boy
boy

சாலைகளை கடக்கும் போது எவ்வளவு தான் பாதுகாப்பாக இருக்க முயன்றாலும் சில நேரங்களில் விதி வலியதாக செயல்பட்டுவிடும்.

சில நேரங்களில் நம்முடைய நல்ல நேரம் நாம் நூலிழையில் உயிர் பிழைத்திருப்போம். இப்படியான உறைய வைக்கும் நிகழ்வுகள் வீடியோவாக சி.சி.டி.வியில் பதிவாவதும், பிறகு சமூக வலைதளங்களில் வைரலாவதும் நம் அன்றாட நிகழ்வில் ஒன்று போல் மாறிவிட்டது.

தன்னுடைய வீட்டுக் கதவை தாத்தா ஒருவர் மறதியாக திறந்து வைத்துவிட்டு செல்ல, வெளியே ஓடிய சிறுவன், வலது புறம் வரும் காரை பார்க்காமல் வேகமாக ஓடினான்.

அப்போது இடது பக்கத்தில் இருந்து சென்ற குப்பை சேகரிக்கும் வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்த நபர், சற்றும் யோசிக்காமல் அந்த சிறுவனை கையைப்பிடித்து இழுத்து மேற்கொண்டு அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தடுத்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் இந்த வீடியோவை ட்விட்டரில் பார்வையிட்டுள்ளனர். 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வீடியோவை ரீட்வீட் செய்துள்ளனர். இந்த வீடியோ குறித்தும் அந்த பணியாளரின் துரித முடிவு குறித்தும் பலரும் தங்களின் கருத்துகளை தெரிவித்ததோடு, அவரின் துணிவை பாராட்டியும் உள்ளனர்.

ALSO READ:  சிறுபான்மை தாஜா அரசியல்; அள்ளிவிடும் தவெக., அரசுக்கு இந்து முன்னணி கண்டனம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending