December 5, 2025, 1:04 AM
24.5 C
Chennai

பசியோடு ஹோட்டலுக்கு சாப்பிட வந்த பெண்களை லத்தியால் தாக்கிய போலீஸ்!

si attacked ladies in hotel2 - 2025

கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில், உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்திய உதவி ஆய்வாளர்…

கொரோனா ஊரடங்கை காரணம் காட்டி ஓட்டலுக்கும் புகுந்து உதவி காவல் ஆய்வாளர் லத்தியால் தாக்கியதால் ஒரு பெண் உள்ளிட்ட 4 பேர் காயமடைந்தனர். இந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில், காவல் உதவி ஆய்வாளர் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டார்.

தமிழக அரசின் கொரோனா கட்டுப்பாடுகளின்படி ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன. அதன்படி ஓட்டல்கள், தேனீர் கடைகள், சினிமா தியேட்டர்கள், பல்பொருள் அங்காடிகள் உள்ளிட்டவைகளில் 50 சதவீதம் வாடிக்கையாளர்களை அனுமதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இரவு 11 மணி வரை மட்டுமே கடைகள் இயங்க உத்தரவிடப் பட்டுள்ளது.

si attacked ladies in hotel1 - 2025

கோவை காந்திபுரம் வெளியூர் பேருந்து நிலையம் பகுதியில், மோகன்ராஜ் என்பவர் ஸ்ரீ ராஜா என்ற பெயரில் ஓட்டல் நடத்தி வருகிறார். இந்த ஹோட்டல், தமிழக அரசின் உத்தரவுப்படி செயல்படுவதாகவும், கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளுடன் செயல்படுவதாகவும், இரவு 11 மணி வரை செயல்படுவதாகவும் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

si attacked ladies in hotel3 - 2025

இந்நிலையில், நேற்று இரவு 10.20க்கு ஓசூரில் இருந்து வந்த பயணிகள் மிகவும் பசிக்கிறது என்று கூறியதை அடுத்து, அவர்களுக்கு உணவு வழங்கப் பட்டிருக்கிறது. ஓட்டல் ஷட்டர் பாதி அடைக்கப்பட்டிருந்த நிலையில், அங்கு வந்த காட்டூர் காவல் நிலைய எஸ்ஐ முத்து, ஓட்டலின் உள்ளே நுழைந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களை லத்தியால் தாக்கியுள்ளார்.

இந்த தாக்குதலில், ஒரு பெண்ணுக்கு தலையிலும், ஒருவருக்கு கையிலும் என காயம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக, காவல்துறை ஆணையாளரிடம் ஓட்டல் உரிமையாளர் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் உதவி ஆணையர் சம்பவம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய காவல் துறை ஆணையர் உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில் காட்டூர் எஸ்ஐ முத்து கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டார். ஓட்டலுக்குள் புகுந்த காவல்துறையினர் தாக்குதல் நடத்திய சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வைரலாகி வருகின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories