ராஜினாமா செய்துட்டு எந்தக் கட்சியிலன்னாலும் போய் சேர்ந்துக்குங்க: ரஜினி மக்கள் மன்றம்!

rajini-arjunamurthi
rajini-arjunamurthi

ரஜினி மக்கள் மன்றத்தினர் தாங்கள் ராஜினாமா செய்துவிட்டு எந்தக் கட்சியிலும் போய்ச் சேரலாம் என்று ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி வி.எம். சுதாகர் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த், தாம் அரசியல் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்திருந்தார். இதை அடுத்து, அவரது ரசிகர்கள் ரஜினி மக்கள் மன்றத்தின் பெயரில், உறுப்பினர்களை புதிய கட்சியில் சேர்வதற்காக சேர்க்கத் தொடங்கினர். ஒரு வார்டுக்கு 15 பேர் என்ற அளவில் உறுப்பினர்களைச் சேர்க்க முனைப்புடன் இருந்தனர்.

ஆனால், திடீரென புதிய அரசியல் கட்சி தொடங்குவதில் இருந்து ரஜினி பின்வாங்கினார். இதனால், அரசியல் ஆசையில் இருந்த ரஜினியின் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

ரஜினி மக்கள் மன்றத்திலும், ரஜினி தொடங்கும் புதிய அரசியல் கட்சியிலும் திமுக.,வின் ரகசிய சதியும், திட்டமிடலும் உண்டு என்று ஏற்கெனவே கூறப் பட்ட குற்றச்சாட்டுகளை மெய்ப்பிப்பது போல், ரஜினியின் முடிவால் ஏமாற்றம் அடைந்திருப்பதாகக் கூறி, ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த சிலர் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுக.,வில் இணைந்தனர்.

தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் செந்தில் செல்வானந்த், தேனி மாவட்டச் செயலாளர் கணேசன் உள்ளிட்டோர் நேற்று திமுக.,வில் இணைந்தனர். இது ரஜினி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இது குறித்து கருத்து தெரிவித்திருந்த பலரும் தாங்கள் இன்னமும் ரஜினி ரசிகர்கள் தான் என்றும், முதுகில் குத்துபவர்கள் இல்லை என்றும் டிவிட்டர், பேஸ்புக் என கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில், ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி வி.எம்.சுதாகர் இன்று ஓர் அறிக்கை வெளியிட்டார். அதில்… ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ளவர்கள் ஏதேனும் அரசியல் கட்சியில் இணைந்து செயல்பட விரும்பினால், ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு அவர்கள் விருப்பம் போல் எந்த அரசியல் கட்சியில் வேண்டுமானாலும் இணைந்து கொள்ளலாம். அவர்கள் வேறு கட்சிகளில் இணைந்தாலும், அவர்கள் எப்போதும் நம் அன்புத் தலைவரின் ரசிகர்கள்தான் என்பதை ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்கள் யாரும் மறந்து விடக்கூடாது.. என்று குறிப்பிட்டிருக்கிறார்.

rajini2
rajini2

ரஜினி அரசியல் கட்சி தொடங்காமல் போனதில், திமுக., மற்றும் மாறன் சகோதரர்கள் சதி உள்ளது என்றும், ரஜினிக்கு நெருக்கமாக இருக்க திமுக., தன் பி டீம் ஒன்றை அனுப்பியது என்றும், திமுக., மிரட்டியதால்தான் ரஜினி திடீரென கட்சி தொடங்காமல் பின்வாங்கினார் என்றும் குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப் பட்ட நிலையில், தற்போது ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ள சிலர் திமுக.,வில் நேரடியாகவே இணைந்து வருவது அந்த குற்றச்சாட்டுகளை உண்மை ஆக்குவதாகவே பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories