இந்த நூற்றாண்டின் இறுதியில் காத்திருக்கும் அழிவு: எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!

earth
earth

காலநிலை மாற்றம் மற்றும் தீவிர வானிலை நிலைமைகள் உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் பல தாக்கங்களை ஏற்படுத்தி வருகின்றன.

இந்நிலையில் பூமி ஒரு பெரிய இயற்கை பேரழிவை நோக்கி செல்கிறது என்று எச்சரித்துள்ள விஞ்ஞானிகள், இந்த நூற்றாண்டின் இறுதியில் ஒரு ‘பேரழிவுக்கு’ வழிவகுக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.

உலகின் முன்னணி அறிவியல் இதழ்களில் ஒன்றான நேச்சர் (Nature), சமீபத்தில் விஞ்ஞானிகளை பங்கேற்பாளர்களாகக் கொண்டு ஒரு கணக்கெடுப்பை நடத்தியது. 2100 ஆம் ஆண்டு முடிவதற்குள் பூமி ஒரு பேரழிவை நோக்கிச் செல்கிறது என்பதை இந்த ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன.

உலகெங்கிலும் உள்ள 234 விஞ்ஞானிகளால் காலநிலை மாற்றம் குறித்த அரசுகளுக்கிடையேயான குழுவான IPCC-ன் காலநிலை மாற்ற அறிக்கை தயாரிக்கப்பட்டது.

அதன்படி கொலம்பியாவின் மெடெல்லின் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகளில் ஒருவரான பாவ்லா ஏரியாஸ், உலகம் வேகமாக மாறி வருவதாகவும் அதன் வளங்கள் சுரண்டப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். மாறிவரும் பருவ மழையினால் உலகம் முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

ALSO READ:  பிஜேபி., உள்ள வந்துடும்!

மேலும் புவி வெப்பமடைதல் அதிகரித்து வருவதாகவும், கடல் மட்டமும் அதிகரித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். உயரும் வெப்பநிலை மற்றும் மாசுபாட்டிற்கு ஏற்ப உயிரினங்களுக்கு வாழ தகுதியான சூழல் கடினமாக இருக்கும் எனவும்.

காலநிலை மாற்றத்தை மாற்றியமைக்க சர்வதேச அரசாங்கங்கள் மெதுவான வேகத்தில் நகர்வதாகவும், இது எந்த தீர்வுக்கும் வழிவகுக்காது என்றும், மக்கள் இடம்பெயர்ந்து செல்வார்கள் என்றும் அவர் கூறினார்.

இதனிடையே நேச்சர் நடத்திய ஆய்வில், பூமியைக் காப்பாற்றவும் காலநிலை மாற்றத்தை மாற்றவும் மனிதர்களுக்கு போதுமான நேரம் இல்லை என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் பூமி அழிந்துவிடும் என்று 40 சதவீத விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 2100-ம் ஆண்டுக்குள் உலகில் பல பருவநிலை பிரச்சனைகள் ஏற்படும், பருவமழை, மேக வெடிப்பு, சுனாமி, அதிக வெப்பம், வறட்சி போன்ற இயற்கை பேரிடர்களால் நாடுகள் அழிந்துவிடும் என்றும் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

உணவு, தண்ணீர் தட்டுப்பாடு போன்ற பிரச்சனைகளால் மனித இனம் சிரமப்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.. இந்த நூற்றாண்டின் இறுதியில் பூமியின் வெப்பநிலை சுமார் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், இது பாரிஸ் ஒப்பந்தத்தின்படி கணிக்கப்பட்ட வெப்பநிலையை விட கணிசமாக அதிகமாகும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ALSO READ:  ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

மேலும் பருவநிலை மாற்றம் உலகில் பேரழிவு போன்ற சூழலை ஏற்படுத்தும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

உலகத் தலைவர்களும் முக்கிய நாடுகளும் பசுமையான வாழ்க்கை முறையை வழிநடத்துவதாக வாக்குறுதிகளை மட்டுமே அளித்துள்ளன, ஆனால் இன்னும் அதை வழங்கவில்லை என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

அமெரிக்கா, சீனா, ஐரோப்பிய யூனியன் போன்ற நாடுகள் பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதாக உறுதியளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.

இந்த நாடுகள் தங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றால், இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் மனித இனம் அழியும் தருவாயில் இருக்கும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

சாதனை நாயகர் பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து  வருகின்றனர்.

பஞ்சாங்கம் – ஜூன் 10 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட்முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்இந்திய அணி முதல்...

முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

அனைவரின் நன்மைக்காகவும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகவும் பாடுபடுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்களே என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே ஒட்டுமொத்த நாடும் செழிப்படைந்து முழுமையான வளர்ச்சியை நோக்கி முன்னேற வேண்டுமானால்  ஆட்சி நிர்வாகம் சனாதன தர்மத்தின் அடிப்படையில் வழிநடத்தப்பட வேண்டும்.

Topics

சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

சாதனை நாயகர் பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து  வருகின்றனர்.

பஞ்சாங்கம் – ஜூன் 10 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட்முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்இந்திய அணி முதல்...

முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

அனைவரின் நன்மைக்காகவும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகவும் பாடுபடுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்களே என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே ஒட்டுமொத்த நாடும் செழிப்படைந்து முழுமையான வளர்ச்சியை நோக்கி முன்னேற வேண்டுமானால்  ஆட்சி நிர்வாகம் சனாதன தர்மத்தின் அடிப்படையில் வழிநடத்தப்பட வேண்டும்.

பஞ்சாங்கம் ஜூன் 8 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

அண்ணாமலையால் இளைய தலைமுறையினர் பலர் ஈர்க்கப்பட்டார்கள் என்பது உண்மை, ஆனால் பல தலைமுறைகளாக சித்தாந்தத்தால் பெரு வளர்ச்சி கண்ட கட்சி பாரதீய ஜனதா என்பதை மறந்துவிடக் கூடாது.

வெல்டன் அமித்ஷா… வாழ்த்துகள் அண்ணாமலை!

மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி என்ற இந்திய தேசியத்தின் அடிப்படை. பாரதிய ஜனதா கட்சியில் அதை நடைமுறைப்படுத்துவதில் எழுந்த சிக்கலுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு இது.

Entertainment News

Popular Categories