December 6, 2025, 6:34 AM
23.8 C
Chennai

ஆர்எஸ்எஸ்., தலைவர் மதுரை வருகையில் ‘எம்பி.,’க் குதிக்கும் அரசியல்: நம் சந்தேகங்கள்!

mohanjibhagavat rss
mohanjibhagavat rss

ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் மதுரைக்கு இன்று   வருகிறார் இன்று முதல் அடுத்து நான்கு நாட்களுக்கு சில நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார். இந்நிலையில் அவரது வருகையை ஒட்டி மதுரை நகரில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக மதுரை மாநகராட்சி சார்பில் அனுப்பப்பட்ட சுற்றறிக்கையை மதுரை எம்பி வெங்கடேசன் பொதுவெளியில் தனது ட்விட்டர் பதிவில் பகிர்ந்து அரசியலை செய்திருக்கிறார். 

அரசியல்வாதி என்றால் அரசியல் தான் செய்ய முடியும் அவியலா செய்ய முடியும் என்று கேள்வி எழுப்பியவர்கள் ஆட்சி செய்யும் மாநிலத்தில் மதுரை எம்.பி., சு. வெங்கடேசனும் தன் பங்குக்கு ஒரு மோசமான அரசியலை செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.  

ஆர்எஸ்எஸ்., தலைவர் வருகையை முன்னிட்டு சாலைகளை சீராகவும் தூய்மையாகவும் வைத்துக் கொள்ள ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருக்கிறது அதை பொது வெளியில் பகிரங்கமாக பகிர்ந்து ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தனது வரம்பை மீறி இருக்கிறார். 

மதுரையில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்துகொள்ள உள்ள நிகழ்ச்சிக்காக அவர் செல்லும் வழித் தடங்களில் சாலை சீரமைப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள மாநகராட்சி சுற்றறிக்கை அனுப்பியது அந்த சுற்றறிக்கையை மாநகராட்சி பணியில் உள்ள யாரோ ஒரு ஊழியர் வாட்ஸ் அப்பில் பகிர்ந்திருக்கிறார் அந்த ஊழியர் யார் அவர் யாருக்காக ஊழியம் செய்கிறார் என்பதை பொதுவெளியில் பகிரங்கப்படுத்த வேண்டும் 

madurai corporation circular - 2025

இந்த சுற்றறிக்கையை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்ட மதுரை எம்பி வெங்கடேசன், “அரசின் எந்த விதிகளின் படி மதுரை மாநகராட்சியின் உதவி ஆணையர் இந்த சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார் என்பதை மாவட்ட நிர்வாகம் உடனடியாக விளக்க வேண்டும்”  என்று  கேள்வி  எழுப்பியிருந்தார்.

அதற்கு மதுரை மாநகராட்சி ஆணையர், “உச்சக்கட்ட பாதுகாப்பு உள்ள முக்கிய பிரமுகர்களுக்கு எப்போதும் செய்யக் கூடிய பணிதான்”  என்று விளக்கம் அளித்துள்ளார். 

 ஆனால் இந்த சுற்றறிக்கையை அனுப்பிய உதவி ஆணையர், பழி வாங்கப்பட்டு இருக்கிறார். அவர் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, செய்யத்தகாத குற்றம் செய்திருப்பது போல் தமிழக அரசால் பழிவாங்கப் பட்டிருக்கிறார் என்பதே நிஜம். இதற்குக் காரணமாக அமைந்து இருப்பது, ஓர் அப்பாவி அதிகாரியின் பணிக்கு தொந்தரவு செய்ததாக அமைந்திருப்பது அரைகுறை அறிவுடன் கூடிய, அல்லது வன்மம் மனத்தில் புரையோடிய ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் செயல்பாடு மட்டுமே என்பது பளிச்செனத் தெரிகிறது. 

இந்த விவகாரத்தில் மேலும் சில கேள்விகள் எழுகின்றன.

எத்தனையோ முறை ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் சென்னைக்கு வந்திருக்கிறார். இன்னும் கோவை உள்ளிட்ட ஊர்களுக்கும் வந்திருக்கிறார். பயங்கரவாதிகளின் தாக்குதல் பட்டியலில் இருக்கும் ஒருவரின் பாதுகாப்பு, குறிப்பாக, இசட் பிளஸ் பிரிவு என்ற வகையில் இருக்கும் முக்கியப் பிரமுகர் ஒருவரின் பாதுகாப்பு என்று வரும்போது அந்த அந்தப் பகுதி காவல் துறையும் அதை கவனத்தில் எடுத்துக் கொள்ளும். இதற்காக எத்தனையோ துறைகள் வேலை செய்கின்றன! 

ஆனால், இதுவரை இப்படி எந்த உத்தரவுகளும் பொது வெளியில் வந்ததில்லை. வழக்கமாக நடைபெறும் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களை எந்த அடிப்படை அறிவும் உணர்வும் உள்ள அலுவலக ஊழியரும், அதிகாரியும், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினரும் பொது வெளியில் பகிர மாட்டார்கள். ஆனால் உள் நோக்கத்துடன் போர் அலுவலக ஊழியம் பார்ப்பவரும், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் பொதுவெளியில் பகிரங்கப் படுத்தியிருக்கிறார்கள். 

கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினருக்கும் கூட்டணிக் கட்சியான ஆளும் திமுகவுக்கும் இருக்கும் ஒரே உள்நோக்கம் ஆர்.எஸ்.எஸ்., என்றால் இதுதான் நடக்கும் என்ற ஒரு சமிக்ஞையை வெளி உலகத்துக்கு கொடுக்க முயன்று வேலை   செய்வதுதான்!

 ஏற்கனவே திராவிட இயக்கங்கள் தமிழகத்தில் தேசிய உணர்வை மழுங்கச் செய்வதிலும் துண்டாக்குவதிலும் பெருமுயற்சி எடுத்து வந்திருக்கின்றன. ஆட்சியில் இருந்த அதிமுக., ஏற்கெனவே,  இந்து இயக்கங்கள், பாஜக., தொடர்பு இயக்கங்களை நசுக்க பல வேலைகளைப் பார்த்திருக்கிறது.  

திமுக., இப்போது பாஜக.,வின் மேலுள்ள பயத்தால்… வேண்டுமென்றே அரசியல் செய்து வருகிறது. இதுவரை மோகன் பாகவத்துக்கு இல்லாத வெளிச்சம் இப்போது ஏன்? நேற்றுவரை சர்வ சாதாரணமாக செயல்வீரர்களின் வீடுகளுக்குக் கூட வந்துவிட்டுப் போனவர் அவர். அப்போதெல்லாம் ஏன் இந்த சுற்றறிக்கை அரசியல் செய்யப் படவில்லை.  

வழக்கமான நடைமுறையை வேண்டுமென்றே அரசியல் ஆக்கியதில்… யோசித்துப் பார்த்தால்.. திமுக.,வின் அவியல் அற்ற அரசியல் புரிகிறது!

வழக்கமாக ஒரு இசட் ப்ளஸ் பாதுகாப்பில் இருக்கும் முக்கிய தலைவர் வரும்போது, அலுவலக உள்மட்ட அளவில், வாய்மொழி உத்தரவாக ‘பாதுகாப்பு நடவடிக்கைகள்’ மேற்கொள்ளச் சொல்லுவதும் இப்படி உள்-அறிவிக்கை – வெளியிடுவதும் உண்டு. இது சுகாதாரப் பணியாளர்கள், ஊழியர்கள் சம்பந்தப் பட்டது. இதில் அதிகார துஷ்பிரயோகமோ, அத்துமீறலோ இல்லை. 

ஆனால், தங்களுக்கு ‘பிச்சை போட்ட’வர்களுக்காக ஊழியம் பார்க்கும் மாநகராட்சி அலுவலக ஊழியர், எம்பி.,க் குதிப்பவர், இதனை ஏதோ பெரிய அரசியல் சாதனையாக வெளம்பரப் படுத்தி அரசியல் செய்து, ஓர் அப்பாவி உதவிஆணையரை மூலையில் முடக்கி விட்டிருக்கிறார்கள்.  உதவாக்கரை வேலை பார்த்த எம்பிக் குதிப்பவர் கிறிப்டோ என்றால், உதயசந்திரன் டைரக்ட் ஊழியம் பார்ப்பவர் என்ற குற்றச்சாட்டும் இப்போது சமூகத் தளங்களில் முன் வைக்கப் பட்டிருக்கிறது! 

பாஜக., மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை, ஏதோ மூன்று மாவட்டத்துக்குள் மட்டும் சிறுபான்மையினரின் ஆதிக்கத்தில் திமுக தன் கட்சியை இழந்திருக்கிறது என்று கூறி நிறுத்திக் கொண்டிருக்கிறார். ஆனால், அது தலைமைச் செயலகத்தில் தன் தலையிலேயே அமர்ந்திருக்கிறது என்பதை இப்போது பிச்சை போட்டவர்களுக்காக வெளிப்படையாகக் காட்டியிருக்கிறது திமுக.,! 

madurai eb - 2025

இதே ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மதுரை வருகைக்காக, மின் துறையிலும் இதே போன்ற சர்க்குலர் விடப் பட்டிருக்கிறது. மாநகராட்சியில், ‘பாதுகாப்பு தொடர்பான கூட்டத்தின் விவாதத்தில் சொல்லப் பட்ட அறிவுரையை உதவி ஆணையர் அறிவிக்கை என வெளியிட்டார். அவர் இப்போது பழி தீர்க்கப் பட்டிருக்கிறார். அப்படி எனில், ஏன் மின் துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப் படவில்லை?! ஒருவேளை அது குறித்தும் மதுரை எம்பி டிவிட்டர் பதிவு வெளியிட வேண்டும் போலிருக்கிறது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories