December 6, 2025, 3:58 AM
24.9 C
Chennai

அற்புதமான காட்சி! இயற்கையின் ஆட்சி! வைரல் வீடியோ!

space 1
space 1

விண்வெளியில் மனிதனுக்குத் தெரியாத பல விஷயங்களும், அரிய நிகழ்வுகளும் தொடர்ந்து நடந்துகொண்டே தான் இருக்கிறது..

அப்படி விண்வெளியில் இருந்து பூமியில் நிகழும் நிகழ்வுகளைச் சர்வதேச விண்வெளி நிலையம் கண்காணித்து வருகிறது. அந்த வரிசையில் இப்போது விண்வெளியில் இருந்து பார்த்தபடி பசிபிக் பெருங்கடல் நீர் மீது சூரியன் கதிர்கள் பிரதிபலிக்கும் அற்புதமான காட்சி ISS இல் இருந்து பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. சூரியனை இது வரை நாம் இப்படி ஒரு பரிணாமத்தில் பார்த்திருக்க முடியாது. இந்த அற்புதமான பதிவு சர்வதேச விண்வெளி நிலையத்தால் படம் பிடிக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கிளிப் முழுமையாகப் பார்ப்பவரின் மனதைக் கவரும் வகையில் கண்கவர் காட்சிகளை உருவாக்கியுள்ளது. ஏற்கனவே இந்த டிவிட்டர் பக்கத்தில் வைரலாகிவிட்டது. உண்மையில் இந்த பூமியின் அழகைச் சிறப்பாகக் காட்டியுள்ளது.

ஒரு நிமிடம் நீளமுள்ள இந்த சமூக ஊடகங்களில் வொண்டர் ஆஃப் சயின்ஸால் பதிவேற்றப்பட்டுள்ளது. இது சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஒரு கால இடைவெளி ஆகும். தெரியாதவர்களுக்கு இது டைம் லேப்ஸ் என்று கூறப்படுகிறது.

இது எர்த் சைன்ஸ், ரிமோட் சென்சிங் யூனிட், நாசா ஜான்சன் விண்வெளி மையத்தின் ஈடுபாட்டுடன் இந்த புகைப்படங்களின் தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த அற்புதமான சூரியனின் பிரதிபலிப்பு நீரில் இருந்து பிரகாசிப்பதைக் காட்டுகிறது. இது குமுலோனிம்பஸ் மேகங்களின் (cumulonimbus clouds) வரிசையால் நிழலாடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐஎஸ்எஸ் பூமியின் மேற்பரப்பில் இருந்து கிட்டத்தட்ட 253 மைல்களுக்கு மேல் சர்வதேச டேட் லைனைச் சுற்றி வந்த போது எடுக்கப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது. இந்த படங்களைப் படம் பிடித்து ஒரு நேர இடைவெளியில் வை இணைத்தது தான் சிறப்பு. இந்த வை இது வரை சுமார் 299.4K பயனர்கள் பார்வையிட்டுள்ளனர்.

ISS பற்றி வெளியான திடுக்கிடும் தகவல்
சர்வதேச விண்வெளி நிலையம் பற்றி ஏராளமான செய்திகள் சமீபத்தில் வலைத்தளங்களை நிரப்பி வருகிறது. ISS பற்றி வெளியான அற்புதமான செய்திகளில் இது ஒன்றாகும்.

இருப்பினும், சர்வதேச விண்வெளி நிலையம் பற்றி சமீபத்தில் வெளியான திடுக்கிடும் தகவல் என்னவென்றால். சர்வதேச விண்வெளி நிலையம் தனது இறுதி நாளை நெருங்கி வருவதாகக் கூறப்பட்டுள்ளது.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் 80 சதவீத உபகரணங்கள் காலாவதியாகிவிட்டது என்று ரஷ்யா கூறியுள்ளது.

வன்பொருள் கோளாறு காரணமாகச் சரிசெய்ய முடியாத சேதங்கள் ஏற்பட்டு வருவதாக ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார். இந்த செய்தி தற்போது அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

சர்வதேச விண்வெளி நிலையம் (ISS) நீண்ட காலமாகத் தொடர்ந்து சில கோளாறுகளைச் சந்தித்து வருகிறது. இது இன்னும் சில காலத்தில் “சரிசெய்ய முடியாத” அளவிற்குத் தோல்விகளைச் சந்திக்க நேரிடும் என்று ரஷ்யா எச்சரித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories