிட்ட யூடியுப் வீடியோக்களில் பிற மதங்களின் மன உணர்ச்சிகளை நோகச்செய்யும் படி விமர்சனம் செய்தார்… அவருடைய பேச்சுக்களால் மதங்களிடையே சச்சரவுகள் தலையெடுக்கும் வாய்ப்பு உள்ளது…

அவருடைய விமர்சனங்கள் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் விதமாக இருப்பதால் அரஸ்ட் செய்தோம். பிற மதங்களை இழிவு படுத்தினால் பார்த்து சும்மா இருக்க மாட்டோம்” என்று டிஜி சுனில் குமார் தெரிவித்தார்.

கோவில்களை மீது தாக்குதல் நடத்திய 180 வழக்குகளில் 337 பேரை கைது செய்துள்ளோம் என்று டிஜிபி கௌதம் சவாங் குறிப்பிட்டார். ராமதீர்த்தம் பிரதான கோவிலில் தாக்குதல் நடந்துள்ளதாக சிலர் பிரச்சாரம் செய்கிறார்கள் என்றும் ஆனால் அதற்கு இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் மலை மீது உள்ள கோவிலில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதற்கு ஒரு நாள் முன்பு தாக்குதல் நடந்துள்ளது என்றும் அவர் கூறினார்.

போலீசாரை குல, மதங்களோடு முடிச்சு போடுவதை என் 35 ஆண்டு சர்வீசில் எப்போதும் பார்க்கவில்லை என்று கூறி வேதனை தெரிவித்தார்.

ALSO READ:  ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img