21-03-2023 12:56 PM
More
    Homeஅடடே... அப்படியா?மு.க. அழகிரி மீதான நில அபகரிப்பு வழக்கு சென்னைக்கு மாற்றம்!

    To Read in other Indian Languages…

    மு.க. அழகிரி மீதான நில அபகரிப்பு வழக்கு சென்னைக்கு மாற்றம்!

    alagiri
    alagiri

    மதுரை: முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக., முன்னாள் தலைவர் மு.கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரி மீதான நில அபகரிப்பு வழக்கு, சென்னைக்கு மாற்றப் பட்டுள்ளது.

    முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி தனது அறக்கட்டளை மூலம் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சிவரக்கோட்டை பகுதியில் தயா பொறியியல் கல்லூரியை கட்டினார். இதற்காக அப்பகுதியில் உள்ள விநாயகர் கோயிலுக்கு சொந்தமான 44 சென்ட் நிலத்தை அபகரித்ததாக அந்த புகாரின் பேரில் , நில அபகரிப்பு பிரிவு போலீசார் முக அழகிரிக்கு எதிராக வழக்குப் பதிவு செய்தனர்.

    இந்த வழக்கின்,  விசாரணை மதுரையில் உள்ள நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. போலீசார் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் வழக்கின் 465, 468,471 ஆகிய  சட்டப் பிரிவுகள்  பொருந்தாது என  உத்தரவிட்டது.

    இந்த உத்தரவை எதிர்த்து அரசுத் தரப்பு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில், நில அபகரிப்பு வழக்கில், மு.க அழகிரி மீதான சில பிரிவுகள்  பொருந்தாது என மதுரை மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை  ரத்து செய்ய வேண்டும்” என கூறப்பட்டிருந்தது.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதி கிருஷ்ணவள்ளி, சென்னை உயர்நீதிமன்ற சுற்றறிக்கையின் அடிப்படையில்,  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான அழகிரி மீதான இந்த வழக்கு விசாரணையை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டார்

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    three × four =

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Most Popular

    மக்கள் பேசிக்கிறாங்க

    ஆன்மிகம்..!

    Follow Dhinasari on Social Media

    19,036FansLike
    388FollowersFollow
    83FollowersFollow
    74FollowersFollow
    4,628FollowersFollow
    17,300SubscribersSubscribe

    சமையல் புதிது..!

    COMPLAINT BOX | புகார் பெட்டி :

    Cinema / Entertainment

    லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை..

    திருவண்ணாமலையில் நேற்று படமாக்கப்பட்ட லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை எதிரொலி ஐஸ்வர்யா ரஜினிகாந்தின்...

    கண்ணை நம்பாதே-படம் எப்படி?..

    அவரவர் குற்றத்திற்கு தண்டனை உண்டு என்கிற கருவை அடிப்படையாக் கொண்டு உருவான படம் கண்ணை நம்பாதே. தான்...

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once..

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once திரைப்படம் .சிறந்த...

    ஆர் ஆர் ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது..

    ஆர் ஆர் ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது.விருதைபெரும் மகிழ்ச்சி...

    Latest News : Read Now...