டைனசோரின் பாத சுவடுகள் கண்டுபிடிப்பு!

dinosaure - 2026

முற்றிலும் அழிந்து போன உயிரினமான 6 வகை டைனோசர் இனங்களின் பாத சுவடுகள் இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் கென்ட் என்ற பகுதியில் 110 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசர்களின் பாதச் சுவடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை ஆராய்ந்த ஹேஸ்டிங்ஸ் மியூசியம் அண்ட் ஆர்ட் கேலரி, இதுகுறித்து ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

இந்த பாத சுவடானது உயர்ந்த மலைப்பகுதியிலும் கடற்கரைப் பகுதியிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதிகளில் புயல்களின் காரணமாக மணல், கடற்கரைப் பகுதி என தொடர்ந்து பாதித்து புதிய புதைபடிவங்களை வெளிவர செய்துகொண்டிருக்கிறது.

ஆனால் டைனோசர் பாத சுவடுகள் கண்டுபிடிக்கப்பட்டது இது தான் முதல் முறை என்பதால் இது மிகச் சிறந்த கண்டுபிடிப்பாக பார்க்கப்படுகிறது.

ஏனெனில் இந்த டைனோசர் இனம் முற்றிலும் அழிந்து போவதற்கு முன் இந்த நாட்டில் உலவித் திரிந்திருக்கும் என தொல்லுயிரியல் துறை பேராசிரியர் டேவிட் மார்டில் தெரிவித்தார்.

மேலும் டைனோசர்கள் தற்போது ஒயிட் கிளிஃப்ஸ் ஆப் டோவர் இருக்கும் இடத்தில் உலவியிருக்கின்றன. அடுத்த முறை நீங்கள் அதனருகில் படகில் செல்லும் போது டைனோசர்கள் குறித்து கற்பனை செய்து பாருங்கள் என்று கூறியுள்ளார்.

தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள டைனோசர்களின் பாத சுவடுகள் ஃபோக்ஸ்டோன் மியூசியத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த பாத சுவடுகள் பல்வேறு வகை டைனோசர்ளுடையது. அவை 110 ஆண்டுகளுக்கு முந்தையது. இந்த டைனோசர்கள் ஆங்கிலோசார்ஸ் (Ankylosaurs)என்ற வகையைப் போன்றது. இதற்கு பார்ப்பதற்கு மிக கரடுமுரடு தோற்றத்தில் காணப்படும்.

இதுகுறித்து ஹேஸ்டிங்ஸ் மியூசியம் மற்றும் ஆர்ட் கேலரியைின் முதன்மை கியூரேட்டர் பிலிப் ஹேட்லேண்ட் தெரிவித்ததாவது, கடந்த 2011 ஆம் ஆண்டு ஃபோக்ஸ்டோனில் பாறைகளில் வித்தியாசமான மாற்றங்கள் காணப்பட்டது.

மீண்டும், மீண்டும் அது போல் காணப்பட்டது. நான் அவை பாத சுவடுகளாக இருக்கும் என்று கணித்தேன். பொதுவாக இதனை புவியியலாளர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

ஆனால் அது குறித்து தீவிரமான பரிசோதனையில் ஈடுபட்டேன். அதற்காக போர்ட்ஸ்மவுத் பல்கலைக்கழக வல்லுநர்கள் கொண்ட குழுவுடன் இதுகுறித்து ஆராய்ந்தேன். ஏனெனில் அறிவியல் குழுவினரை ஒப்புக்கொள்ளச் செய்வது கடினமானது என்றார்.

மேலும் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட பெரும்பாலான பாத சுவடுகள் தனித்துவமானது. ஆனால் அவை 6 பாத சுவடுகள் இணைந்து ஒரு வழித்தடம் போல உருவாக்கியிருக்கிறது.

அதாவது ஒரே விலங்கின் ஒன்றுக்கு மேற்பட்ட பாதச்சுவடுகளால் ஆனது. அவை யானையின் பாத சுவடிற்கு சமமாக இருந்தது.

இதில் பெரிதான பாத சவாடனது 80 செமீ அகலமும், 65 சமீ நீளமும் கொண்ட Iguanodon வகையைச் சேர்ந்தது. இவை 10 மீட்டர் வரை நீளம் வளரக் கூடியது. இவை இரண்டு கால்களிலும், சில சமயம் நான்கு கால்களிலும் நடக்கக் கூடியது. இவை தாவர வகைகளை உண்ணக் கூடியது என தகவல் அளித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories