மழையில் நனைந்து சேதம்… நெல் கொள்முதல் நிலையம் கோரும் சோழவந்தான் விவசாயிகள்!

paddy wet field
paddy wet field
  • கோடை மழையில் கலத்தில் காய்ந்த நெல் நனைந்து சேதம்
  • ரூபாய் பல லட்சம் பாதிப்படைந்த விவசாயிகள் கவலை
  • நெல் கொள்முதல் நிலையம் அமைய அரசிடம் கோரிக்கை

மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் அறுவடை செய்த நெல்லை விவசாயிகள் களத்தில் வெயிலில் காய வைத்தனர் அப்போது பெய்த கோடை மழையில் நனைந்ததால் எதிர்பார்த்த கூடுதல் விலை இல்லை என்றும் பல லட்சம் ரூபாய் நஷ்டமடைந்து கவலை அடைந்த விவசாயிகள் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சோழவந்தான் பகுதியில் தென்கரை முள்ளிப்பள்ளம் ஊத்துக்குளி மழையூர் நாராயணபுரம் கச்சிராயிருப்பு மேலக்கால் போன்ற பல கிராமங்களில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் புதுவகை சன்ன ரக பொன்னி வகை குறுகிய கால நெற்பயிர்கள் கண்மாய் பாசனத்தில் பயிரிடப்பட்டன

நெற்பயிர்கள் முற்றி பல இடங்களில் அறுவடை பணி மும்முரமாக நடக்கிறது பல விவசாயிகள் இயந்திரம் மூலம் அறுவடை செய்த நெல் களத்தில் பரப்பி சுட்டெரிக்கும் வெயிலில் கூலியாட்கள் காய வைத்தனர் வியாபாரிகளிடம் கூடுதல் விலைக்கு விற்க முனைப்பாக செயல்பட்டனர் நன்றாக காய்ந்து நிலையிள் மூடைகளில் அடுக்கி எடை போடும் பணியில் ஈடுபட்டனர்

ALSO READ:  நெல்லையில் நடந்த இந்து முன்னணி மாநிலப் பொதுக்குழு; போதை நடமாட்டம், திருச்செந்தூர், தீபம் உள்ளிட்ட 8 தீர்மானங்கள்!

இத்தருணத்தில் திடீரென பகல் 2 மணி அளவில் கோடை கனமழை பெய்தது நன்றாக காய்ந்த நெல் மழை நீரால் நனைந்து பல பகுதிகளில் தண்ணீரோடு அடித்துச் சென்றன பல லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு பாதிப்பான விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்

ஊத்துக்குளி விவசாயி திருப்பதி கூறுகையில்… எங்களது பாரம்பரிய தொழில் விவசாயம் தான் நெல் வாழை பயிரிட்டு எளியமுறையில் தென்கரை ஊத்துக்குளி பகுதியில் எனக்கு சொந்தமாக 17 ஏக்கர் நிலத்தில் நெல் பயிரிட்டேன் …

சொற்ப வருமானத்தில் வாழ்ந்து வருகிறோம் அதில் குடும்பம் நடத்தி ஒரு ஏக்கருக்கு விதை உரம் பூச்சிமருந்து விதைத்தல் களை எடுத்தல் உட்பட விவசாய பணிக்கு 20 முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது கூடுதல் வட்டிக்கு கடன் வாங்கி விவசாயம் செய்கிறோம் ஒரு ஏக்கருக்கு கூடுதல் மகசூல் பெற்றால் 30 முதல் 35 மூட்டை நெல் அதிக லாபம் ரூபாய் பத்தாயிரம் கிடைக்கும்…

அரசின் கொள்முதல் நிலையம் இருந்தால் இன்னும் கூடுதல் லாபம் கிடைக்கும் தற்போது வியாபாரிகள் இடைத்தரகர்கள் அடிமாட்டு விலைக்கு ஒரு மூட்டைக்கு 65 கிலோ வீதம் அளந்து விற்பனை செய்கிறோம் அறுவடை நெல்லை களத்துமேட்டில் வெயிலில் காய வைத்த போது திடீரென்று பெய்த கோடை மழையில் நனைந்து பெருத்த சேதம் அடைந்தது இந்நிலையில் எதிர்பார்த்த விலை கிடைக்காததால் நஷ்டம் அடைந்த விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்….

ALSO READ:  717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

எங்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை அரசு ஊழியர்களுக்கு வருமானம் சம்பளம் கிம்பளம் கூடுதலாக வழங்கப்படுகிறது அதுபோல் புதிதாக அமைந்த திமுக அரசு விவசாயிகள் மீதும் அக்கறை காட்டி நெல் கூடுதல் விலை விற்க அல்லது நெல் கொள்முதல் நிலையம் அமைத்து சேதத்திற்கு நிவாரணம் வழங்கி எங்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

பஞ்சாங்கம் ஜூலை 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தாம்பரம் – தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

தாம்பரம் தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில் சேவை திருச்சி மதுரை சிவகாசி ராஜபாளையம் வழியாக அதி விரைவு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.

Entertainment News

Popular Categories