December 7, 2025, 10:42 AM
26 C
Chennai

வீட்டிற்கே மருந்தை டெலிவரி செய்யும் ட்ரோன்!

drone
drone

தொழில்நுட்பம் நமது வாழ்வில் பல உதவிகளை செய்து வருகின்றது. தற்போது இதில் மற்றொரு அம்சமும் சேர்ந்துள்ளது. இனி மருந்துகள் தேவைப்படுபவர்களுக்கு ட்ரோன்கள் மூலம் மருந்துகள் விநியோகிக்கப்படும்.

ட்ரோன்கள் (Drone) மூலம் மருந்துகளை விநியோகிக்க அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் சோதனை செயல்முறை ஜூன் 18 முதல் பெங்களூருவில் தொடங்க உள்ளது. அனுமதிக்கப்பட்ட ட்ரோன்கள் beyond the Visual Line of Sight (BVLOS) ட்ரோன்கள் என அழைக்கப்படுகின்றன.

இந்த ட்ரோனுக்கான சோதனை நடக்கும் இடம் பெங்களூருவிலிருந்து சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

ட்ரோன்கள் மூலம் மருந்து சேவை செய்யும் இந்த வழிமுறை முன்பே தொடங்கப்பட்டிருக்க வேண்டியது. ஆனால், கொரோனா தொற்றுநோய் (Corona Pandemic) காரணமாக அது தாமதமானது.

இந்த சேவைகளை வழங்கும் நிறுவனங்களில் பெங்களூருவின் த்ரோட்டில் ஏரோஸ்பேஸ் சிஸ்டம்ஸ் (TAS) நிறுவனமும் ஒன்றாகும். இது மார்ச் 2020 இல் DGCA-விடம் ஒப்புதல் பெற்றது. TAS இதற்கான அனைத்து அனுமதிகளையும் பெற்றுள்ளது.

ஜூன் 18 முதல் பெங்களூரிலிருந்து 80 கி.மீ தூரத்தில் உள்ள கவுரிபிதனூரில் சோதனையைத் தொடங்கும், இந்த சோதனை 30-45 நாட்கள் நீடிக்கும்.

சோதனைக்கான ஒப்புதலை மார்ச் 20, 2020 அன்றே டி.ஜி.சி.ஏவிடம் பெற்றுவிட்டதாக த்ரோட்டில் ஏரோஸ்பேஸ் சிஸ்டம்ஸ் தெரிவித்துள்ளது.

drone
drone

ஆனால் கொரோனா தொற்றுநோய் காரணமாக, சில பணிகள் எஞ்சியிருந்தன, அது இப்போது நிறைவடைந்துள்ளது.

TAS-ஐத் தவிர, நாராயணா ஹெல்த் இந்த கூட்டமைப்பில் ஒரு பங்காளியாக உள்ளது. இந்த நிறுவனம் சோதனைகளின் போது பயன்படுத்தப்படும் மருந்துகளை வழங்கும்.

இந்த கூட்டமைப்பில் தொழில்முறை ட்ரோன் பயன்பாடுகளுக்கான விமான போக்குவரத்து விழிப்புணர்வு அமைப்புகளில் நிபுணரான இன்வோலி-சுவிஸ்ஸும் பங்கு கொண்டுள்ளது.

இது டிரோன்களுக்கான போக்குவரத்து மேலாண்மை முறையை வழங்கும். இது தவிர, ஹனிவெல் ஏரோஸ்பேஸ் இதில் பாதுகாப்பு நிபுணராக பணியாற்றி வருகிறது.

இந்த கூட்டமைப்பு இரண்டு வகையான ட்ரோன்களைப் பயன்படுத்தும். இதில் MedCOPTER மற்றும் TAS ஆகியவை அடங்கும். ஆன்-டிமாண்ட் டெலிவரி மென்பொருளுக்கு RANDINT என்று பெயரிடப்பட்டுள்ளது.

TAS-ன் சி.இ.ஓ நாகேந்திரன் கந்தசாமி, “MedCOPTER-ரின் சிறிய வகை டிரோன், 1 கொலோகிராம் எடைகொண்ட பொருட்களை 15 கிலோமீட்டர் வரை எடுத்துச்செல்லும் வல்லமை படைத்தது. 2 கிலோ எடையை 12 கி.மீ வரை எடுத்துச்செல்லும்.

நாங்கள் இரு டிரோன்களையும் 30-45 நாட்களுக்கு சோதிப்போம். இதன் போது டி.ஜி.சி.ஏ இன் அறிவுறுத்தலின் படி 100 கி.மீ. வரை பயணிக்க வைப்போம்.

எங்கள் இலக்கு சுமார் 125 மணி நேரம் பறக்க வைக்க வேண்டும் என்பதாகும். சோதனைக்குப் பிறகு, பரிசீலனைக்கு இது அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும்.” என்று கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Entertainment News

Popular Categories