கொரோனாவை கட்டுப்படுத்தும் சூயிங்கம்! ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு!

Chewing gum - 2026

COVID 19 என அழைக்கப்படும் இந்த உயிர்கொல்லி வைரஸானது இன்று பல்வேறு பரிணாமங்களை அடைந்துள்ளது.

இந்த வைரசால் கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகின் பெரும்பாலான நாடுகளில் இயல்பு வாழ்க்கை மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது

மக்கள் இன்னும் அந்த மாதிப்பிலிருந்து மீளவில்லை என்றாலும் சமீப காலமாக கொரோனா தொற்றின் பரவல் சற்று ஓய்ந்திருந்தது. இந்நிலையில் , மீண்டும் 23 நாடுகளில் அதன் புதிய பரிணாமமான ஒமிக்ரான் என்னும் வேரியண்டின் தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதுவரை கண்டறியப்பட்டுள்ள உருமாறிய வைரஸ்களான ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா வைரஸ்களை விட இந்த புதிய உருமாறிய வைரஸ், அதிபயங்கரமானது, 50 முறை உருமாற்றம் கொண்டுள்ளது என மருத்துவ விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

ஓமைக்ரானின் தீவிரம் குறித்து இனி வரும் நாட்களில் நமக்கு தெரிய வரும் . இந்த நிலையில் பென்சில்வேனியா பல்கலைகழக ஆராய்ச்சியாளர்கள் சுவிங்கம் மூலம் கொரோனாவை கட்டுப்படுத்தலாம் என கூறி சில ஆராய்ச்சி முடிவுகளை வெளியிட்டுள்ளனர்.

இதற்காக பிரத்யேக சுவிங்கம் ஒன்றை அவர்கள் உருவாக்கியுள்ளனர். தாவரத்திலிருந்து பெறப்பட்ட ACE2 புரதங்களைக் கொண்டு இவ்வகை சுவிங்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

Chewing gum 1 - 2026

ACE2 புரத மூலக்கூறுகளை சேதப்படுத்தாமல் பல ஆண்டுகளாக சாதாரண வெப்பநிலையில் சேமிக்க முடியுமாம். அதன் மூலம் உருவாக்கப்பட்ட சுவிங்கத்தை சுவைப்பதன் மூலம் பரவும் திறன் கொண்ட வைரஸ்கள் சுவிங்கம் மற்று ஈறுகளிலேயே தங்கிவிடுவதால் இருமல் மற்றும் பேசுவதன் மூலம் வைரஸ் பரவுவது தடுக்கப்படும் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர் .

சோதனையின் போது கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளின் உமிழ் நீரில் இருந்து பெறப்பட்ட வைரஸுடன் தாங்கள் கண்டறிந்த சுவிங்கத்தினை கலந்துள்ளனர்.

ஆய்வின் முடிவில் சுவிங்கம் வைரஸ்களை இறுக பற்றிக்கொள்வது கண்டறியப்பட்டுள்ளது. சாதாரண சுவிங்கத்தை வைத்து இதே போல சோதனை செய்த பொழுது மாற்றங்கள் எதுவும் நிகழவில்லை என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

கிட்டத்தட்ட 50 மில்லிகிராம் சுவிங்கத்தின் மூலம் 95% கொரோனா பரவலை தடுக்க முடியும் என்பதுதான் ஆராய்ச்சியார்களின் கருத்து. சுவிங்கம் இன்னும் ஆரம்ப-நிலை ஆராய்ச்சியில்தான் உள்ளது .

இதனை மனிதர்களிடம் இன்னும் சோதிக்கவில்லை. மெல்லும் வகையில் உருவாக்கபப்ட்ட இயந்திரத்தின் உதவி கொண்டு இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டுள்ளது. தற்போது இது அடுத்தடுத்த சோதனைக்கு தயாராகி வருகிறது.

இவ்வகை சுவிங்கம் பயன்பாட்டிற்கு வந்தால் , அது தடுப்பூசி தட்டுப்பாடு மற்றும் தடுப்பூசி கிடைக்கப்பெறதா நாடுகளுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்பதுதான் பென்சில்வேனியா பல்கலைகழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கும் கருத்து.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories