செல்போனைப் பறித்துக் கொண்டு ஓடிய திருடன்! துரத்திப் பிடித்த பெண் காவலர்! குவியும் பாராட்டு!

indrani
indrani

பேருந்தில் முதியவரிடம் செல்போனை பறித்து கொண்டு தப்பியோடிய திருடனை பெண் காவலர் துரத்தி பிடித்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

சென்னை பார்க் டவுன் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் தாமோதரன்(70). முதியவரான இவர் நேற்று திருவான்மியூரில் இருந்து ஏ1 பேருந்து மூலமாக சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்தார்.

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தாமோதரன் இறங்கும் போது மற்றொரு பயணி ஒருவர் சட்டை பையில் இருந்த செல்போனை பறித்து கொண்டு தப்பியோடினார்.

தாமோதரன் திருடன் என சத்தம் போட்டதால் அங்கிருந்த பொதுமக்கள் செல்போன் பறித்து கொண்டு ஓடிய நபரை துரத்தி சென்றனர். அப்போது அந்த வழியாக பணி முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்த ஆயுதப்படை பெண் காவலரான இந்திராணி திருடனை விரட்டி பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

பிடிப்பட்ட நபரிடம் பூக்கடை போலீசார் நடத்திய விசாரணையில் வியாசர்பாடியை சேர்ந்த பாலாஜி(28) என்பதும் இவர் மீது ஏற்கனவே ஆவடி,சி.எம்.பி.டி உள்ளிட்ட காவல் நிலையங்களில் பறிப்பு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து பாலாஜி மீது வழக்குபதிவு செய்து கைது செய்தனர். துரிதமாக செயல்பட்டு திருடனை பிடித்த பெண் காவலரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories