பராமரிப்பின்றி உயிரிழந்த கோயில் பசு: திருவண்ணாமலையில் அதிர்ச்சி!

cow died in tiruvannamalai temple
cow died in tiruvannamalai temple

திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் கோசாலையில், பசு மாடு பராமரிப்பின்றி உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் நேர்த்திக்கடனாக, ஆண்டுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட பசு மாடுகளை தானமாக கொடுக்கின்றனர். அனைத்து பசுக்களையும் பராமரிக்க முடியாததால், குறைந்தளவு பசுக்களை மட்டும் வைத்து கொண்டு, மீதமுள்ள பசுக்களை மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு இலவசமாக வழங்கி விடுகின்றனர்.

இவ்வாறு கடந்த மாதம், 18 பசுக்கள் வழங்கிய நிலையில், தற்போது, 35 பசுக்கள் உள்ளன. இவற்றின் பராமரிப்புக்காக மாதந்தோறும், ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்யப்படுகிறது.

தற்போது கடலூர் மாவட்டத்தில் பணிபுரியும் இணை ஆணையர் அசோக்குமார், கூடுதல் பொறுப்பாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாக பணியை, கடந்த இரண்டு மாதங்களாக கவனித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த, 15 மாதங்களுக்கு முன் கோசாலையில் உள்ள பசுக்களுக்கு இடையே சண்டை ஏற்பட்டதில் ஒரு பசுவின் கால் முறிந்தது. இவற்றை கவனித்து சிகிச்சை அளிக்காமல் விட்டதால் காலில் புழு வந்து எழுந்து நிற்கமுடியாமல் படுத்த படுக்கையாகக் கிடந்த பசு, கடந்த, 22ஆம் தேதி உயிரிழந்தது.

இதை கோவில் நிர்வாகம் மூடி மறைக்கும் வேலையில் ஈடுபட்டது. தற்போது இறந்த பசுவின் போட்டோவை கோவில் ஊழியர்களே எடுத்து சமூக வலைதளங்களில் நேற்று பரவவிட்டதால், பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

Topics

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

Entertainment News

Popular Categories