4 வயது சிறுவன் ‘இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ புத்தகத்தில் இடம் பெற்று சாதனை!

sukrith
sukrith

ராணிப்பேட்டையைச் சேர்ந்த சுக்ரித் என்ற 4 வயது சிறுவன் அறிவுப்பூர்வமான கேள்விகளுக்கு வேகமாக பதில் அளித்து ‘இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ புத்தகத்தில் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இந்திய மாநிலங்கள், மாதங்கள், நிறங்கள், பழங்கள், விலங்குகள், உலகத் தலைவர்கள், பிரதமர், குடியரசுத் தலைவர் என்பன உள்ளிட்ட பொது அறிவு கேள்விகளுக்கு அதிவேகமாக பதில் அளிக்கும் திறமையைப் பெற்றுள்ளார்.

ராணிப்பேட்டை அடுத்த பாரத மிகுமின் (பெல் டவுன்ஷிப்) ஊரகக் குடியிருப்புப் பகுதியில் வசித்து வரும் தேவேந்திரன் – நிஷாந்தி தம்பதியின் மகன் சுக்ரீத் (4). தன்னுடைய அக்காவிற்கு, அம்மா பாடம் கற்பிக்கும்போது அதனை கூர்ந்து கவனித்து வந்துள்ளார்.

இந்தச் சூழலில் நிஷாந்தி தன் மகளிடம் கேட்கும் கேள்விகளுக்கு சுக்ரீத் தாமாக முன் உடனடியாக வந்து பதில் அளித்துள்ளார்.

இதனைக் கண்டு ஆச்சரியப்பட்ட பெற்றோர்கள், அவரது திறமையை ஊக்குவித்து பயிற்சி அளித்துள்ளனர். இதனால் தற்போது 4 வயது சிறுவனான சுக்ரீத், இந்திய மாநிலங்களின் பெயர்கள், மாதங்கள், நிறங்கள், விலங்குகள், பிரதமர், குடியரசுத் தலைவர் என்பது உள்ளிட்ட பொது அறிவுக் கேள்விகளுக்கு கேள்வியை முடிக்கும் முன், நொடியில் பதிலளித்து அசத்துகிறார் சுக்ரீத்.

ALSO READ:  ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இந்தச் சிறுவனின் அசாத்திய நினைவாற்றலையும், அதிவேகத்தில் பதில் அளிக்கும் திறமையையும் அங்கீகரிக்கும் வகையில் இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் பதிவு செய்து சான்றிதழ் அளித்துள்ளது.

இந்த சாதனைச் சிறுவனை நேரில் வரவழைத்து மாவட்ட ஆட்சியர் ஏ.ஆர்.கிளாட்சன் புஷ்பராஜ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சிறுவனின் பெற்றோர்கள் கூறுகையில், என் மகளுக்கு பாடங்களைக் கற்பிக்கும்போது, மகன் சுக்ரீத் ஆர்வத்துடன் கற்றுக்கொண்டு பதில் அளிப்பதைப் பார்த்து, ஊக்குவித்ததன் காரணமாக சுக்ரீத் சாதனை படைத்துள்ளான்.

தொடர்ந்து உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற சுக்ரீத் விரைவில் லண்டனில் நடைபெறும் போட்டியில் பங்கேற்கத் தயாராகி வருவதாகவும் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories