December 6, 2025, 1:50 AM
26 C
Chennai

சினிமாவில் பயன்படுத்தும்போலி ரூபாய் வைத்து பெண் நடத்திய நிதி நிறுவனம்! உதவிய இயக்குநர்!

sindhu
sindhu

கன்னியாகுமரியில் சினிமா சூட்டிங்கிற்கு பயன்படுத்தும் போலி ரூபாய் நோட்டுகளை கொண்டு நிதி நிறுவனம் நடத்தி வாடிக்கையாளரை ஏமாற்றிய பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அடுத்த வெள்ளாங்கோடு பகுதியில் தனியார் முந்திரி ஆலையில் கள்ளப் பணம் பதுக்கி வைத்திருப்பதாக உளவு பிரிவு காவல்துறை உதவி ஆய்வாளர் சிவசங்கரனுக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து காவலர்கள் அங்கு சென்று விசாரித்தபோது, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு சொகுசு காரில் மூன்று இரும்பு லாக்கர்கள் இருந்துள்ளது.

இதில் லாக்கர்களில் 2000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் கள்ள நோட்டுகள் 50 லட்ச ரூபாய் இருப்பதை கண்டு அவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தியதில் பளுகல் பகுதியில் பம்பா என்ற பெயரில் தனியார் நிதி நிறுவனம் நடத்தும் சிந்து என்பவர் இந்த பணத்தை பதுக்கி வைத்திருப்பதாக விசாரணையில் தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து அவரை கைது செய்து விசாரித்ததில், இவர் நிதி நிறுவனம் நடத்தி குறைந்த வட்டிக்கு பெரும் தொகையை கடனாகப் பெற்று தருவதாக கூறி பலரிடம் கமிஷன் தொகையாக லட்சக்கணக்கில் பணம் வாங்கியுள்ளார்.

கடன் பணத்தை கேட்பவர்களை நம்ப வைப்பதற்காக திரைப்பட சூட்டிங்களுக்கு பயன்படும் போலி கள்ள ரூபாய்களை லாக்கரில் வைத்து அவர்கள் இருப்பிடத்திற்குச் சென்று லாக்கரை திறந்து பணம் இருப்பதாக காண்பித்துவிட்டு, லாக்கர் சாவியை தான் கொண்டு சென்றுவிட்டு போலி பணத்தை பயனாளிகள் வீட்டிலேயே வைத்துவிட்டு அவர்களை நம்ப வைத்துள்ளார்.

இதனால் உறுதியாக தங்களுக்கு குறைந்த வட்டியில் பணம் கிடைக்கும் என நம்பிய சிலர், தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களை இவரிடம் குறைந்த வட்டியில் கடன் வழங்க இவரை பரிந்துரைத்து உள்ளனர்.

இவரிடம் குறைந்த வட்டிக்கு பணம் கிடைக்கும் என நம்பி நூற்றுக்கு மேற்பட்டோர் ஏமாந்து உள்ளனர்.

சினிமா சூட்டிங்கிற்கு பயன்படும் போலி ரூபாய்களைக் கொண்டு நிதி நிறுவனம் நடத்தி வாடிக்கையாளரை ஏமாற்றிய பளுகலை சேர்ந்த சிந்துவை போலிஸார் கைது செய்து அவர் பயன் படுத்திய சொகுசு காரையும் லாக்கர்களையும் பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கு உடந்தையாக இருந்த கேரளாவை சேர்ந்த சினிமா இயக்குனர் உட்பட ஐந்து பேரை போலீசார் தேடி வருகின்றனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories